Posts

Showing posts with the label உள்ளம் பெருங்கோயில்

உலகில் கோபமும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளன - புதிய ஆய்வில் தகவல்

Image
ஒரு புதிய உலகளாவிய ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக கோபம், மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Gallup என்னும் நிறுவனம் உலகின் 140 நாடுகளில் உள்ள 151,000 பேரிடம் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.  ஆய்வில் பங்கு கொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாம் மனா அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஐந்து பேரில் ஒருவர் சோகம் அல்லது கோபமாக உணர்கின்றனர்.  Gallup 2019 Global Emotions Report மூலம் மக்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்கள் குறித்து  Gallup நிறுவனத்தினர்   கேட்டறிந்துள்ளனர்.  Image Credit : gallup.com ஆய்வில் பங்கேற்ற மக்களின் ஆய்வு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளின் அனுபவங்கள் குறித்து  Gallup நிறுவனத்தினர்  கவனம் செலுத்தியிருந்தனர்.  71% பேர் முந்தைய நாளில்குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.  மன அழுத்தம், கவலை மற்றும் சோகம் ஆகியன முன்பை விட அதிகரித்துள்ளதாக ஆய்வ...

எண்ணங்கள் என்ன விலை?

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே! ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்கள். அந்த எண்ணங்கள் அனைத்திற்கும் ஒரு பெறுமதி உண்டு. அந்தப் பெறுமதியைத் தீர்மானிப்பவை இடமும் காலமும் தான். வலைத்தளங்களில் பலரும் தங்கள் பெறுமதியான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வலைத்தளம் கூட என் எண்ணத்தால் உருவானதுதான். மனிதனின் எண்ணங்கள் தான் ஆதிகால உலகத்தை நவீன மயப்படுத்தியது. எண்ணங்கள் கட்டுப்பாடற்றவை, எல்லையற்றவை. உறங்கும் போது கூட மனிதன் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறான். எண்ணங்கள்! இந்த உலகின் சக்தியே எண்ணங்கள் தான். கல்வி, வாழ்க்கை, அறிவியல் மற்றும் விவசாயம் என அனைத்திலும் மனிதனின் எண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்றார் சுவாமி விவேகானந்தர். நமது எண்ணங்களே நமது வாழ்க்கையை வடிவமைக்கின்றன. நல்ல எண்ணங்கள் நல்ல பலன்களையும் தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தரும்.  இன்றைய நவீன உலகத்தை மனிதனின் எண்ணங்களே வடிவமைத்துள்ளன. விலைமதிப்பில்லாத மனித எண்ணங்களுக்கும் இவ்வுலகில் ஒரு பெறுமதியை பணம் நிர்ணயித்துவிடுகிறது. இத்தனை பெறுமதி வாய்ந்த எண்ணங்க...

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்!

Image
  * இந்த யுகத்தில் ஒளிபெற்ற பல விஷயங்களில், ஆத்மாவைப் பற்றிய உண்மை இது தான்: மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா; அவனது எண்ணங்களின் தலைவன். * சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.   * ஆத்மா எதை ரகசியமாக அவாவுகிறதோ , அதை ஈர்க்கிறது. எதைக் காதலிக்கிறதோ அதைக் கவர்கிறது ; எதைக் கண்டு பயப்படுகிறதோ அதை அடைகிறது. உள்மன நிலைக்கேற்ப வெளி உலக சூழ்நிலை உருவாகிறது. சொன்னது யார்? விரைவில்.........

#100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays

Image
                        உங்களால் 100 நாட்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா? முடியாது என்பதே உங்கள் பதிலாக இருக்கலாம். காரணம் நாம் வாழும் இயந்திர மயமான வாழ்க்கை. ஆனாலும் முடியும் என்கிறார்கள். இதனை ஒரு சவாலாகவே நம் முன் வைக்கிறார்கள். தொடர்ச்சியாக உங்களால் 100 நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமெனின், இந்த சவாலுக்கு நீங்கள் தயாரெனின் உடனே 100happydays இணையத் தளத்துக்கு சென்று சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.                 சரி. சவால் என்பதையெல்லாம் தாண்டி 100 மகிழ்ச்சியான நாட்கள் பற்றி நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்.                             கல்வி, வேலை, குடும்பம், சமூகம் என ஒவ்வொருவரைச் சுற்றியும் ஆயிரத்தெட்டு பொறுப்புக்கள். காலை கண்விழித்தது முதல் இரவு கண்ணுறங்கப் போகும் வேளை வரை தினமும் வித்தியாசமான மனி...

இன்னும் சொல்வேன் - 01

Image
மனம். இயற்கையின் படைப்பில் அற்புதமானதொரு சிருஷ்டிப்பு. ஏனெனில் அதன் போக்கை நம்மாலேயே புரிந்து கொள்ள முடிவதில்லை. சந்தோஷமோ, துக்கமோ எதுவாயிருந்தாலும் அதனை மனதுக்குள்ளேயே வைத்தால் அதற்குப் பெயர் குப்பை தான். நமது சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள போதிய நண்பர் வட்டமோ அல்லது அதற்கு ஒப்பான யாரோ இருந்தால் எந்த விதக் குப்பையுமே சேர வாய்ப்பில்லை. ஆனால் எதற்கும் வரையறை இருக்கிறதே? ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை அல்லது பாசத்தை வைக்காதவரை இந்த வரையறை நம்மை எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக, பாசம் என்பது நம்மை, நமது உணர்வுகளை வரையறைக்குட்படுத்துகிறது.  அதாவது, ஒருவர் மீது உண்மையான பாசம் கொண்டிருந்தால் அவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பப் படுவதை நாம் விரும்பமாட்டோம். அந்த வேளையில் உங்களுக்கு ஏற்படும் ஒரு துன்பத்தை உடனே சொல்வீர்களா, அல்லது உங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்வீர்களா? இங்கே தான் அன்பின் வரையறை ஆரம்பமாகிறது. நாம் நம்மவரின் நலன் கருதி நமது துன்பங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளாது போனாலும் கூட, நமது நலன் பாதிக்கப் படுகிறதே? இப்போது நாம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது உங்களுக்கெல்ல...

அவசர உலகம்

Image
 இன்றைய உலகத்தினை நாம் 'அவசர உலகம்' என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன அவசர உலகம்? நமது எந்தவொரு வேலையையுமே பொறுமையாக, முழுமையாக செய்து முடிக்க போதுமான நேரம் நமக்குக் கிடைப்பதில்லை. ஏன் இந்த நிலை?   சதா சர்வ நேரமும் எல்லோருமே 'வேலை வேலை' என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு சுவாசிப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அதையும் ஒரு 'சம்பளமற்ற வேலை'யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் கடமைக்காக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.                 இப்படி ஒரு வேலையை நாம் செய்துதான் ஆகவேண்டுமா? 'அப்போ  நீயா சோறு போடுவ?' என்று சிலர் கேட்கலாம். எல்லோருமே மூன்று வேலை முழுமையாக உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உழைக்கின்றனர். ஆனால் அந்த நோக்கத்தை உழைப்பவர்களால் சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.  ஆனால் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் அடைவதற்காகத் தான் 'உழைப்பு' என்கிற இந்தப் போராட்டமே. இதில் ஜெயித்தவர்கள் எத்தனை பேர்? "...........................