‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018
‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பார்கள். ஆம், மனித சமூகத்தின் வளர்ச்சியில் வாசிப்புக்குப் பெரும் பங்குண்டு. ஒரு நல்ல புத்தகம் ஒவ்வொரு வாசகனையும் வேறோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பு அருகிவரும் சூழலில் சங்க இலக்கியம் மீதான ஆர்வமும் அறிவும் குறைந்து வருவது வருந்தத்தக்கது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல புரிந்துகொண்டால் சங்க இலக்கியமும் கடினமானதாக இருக்காது. சங்க இலக்கியம் நமது மரபு, நமது சொத்து, நமது அடையாளம். ஆகவே தமிழார்வமுள்ள அனைவரும் சங்க இலக்கியங்களையும் அறிந்திருப்பது தேவையாகும். ஆகவே சங்க இலக்கியங்களை அனைவரும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் படிக்க வைக்கும் ஓர் முயற்சியாக வென்வேல் சென்னி வாசகர் வட்டத்தின் சார்பாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் போட்டியில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். ‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ - சிறுகதைப் போட்டி – 2018 முடிவுத் திகதி : 10.07.2018 அனுப்ப வேண்டிய முகவரி : tamilvetrivel@gmail.c...