கண்ணப்பநாயனார்


வேடுவனவனும் வனத்தின் நடுவேயருகனை கண்டனன்,
நாடியமனதால் தன்னிலைமறந் தயர்ந்தே நின்றனன்,
சூட்டினன்காட்டு மலர்களைக்கொய்து வாய்நீரா லிறையைக்கழுவி,
காட்டுவிலங்கின் மாமிசமதனைத் திருவமுதாய் படைத்தனன்!

நாளும்பொழுதும் தன்னையே மறந்திறையை துதித்தனன்,
இறையினடியில் இறைச்சியைக் கண்டேவேதியன் கலங்கினன்,
வேடுவன்செயலை வேதியன் தினமும்கண்டே தவித்தனன்,
பாதகம்புரிபவன் யாரென்றறிந்திட புழுவாய் துடித்தனன்!

வேதியர்கனவி லருள்முனிவரைப் போலேயிறையைக் கண்டனர்,
மின்திகழுஞ் சடைமவுலி எழுந்தருள் செய்தனர்,
வேடுவனென்று வேற்றவனை நீநினைந்து வருந்துவையோ,
நன்றனவன் செயல்தனை நானுரைப்பக் கேள்என்று!

திண்ணனவன் நெஞ்செலாம் நம்பக்கல் அன்பென்றும்,
திருமனதில் எனையிருத்தி எமையறியும் அறிவென்றும்,
நின்னுமவன் செயலெலாம் எமக்கினிய வாமென்றும்,
அவன்நிலை இதுவென அறிநீயென் றருளுரைத்தார்!

பொழுதும்புலர்ந்திட வேதியர்மரத் தின்மறைவி லொதுங்கிட,
வேடுவன்வந்தே வாய்நீரூற்றி நறுமலர் சொறிந்தே,
இறைச்சியை படைத்தே எடுத்திட வேண்டினன்,
மரத்தின்பின்னே வேதியரஞ்சியே வியந்தே கண்டனன்!

இறையின் ஒருவிழி செந்நீர்வடிய வேடுவனுடனே,
பச்சிலையூற்றி குருதியை நிறுத்திட முயன்றிட,
தொடர்ந்தே வழிந்திடும் செந்நீர்கண்டே யஞ்சிட,
தன்விழியதனை யம்பில்பெயர்த்து சிலையில் பதித்தனன்!

செந்நீர் நிற்கவே வேடுவன் மலர்ந்தனன்,
சிலையின் மறுவிழி குருதியை சொரிந்திட,
வேடுவனுடனே பதறியும் அரண்டே அலறினன்,
குருதியை தடுக்கவே மார்க்கம் தேடினன்!

ஒருகால் தூக்கியிறையின் விழியில் பதித்தே,
மறுவிழியதனை யம்பால் பெயர்த்திட துணிந்தனன்,
அந்நொடி யிறையின் அசரீரி யொலிக்க,
தடுத்திடவேண்டி கண்ணப்பாவென்றே அருகனும் அழைத்தனர்!

இறையினருளால் இருவிழி மலர்களும் கிடைத்திட,
அன்பின் மிகுதியால் கண்ணப்பர் பணிந்திட,
கண்ணப்ப நாயனாரென்றே இறையும் அழைத்திட,
வேடுவர் உயர்ந்தார் நாயன்மார் வரிசையில்!

#கவின்மொழிவர்மன்


#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம் 

#106/2018/SIGARAMCO 
2018/06/23 
கண்ணப்பநாயனார் 
https://www.sigaram.co/preview.php?n_id=332&code=P0jf6YCD 
பதிவர் : கவின்மொழிவர்மன் 

#பெரியபுராணம்_சேக்கிழார் #கவின்மொழிவர்மன் #கண்ணப்பநாயனார் #கவிதை #தமிழ் #பக்தி #Kavinmozhivarman #Tamil #poem #Thamizh #KannappaNaayanaar #SIGARAMCO #சிகரம் 

Comments

  1. கண்ணப்ப நாயனார் கதை கவிதை வடிவில்..... ரசித்தேன் நண்பரே. கவிஞருக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!