Posts

Showing posts from July, 2016

வெள்ளித்திரை-தோழா!

Image
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். தோழா ! அருமையான திரைப்படம். பொதுவாகவே நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் விறுவிறுப்பாக இருக்கும். தோழா நகைச்சுவையுடன் வலிகளைக் கலந்து தந்திருக்கிறது. முதலில் தோழா திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த சில காட்சிகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். # "நாலு மாசத்துக்கு நீ சத்தியவானா இருக்கணும்" "தமிழ்ல சொல்லுங்க" "நா சொன்னது தமிழ்தான்டா" # "உன் பெட்ரூமை காட்டுறேன் வா" "இது பெட்ரூமா?" "ஆமா. இது ரூமு. இது பெட்டு" என முதியோர் இல்ல பராமரிப்பாளர் கூறுவது சிரிப்பு. #விக்ரமாதித்யாவை (நாகார்ஜுனா) கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு ஆள் எடுப்பது அருமை.  # வேலை கிடைத்ததும் தனது படுக்கை அறையையும் குளியலறையையும் பார்த்து பிரமிப்படைவது அருமை.  # கண்காட்சியில் ஓவியத்தை பார்த்துவிட்டு தானும் ஓவியம் வரைய முற்படுவது. # நாகார்ஜுனா மணிக்கூண்டை உற்றுப்பார்ப்பதைக் கண்டதும் "இதெல்லாம் விற்க மாட்டாங்க" என கார்த்தி கலாய்ப்பது. # பராமளிப்பாளர் என்பதற்காக காவலாளி போல விறைப்பாக இல்லாமல் விளையாட்டுத் த

விறல்வேல் வீரனுக்கோர் மடல்!

Image
                           அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் விறல்வேல் வீரன் வெற்றிவேல் - அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் கடிதம். நலம், நலமறிய ஆவல்.                     முதலில்  உனக்கு ( ஒருமை உரிமை உண்டென எண்ணுகிறேன் ) என் இதயம் கனிந்த நன்றிகள். நன்றிகளுடன் மடல் துவங்குவதேன் என எண்ணுகிறாயா? மிக நீண்ட காலத்தின் பின் வலையுலகில் மீள் பிரவேசம் செய்திருக்கிறேன். காரணம் நீதான். நீ தந்த தொடர் உற்சாகம் தான் வலைப்பக்கம் என்னை இழுத்து வந்திருக்கிறது. இன்னுமோர் உப காரணமும் உண்டு. உனக்கிருக்கக்கூடிய எத்தனையோ நண்பர்களையெல்லாம் விடுத்து உன் கவிதையை திருத்தம் செய்ய என்னைத் தேர்ந்தெடுத்ததும் திருத்தம் செய்தபின்னும் பிரசுரத்திற்காய் என் அனுமதி வேண்டி நின்றதும் எனக்குள் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நமக்காக துடிக்கும் இதயமே ஒருவரின் உச்ச நம்பிக்கையாக இருக்கக்கூடும். நன்றி நண்பனே!                             விறல்வேல் வீரனே , "எங்கே நம் வானவல்லி? சித்திரைக்கேனும் வந்துவிடுமா?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த "வானவல்லி" இதோ வாசகர்களின் கைகளில்.... சரித

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]

Image
பகுதி - 01 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ( 04) - ஆய்வரங்கு - சிற்றிதழ் பகுதி - 02 'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும். பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை. ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை. பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல். சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம். இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் ச

சூரியன் பண்பலைக்கு அகவை பதினெட்டு!

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். இலங்கையின் தமிழ் வானொலிகளில் முக்கியமான இடத்தை வகிக்கும் சூரியன் பண்பலைக்கு ஜூலை-25 இன்று அகவை பதினெட்டு பூர்த்தியாகிறது. எத்தனை போட்டிகள், எத்தனை தடைகள் வந்தாலும் இன்னும் தமிழ் வானொலி ஊடகத் துறையில் நிலைத்திருப்பது ஒரு பெரிய விடயம்தான். நான் கொழும்பில் வானொலிப்பெட்டி ஒன்று வாங்கி மூன்று மாதங்களாகிறது. இதுவரை சூரியன் அலைவரிசை மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும் சூரியன் அளவுக்கு வேறு எந்த வானொலியும் என்னைக் கவர்ந்ததில்லை. 2006 ஆம் ஆண்டு தவறான செய்தியொன்றை ஒலிபரப்பியமைக்காக சூரியன் பண்பலை தடை செய்யப்பட்டு சில மாதங்களுக்குப் பின் தடையில் இருந்து மீண்டது. தடைக்கு முன் மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த வானொலி தடைக்குப் பின் தன் பொலிவை இழந்தது. பல்வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாமல் போயின. வெறும் பொழுதுபோக்கு வானொலியாக மாறிப்போனது. தடைக்கு முன் நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரியாக ஏ.ஆர்.வி.லோஷன் இருந்தார். தடை அமுலில் இருந்த காலத்தில் வெற்றி என்னும் வானொலி உதயமானது. வெற்றி வானொலியின் முகாமையாளராக லோஷன் பொறுப்பேற்றார். லோஷனுக்கு அடுத்த

மனிதநேயம் - 3நிமிடக்கதை.

Image
  வணக்கம் நண்பர்களே! மனிதநேயம்! தொலைந்து போய் காலங்கள் கடந்த பின்பு இக்காலத்தில் அதிகம் தேடப்படும் பொருள். அது இக்காலத்திலும் ஒரு மனிதனிடத்தில் காணப்படுமாயின் அது பாராட்டத்தக்கதே. இது பேஸ்புக் மூலம் எனக்கு கிடைத்த மூன்று நிமிட கதை. இக்கதையைப் பற்றி நான் வார்த்தைகளால் வர்ணிப்பதை விட நீங்களே பார்த்து தெரிந்து கொள்வது தான் பொருத்தமாக இருக்கும். நன்றி நண்பர்களே!  

கனரக வாகனத்தில் வந்த காலன்!

Image
பிரான்ஸ் கனரக வாகன தாக்குதல் பிரான்ஸ்  தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ம் தேதி இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், உணவகங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 125 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இம்மாதம் 14ஆம் திகதி இரவு நீஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட வாகன தாக்குதலில், 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, நீஸ் நகரத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, திடீரென ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்கள் மீது மோதி சாய்த்தபடி சென்றது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். இத் தீவிரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக் குதல் தொடர்பாக இதுவரை 4 ப