எனக்குமோர் நாள் இறப்பு வரும்... | கவின்மொழிவர்மன்
வயோதிக மடைந்தோ நோய்வாய்ப் பட்டோ விபத்துநடந் தோயன்று தனக்குத் தானோ எனக்கும் ஓர்நாள் இறப்புவரும் அன்று! என்னுடலும் தரையில் சாய்ந்திருக்கும் விழிகளை இமைகள் காத்திருக்கும் உடையவளருகில் வீற்றிருப்பாள் விழிநீர்காய்ந்து சோர்ந்திருப்பாள், பிள்ளைகளருகில் சேர்ந்திருப்பர்! நேரஞ்சிறிதாய் கடந்தேற உறவினர் வெகுவாய் புடைசூழ காத்திருப்பர், என்னுடல் நீரால் கழுவப்பட என்னுடை உடமைகள் கலையப்பட! நிர்வாணக்கோலம் நான்பூண்டேன் என்னுடல் மறைக்கும் துணிக்கூட என்னுடன் பிறப்புகளீந்த பிச்சையன்றோ, என்பெயரதும் நீங்கிபிணமானேன் தாயுடல்வந்த ஊனானேன்! தென்னங் குறுத்தோலை பின்னல் சடைபோட்டு என்னையதி லீட்டி பாடையதைத் தூக்க, உறவுகளெல்லாம் உதறிவிட உடையவளென்று வீதிவர! பெற்றமகனோ காடுவரயென்னை கட்டையில் வைத்தாலும் குழிதோண்டி புதைத்தாலும் மொட்டையடித்தான் எனக்காக முடியையீந்தான் கணக்காக சட்டியுடைப்பது மெதுக்காக! காடுவந்தவன் வீடுசென்றான் காலொடுயெனையும் கழுவிவிட்டான், கிடத்தியவிடத்தை துடைத்தார்கள் தீட்டாயெனையே நினைத்தார்கள், என்னுடல்தனையே பட...