Posts

Showing posts from April, 2014

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

Image
வணக்கம் வாசகர்களே! வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்? என்ன கேள்வி இது? இது கேள்வியல்ல. நான் அண்மையில் வாசித்து ரசித்த காதல் கவிதைகள் அடங்கிய நூலொன்றின் தலைப்பு. தபூ சங்கர் என்பவர் எழுதி 2008 இல் வெளியான நூல் இது. நூலுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்பைத் தவிர உள்ளே அடங்கியிருக்கும் எந்தவொரு கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை. எல்லாக் கவிதைகளுமே உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் போலவே அமைந்திருப்பது நம்மை ரசிக்க வைக்கிறது. தனது நூலை தபூ சங்கர் இப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். இது வெறும்  புத்தகமல்ல. இதைத்  தொடுபவன்  காதலனாகிறான்  தொடுபவள்  காதலியாகிறாள். அறிமுகமே நம்மை ஈர்த்து நூலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது. இந்த வரிகளைத் தவிர தபூ சங்கர் தனியானதொரு முன்னுரையை நூலுக்கு வழங்கவில்லை. ஆயினும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமார்  போன்றோரின் நூல் மதிப்புரைகள் காணப்படுகின்றன.   இந்நூலானது இரண்டு பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி காதலன் தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும், இரண்டாம் பகுதி காதலி தன் காதலைப் பற்றி கவிதை கூறுவது போலவும் அமைந்தி

#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

Image
                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.                 சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.                             கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனிதர்களை சந்திக்க நேரிடுகிறது. வேலைச் சுமை, சம்பளம் போதவில்லை, படிக்க நேரமில்லை, நல்ல வீடு இல்லை, உறவினர் தொல்லை , புரியாத மொழியினருடன் வேலை, தொழில் மாற்றம், பிறப்பு, இறப்பு என நம்மைச் சுற்றிச் சுழலும் பிரச்சினைகளின் பட்டியலுக்கு முடிவே இல்லை. இத்தனைக்கும் மத்த

கந்தசாமியும் சுந்தரமும் - 02

Image
"கந்தசாமி அண்ணே.. கந்தசாமி அண்ணே..." என்று தன்னை அழைக்கும் குரல் கேட்க தொலைக்காட்சியிலிருந்து தன் கவனத்தை வாசலை நோக்கி திருப்பினார் கந்தசாமி. வேறு யார்? நம்ம சுந்தரம் தான். "வாப்பா சுந்தரம், உட்கார்." "டிவி ல சித்திரைக் கொண்டாட்டம் இன்னும் முடியலையோ?" - ஆசனத்தில் அமர்ந்தபடியே கேட்டார் சுந்தரம். "அதில்லப்பா.. இந்திய நாடாளுமன்ற தேர்தல் கூத்துக்களைத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்." "அதுவா? இந்த உள்ளூர் அலைவரிசைகள் போதாதுன்னு போன வாரம் நம்ம பிள்ளைங்க Sun Direct ஆன்டனாவை வாங்கிப் போட்டாங்க. போட்டு என்ன பிரயோசனம்? எல்லாம் தேர்தல் மயமா இருக்கு." "உண்மை தான். நல்ல நல்ல நிகழ்ச்சிகள் போய்க்கிட்டிருந்த நேரத்துல எல்லாம் இந்த பொல்லாத தேர்தல் கூத்துகள் தான் போகுது சுந்தரம்." "அது சரிண்ணே... 2014 ஆம் ஆண்டுக்கான இந்திய நாடாளுமன்ற தேர்தல்ல யார் வெற்றி பெறுவாங்கன்னு நினைக்கிறீங்க?" "யாரப்பா சொல்றது? மக்கள் அறிவு பூர்வமா மட்டும் வாக்களிக்கறவங்களா இருந்தா உறுதியா சொல்லலாம். ஆனா நிலைமை அப்படி இல்லையே....?" &qu