Posts

Showing posts from April, 2021

எழுத்தாளர் சிகரம் பாரதி...!

Image
வணக்கம் தோழர்களே. நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த காலப்பகுதியில் நானும் சரி, வலைத்தளமும் சரி, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.  அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, என்னை அடையாளப்படுத்துவதற்கான தேவையாக, 'எழுத்தாளர் சிகரம் பாரதி' வலைத்தளத்தை நான் உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன்.  நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முகவரியில் இயங்குவது தான் பிரதான வலைத்தளம். இது தவிர்ந்த எத்தனையோ உப வலைத்தளங்களை உருவாக்கியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை.  அதே போல, புதியதொரு நோக்கத்திற்காக இந்த வலைத்தளத்தையும் நான் உருவாக்கியிருக்கிறேன்.  எனது படைப்புகள் மற்றும் எண்ணங்கள், கருத்துக்கள் என எல்லாவற்றையும் நீங்கள் தற்போது காணும் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறேன். ஆனால் இவை எதுவும் அற்ற எனது படைப்புகளுக்கு மட்டுமான தனியானதொரு களம் தேவை என நான் உணர்ந்தேன்.  அதன் விளைவாகவே 'எழுத்தாளர் சிகரம் பாரதி' எனும் இந்த புதிய வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறேன்.  இங்கு எனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும்

சம்பவம் நடந்தது

Image
 ஆம்  சம்பவம் நடந்தது...  சம்பவத்தை சுற்றி  கோடுகளும்  பாதுகாப்பு வலயமும்  அதனை பாதுகாக்க  சிலரும்...  'என்ன நடந்தது?'  'சம்பவம்'  'எப்போது?'  '7 மணிக்கு'  'இரவா, பகலா? யார் யாரோடு  யாருக்காக ஏன் எதற்கு?'  கேள்விக் கணைகள் சுற்றியிருந்தவர்களை  துளைத்தன.  Image copyrights reserved to respective owners only காவல்துறையின் கேள்விகளை  நீதிமன்றங்களும்  மீண்டும் மீண்டும்  கேட்டன.  வருடங்கள் ஓடின,  சாட்சியாளர்களின்  எண்ணிக்கை குறைந்தது.  இறுதியாக  நீதிபதி என்னைக்  கேட்டார்  'என்ன நடந்தது?'  'ஒன்னுமில்லீங்க?'  'நீதிமன்றத்தின்  பொன்னான நேரத்தை  வீணாக்கி விட்டீர்கள்,  இரண்டாயிரத்து ஐநூறு  அபராதம்!  நீதி கிடைத்தது  ஆனாலும்  சம்பவமும் நடந்தது, நீதியும் கிடைத்தது  சம்பவம் நடந்தது  யாருக்கோ,  நீதி கிடைத்தது யாருக்கோ. ஆம்!  சம்பவம் நடந்தது!

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்னுரையில் ஓரளவு தே

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

Image
வான வல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர்.  ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.  பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி.  https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html   வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை.  அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன்.  அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி.  அத்துடன் வானவல்லி வலைத்தளத்தில் வந்த போது, ராமர் பாலம் கட்ட

இந்த நாள் நல்ல நாள் -01

Image
இன்றைய குறள்:  நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்   யாநலத் துள்ளதூஉம் அன்று (குறள் -641) சாலமன் பாப்பையா உரை: நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.  Image copy rights to respective owners only இன்றைய பொன்மொழி:  அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது -நபிகள் நாயகம்  இன்றைய வாசிப்பு:  பத்தி எழுத்து என்றால் என்ன?  இணைப்பு : https://newsigaram.blogspot.com/2019/05/paththi-eluththu-endraal-enna-what-is-column-writing.html இன்றைய குறும்படம் : கால் நூற்றாண்டுக் காதல்  இணைப்பு : https://youtu.be/2bkgljJrX6Q   (எதிர்வரும் நாட்களில் இன்னும் சில விடயங்களுடன் சந்திப்போம்)

தப்பிப் பிழைத்த சரித்திரங்கள்

Image
வான நதியில் நீந்தி வருகிறது  காலம் எனும் பெரு மீன்  நீ சிறியவன் தானே என  மனிதனெனும் பூனையைப்  பழிக்கிறது அது காலத்தை விழுங்கி விடத்  துடிக்கும் மனிதன் மனிதனை வென்றுவிட்ட  பெருமிதத்தில் காலம்  மனிதன் வேறு காலம் வேறா?  இல்லை, இரண்டும் ஒன்றா?  பூனையின் இரை மீன் மீனின் தவம் தப்பிப் பிழைத்தல்  பேரழிவுகளில் இருந்து  தப்பிப் பிழைத்தவை தானே  இன்றைய சரித்திரங்கள்?

தெரியாமலேயே ஒரு காதல்

Image
Image rights reserved to respective owners only இப்போதும்  உன்னைக் காதலிக்க  எனக்கு உரிமையிருக்கிறதா  என்று  தெரியவில்லை  ஆனாலும்  காதலிக்கிறேன்  உன்னைக்  காதலிக்கிறேனா  என்று கூட  தெரியாமலேயே... 

வாழ வேண்டும்!

Image
(Image credit to respective owners only) நீ அதுவாக இரு இதுவாக இரு  என்று  சொல்லிக்கொடுத்த சமூகமே...  ஏன் என்னை  நீ  நீயாக இரு  என்று  சொல்லிக்கொடுக்கவில்லை?  நிரந்தர வேலை  கண்ணில் கண்ட  அனைத்தையும்  வாங்க தேவையான சம்பளம்  சிகப்பான மனைவி  வெள்ளையான பிள்ளை  இரண்டு கார்  மூன்று பங்களா இது தானா  நீ  சொல்லும் வாழ்க்கை?  ஏன்  ஓலைக் குடிசையில்  வாழ்பவன் மனிதனில்லையா?  இலட்சியத்துக்காக  போராடுநவன்  சமூக எதிரியா?  கறுப்பான பெண்ணை  காதலித்தால்  ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?  நீங்கள்  சொன்னபடியெல்லாம்  ஓடி ஓடி  எனக்கான வாழ்க்கையை  இழந்துவிட்டேன் போதும்  உங்கள் பேச்சைக்  கேட்டது போதும்  உங்களை  கண்மூடித்தனமாக  நம்பியது போதும்  இனி  வாழ வேண்டும் நான்  நானாக... எனக்காக...