Posts

Showing posts from June, 2012

வாங்கையா வாங்க!

Image
அண்மையில் எனது Google plus தளத்தில் எனக்கு ரசிக்கக் கிடைத்த 5 புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தப் பதிவின் நோக்கம். அனைத்து புகைப்படங்களுமே இயற்கை சார்ந்தவை. ஏதோ ஒரு வகையில் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என நம்புகிறேன்.  மேலும் இப் பதிவின் மூலம் வாசகர்களுடன் சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அழகிய புகைப் படங்களை ரசித்த படியே இவற்றையும் இடைக்கிடை வாசித்துக் கொள்ளுங்கள். நான் இந்த 'சிகரம்' வலைப் பதிவை பல கனவுகளுடன் தொடர்ந்து நடத்தி வருகிறேன். ஆயினும் மனதில் ஒரு சின்ன குறை. நான் வலைப் பதிவை ஆரம்பித்து முதலாவது பதிவை வெளியிட்ட ஓரிரு நிமிடங்களில் வாசகர் ஒருவர் தனது கருத்தினை (Comment) 'சிகரம்' வலைத்தளத்தில் பதிவு செய்தார்.  அது எனக்கு மனதில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் தொடர்ந்து வந்த பதிவுகளுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கருத்துரைகள் பதிவு செய்யப் படுவது அரிதாகவே நடை பெற்றது.  எனது பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாகுகளை வழங்குவதுடன் உங்களை கவர்ந்த பகுதியையும் மறக்காமல் கோடிட்டுக் காட்டிவிட்

குடிச்சுப் பாருங்க!

Image
ஒரு தொண்டு நிறுவனம் தொடர் மதுவிலக்கு பிரசாரம் செய்ய முடிவு செய்தது. மதுப் பிரியர்கள் அதிகம் உள்ள பகுதி அது. கூட்டம் ஆரம்பித்தது. "அன்பானவர்களே... இந்தக் குடிப் பழக்கம் இருக்கிறதே... அதை விட மோசமானது வேறு ஒன்றும் இல்லை... குடி குடியைக் கெடுக்கும்..." அவ்வளவு தான். கூட்டத்தில் சலசலப்பு. "யோவ் உக்கார்றியா? மண்டைல போடவா?" என்று ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் பேசியவர் தொங்கிய முகத்துடன் இருக்கையில் அமர்ந்தார். அடுத்தவர் வந்தார். மைக்குக்கு முன்னால் இருந்த சோடா பாட்டிலைப் ( Bottle) பார்த்தார். "இதை யாரு இங்க வச்சது? யாராவது ஒரு குவாட்டர் பாட்டில்  ( Bottle) இருந்தா எடுத்து வந்து வைங்களேன்..." கூட்டம் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தது. "சின்ன வயசுல எங்கப்பா படி, படின்னு எவ்வளவோ சொல்லிப் பாத்தாரு. நான் கேக்கலையே, பத்தாவது பெயிலு... அதுனால என்ன குறைஞ்சா போயிட்டேன்?" "அப்படிப் போடு!" கூட்டத்தில் ஒரு குரல். "என்ன... வேலை கிடைக்கல. போயிட்டுப் போகுது. சொத்தையெல்லாம் வித்துக் குடிச்ச

சாத்தானின் தூதன் - டாக்டர் 7!

Image
                          உங்களில் எத்தனை பேருக்கு தமிழ் காமிக்ஸ் கதைகள் மீது தீராத காதல் இருக்கிறது? காமிக்ஸ் புத்தகங்களை எங்கே வாங்குவது என்று தெரியாமல் தடுமாறுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் இந்தப் பதிவை கட்டாயம் வாசித்துத் தான் ஆக வேண்டும். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.                     தமிழ் காமிக்ஸ் கதைகளைப் பொறுத்த வரை எனக்கு நன்கு பரிச்சயமானது 'முகமூடி வீரர் மாயாவி'யின் கதைகள் தான். அது எனக்கு மிகப் பிடித்தமானதும் கூட. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்று என் கரம் கிட்டியது. முதன் முதலில் தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை காசு கொடுத்து வாங்கிப் படித்திருக்கிறேன். ஆனால் இம்முறை நான் படித்தது 'முகமூடி வீரர் மாயாவி'யினுடையது அல்ல.                'ஏஜென்ட் காரிகன்' இன் சாகசக் கதை. பிரபல வலைப் பதிவர்களுள் ஒருவரான லோஷன் அண்ணா அண்மையில் தான் படித்த 'தலை வாங்கிக் குரங்கு' பற்றிய பதிவொன்றினை இட்டிருந்தார். அதைப் படித்ததும் தமிழ் காமிக்ஸ் கதைகள் மீதான எனது ஆர்வம் சற்றே தூண்டப் பட்டது. ஆனால் எங்கே எப்படி வாங்குவ

