Posts

Showing posts from April, 2017

சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

என் இனிய நண்பர்கள், அன்பர்கள், வாசகர்கள் மற்றும் சக தமிழர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். தமிழர்களின் புத்தாண்டு எது? இந்தக் கேள்விக்கான தீர்க்கமான விடை இன்னும் யாரிடமும் இல்லை. ஆளும் அரசுகளும் தத்தமது கொள்கைகளுக்கேற்ப ஒவ்வொரு நாளை பின்பற்றி வருகின்றன.  தை யா? சித்திரை யா? தமிழர் புத்தாண்டு எது? நம் தமிழறிஞர்கள் பலர் பலமுறை ஆராய்ந்து தைத்திருநாளே தமிழர் புத்தாண்டு என அறிவித்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் மத்தியில் குழப்பம் நீடித்த வண்ணமே உள்ளது. சித்திரைத் திருநாள் தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்றாகவும் மாறிப்போய் இருக்கிறது. தை தான் நமக்கு முதல் மாதம். தமிழில் மாதங்களை சொல்லும் போது தையில் இருந்து தான் ஆரம்பிக்கிறோம். வருடம் முதல் மாதத்தில் இருந்து ஆரம்பிப்பது தானே முறை? சித்திரையில் நிகழ்வது இராசி மாற்றம். அதாவது சனிப்பெயர்ச்சி போன்ற ஒன்று மட்டுமே. தமிழரின் அடையாளம் விவசாயம். விவசாயிகளின் திருநாளும் தை தான். மேலும் சித்திரை இடைநடுவில் வரும் மாதம். வருடப்ப்பிறப்பு வருடத்தின் நடுப்பகுதியில் நிகழ்வது சாத்தியம் தானா? ஆகவே தைத்திருநாளே தமிழரின

வாசிப்பை நேசிப்போம்

இக்கட்டுரை இலங்கையின் தேசிய நாளேடான ‘வீரகேசரி’ இல் 24.02.2008 அன்று கதிர் பகுதியின் 04 ஆம் பக்கத்தில் வெளியானது. ‘சிகரம் பாரதி’ என்னும் புனை பெயரில் வெளியானது. வாசிப்பை நேசிப்போம் வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். அதிலும் பத்திரிகை வாசித்தல் மனிதனை பல்துறை சார்ந்த அறிவு கொண்டவனாக மாற்றும். இலக்கியம், அரசியல், விளையாட்டு என பல செய்தி வகைகள் பத்திரிகையில் உள்ளன. அத்துடன் நம்முடைய திறமைகளை வெளியிட ஆக்கங்களையும் பிரசுரித்து ஊக்கம் தருகிறது. மேலும் கேள்வி கேட்கும் சுதந்திரம் பத்திரிகைகளிலேயே அதிகம் கிடைக்கிறது. நூல்கள் எமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைரத்திலும் உயர்வானவை. புத்தகங்களும் அது போன்றவையே. ‘உனக்கு வரம் வர யாரோ இருந்த தவமல்லவா புத்தகம்’ என்கிறார் வைரமுத்து. மேலும் ‘ஒரு நல்ல புத்தகம் திறந்துகொண்டால் நரகத்தின் வாசல் மூடப்படும். ஒவ்வொரு பக்கம் நகரும் போதும் நீ எதிர்காலத்துள் காலடி வைக்கிறாய் – ஒரு புத்தகம் முடிகிறது மனசின் மர்மப் பிரதேசம் விடிகிறது’ என்றும் கூறியிருக்கிறார் வைரமுத்து. வாசிப்பதற்கும் மலையக மக்களின் முன்