பாலியல் பகிடிவதைக்குள் சிக்கித் தவிக்கும் கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள்

Image
                         கொழும்புப் பல்கலைக் கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான பகிடி வதைகள் மேற்கொள்ளப் படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பகிடி வதைகளுக்கெதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தாலும் அவை இல்லாதொழிக்கப் படவில்லை. மாறாக, அவற்றை மறைமுகமாக மேற் கொள்ளப் பட்டு     வருகின்றன.                        கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் படி கொழும்புப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ள அநாமதேயக் கடிதமொன்றின் மூலமே இவ்விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்விடயம் குறித்த மேலதிகத் தகவல்கள் வருமாறு:                       மேற்படி பாலியல் பகிடி வதைகளுக்குள்ளாக்கப் படும் மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள இருட்டறை ஒன்றுக்கு வருமாறு பணிக்கப் படுகின்றனர். அந்த மாணவிகள் இருட்டறைக்குள் சென்று சிறிது நேரத்தின் பின்னர் ஆண் மாணவர் குழுவொன்று அவ்வறைக்குள் செல்லும். பின்னர் அந்த மாணவிகள் மாணவர்களுக்கு உடல் மசாஜ் செய்யும்படி உத்தரவு வழங்கப் படும். இச்செயலில் ஈடுபட்ட மாணவர்க

அவசர உலகம்

Image
 இன்றைய உலகத்தினை நாம் 'அவசர உலகம்' என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன அவசர உலகம்? நமது எந்தவொரு வேலையையுமே பொறுமையாக, முழுமையாக செய்து முடிக்க போதுமான நேரம் நமக்குக் கிடைப்பதில்லை. ஏன் இந்த நிலை?   சதா சர்வ நேரமும் எல்லோருமே 'வேலை வேலை' என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலருக்கு சுவாசிப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை. அதையும் ஒரு 'சம்பளமற்ற வேலை'யாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் கடமைக்காக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.                 இப்படி ஒரு வேலையை நாம் செய்துதான் ஆகவேண்டுமா? 'அப்போ  நீயா சோறு போடுவ?' என்று சிலர் கேட்கலாம். எல்லோருமே மூன்று வேலை முழுமையாக உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உழைக்கின்றனர். ஆனால் அந்த நோக்கத்தை உழைப்பவர்களால் சரிவர நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை.  ஆனால் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற மூன்றையும் அடைவதற்காகத் தான் 'உழைப்பு' என்கிற இந்தப் போராட்டமே. இதில் ஜெயித்தவர்கள் எத்தனை பேர்? ".................................". பல

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்

அரங்கு எண்: 04 'எழுத்து' சி.சு.செல்லப்பா அரங்கு (மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்) 03-06-2012 மு.ப 08:40-பி.ப 12:50 மணி  அரங்கு: சிற்றிதழ்   இணைத் தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, தா.கோபாலகிருஸ்ணன்  ஆய்வு மதிப்பீட்டாளர்: எஸ்.மோசேஸ், அன்பு மணி இணைப்பாளர்: அந்தனி ஜீவா  ஆய்வுக் கட்டுரைகள்: 1.   பெண்களும் சஞ்சிகைகளும் - ஒரு நோக்கு - செல்வி செகராச சிங்கம் ஜனதீபா (உளவியல் துறை விரிவுரையாளர்) 2.  இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள் - தி.ஞானசேகரன் ('ஞானம்' ஆசிரியர்) 3.  ஈழத்துத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் - ஓர் அவதானிப்பு - தம்பு சிவசுப்ரமணியம் ('கற்பகம்' ஆசிரியர்) 4.  கிழக்கிலங்கைச் சிற்றிதழ்களின் வகிபாகமும் அதன் இலக்கியப் பங்களிப்பும் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ('நீங்களும் எழுதலாம்' ஆசிரியர்) 5.  பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்களின் இயக்கம் - சு.முரளிதரன் (தலைவர், ஹட்டன் தமிழ்ச் சங்கம்) 6.  இணைய இதழ்கள் - பார்வையும் பதிவும் - லெனின் மதிவானம் (பிரதி ஆ

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (03) - ஆய்வரங்கு - கணினியும் தமிழும்.

அரங்கு எண்: 01 பேராசிரியர் ஆ.மயில்வாகனம் அரங்கு (மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்) 02-06-2012 பி.ப - 01:45: - 04:45 மணி. அரங்கு: கணினியும் தமிழும்  இணைத் தலைமை: ஞா.பாலச்சந்திரன் (கணினி விரிவுரையாளர்), டாக்டர் எம்.கே.முருகானந்தன்  ஆய்வு மதிப்பீட்டாளர்: மேமன் கவி  இணைப்பாளர்: ஆ.குக மூர்த்தி. ஆய்வுக் கட்டுரைகள்: 1.  தொலைக்கல்வியில் கணினியின் பங்கு - இலங்கை மீதான ஒரு கண்ணோட்டம் - ரதிராணி யோகேந்திர ராஜா (யாழ் பல்கலைக் கழகம்) 2.  தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ், சவால்களும் தீர்வுகளும் - ஒரு பார்வை - தங்கராஜா தவரூபன் (தலைமை நிறைவேற்று அலுவலர், இணையத்தள/ மென்பொருள் வடிவமைப்பாளர், யாழ் பல்கலைக் கழகம்) 3.  தமிழும் இணையமும் - பேராசிரியர் மு.இளங்கோவன் ( பாரதி தாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச் சேரி, தமிழ் நாடு. வலைத்தளம்:  http://muelangovan.blogspot.com/  ) 4.  "விழி மொழி" - தமிழ் சைகை மொழி கணினியாக்கம் - சிவஜோதி வஞ்சிக்குமரன் (மென்பொருள் பொறியியலாளர்) - பதிலியாக கட்டுரையை விழாவில் சமர்ப்பித்தவர் - ரமேஷ் குமரேசன். 5.  தமிழ் கணினி - செய்ய வேண்டியவை

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (02) - தொடக்க விழா

Image
                             உலகத் தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துவங்கியிருக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை பேராளர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. நான் எனக்கான பதிவை 10 மணிக்கே மேற்கொண்டேன். பேராளர்களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு தோல் பை ஒன்று வழங்கப்பட்டது. அதில் கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடான 'சங்கத் தமிழ்' இதழ் ஒன்றும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கான கோவை ஒன்றும் நிகழ்ச்சி நிரலும் க.ஜெயவாணி என்பவரின் 'இப்போது வந்த சொல் எப்போது வந்த கவிதை நீ?' என்னும் கவிதை நூலும் இட்டு வழங்கப்பட்டன. சரியாக 10 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமானது.  "தமிழ் இலக்கியமும் சமூகமும் : இன்றும் நாளையும்" என்ற தொனிப் பொருளில் மாநாடு இடம் பெற உள்ளது.                                 மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அருணந்தி ஆரூரன் அவர்களின் கணீர் குரலில் தமிழ் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தொடக்க விழா அரங்கிற்கு 'தமிழ்த் தூது தனி நாயகம் அடிகள் அரங்கு' எனப் பெயரிடப்பட்டிருந்தது. வரவேற்புரையினை தமிழ்ச் சங்க இலக்கியப் பணிக் குழுச் செயலாளர் டாக்ட

அகவை ஏழில் தடம் பதிக்கும் 'சிகரம்'

Image
2006  - ஜூன் முதலாம் திகதி. என் வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதமான ஒரு நாள். இன்று நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் 'சிகரம்' வலைத்தளம் உருவாகவும் அந்த நாள் தான் காரணம். 'அப்படி என்ன இருக்கிறது அந்த நாளில்?' - இப்போது இது தான் உங்கள் கேள்வியாக இருக்கும். சொல்கிறேன். 2006  இல் நான் க.பொ.த - சாதாரண தரத்தில் (தரம் -11) கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு ஊடகத் துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. எனவே ஒரு கையெழுத்துப் பத்திரிகையை தயாரித்து வெளியிட எண்ணினேன். அதன் படி 2006 ஜனவரி முதல் 'சரஸ்வதி' எனும் நாமத்தில் இலக்கிய சஞ்சிகை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டேன். ஆனால் அது அதிகளவான மாணவ வாசகர்களைச் சென்றடையவில்லை. எனவே எல்லோரையும் கவரும் வகையில் எனது கையெழுத்து சஞ்சிகை அமைய என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான் இலக்கிய சஞ்சிகையை விடுத்து செய்திச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்தேன்.      அந்த முடிவின் பிரகாரம் 2006 ஜூன் முதலாம் திகதியன்று 'உதய சூரியன்' என்ற மகுடத்தில் எனது கையெழுத்து செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தேன். 200