Posts

Showing posts with the label உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - 2012

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]

Image
பகுதி - 01 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ( 04) - ஆய்வரங்கு - சிற்றிதழ் பகுதி - 02 'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும். பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை. ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை. பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல். சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம். இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் ச...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (04) - ஆய்வரங்கு - சிற்றிதழ்

அரங்கு எண்: 04 'எழுத்து' சி.சு.செல்லப்பா அரங்கு (மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்) 03-06-2012 மு.ப 08:40-பி.ப 12:50 மணி  அரங்கு: சிற்றிதழ்   இணைத் தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, தா.கோபாலகிருஸ்ணன்  ஆய்வு மதிப்பீட்டாளர்: எஸ்.மோசேஸ், அன்பு மணி இணைப்பாளர்: அந்தனி ஜீவா  ஆய்வுக் கட்டுரைகள்: 1.   பெண்களும் சஞ்சிகைகளும் - ஒரு நோக்கு - செல்வி செகராச சிங்கம் ஜனதீபா (உளவியல் துறை விரிவுரையாளர்) 2.  இதழியலில் இலத்திரனியலின் தாக்கங்கள் - தி.ஞானசேகரன் ('ஞானம்' ஆசிரியர்) 3.  ஈழத்துத் தமிழ்ச் சிற்றிதழ்கள் இலக்கிய வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம் - ஓர் அவதானிப்பு - தம்பு சிவசுப்ரமணியம் ('கற்பகம்' ஆசிரியர்) 4.  கிழக்கிலங்கைச் சிற்றிதழ்களின் வகிபாகமும் அதன் இலக்கியப் பங்களிப்பும் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் ('நீங்களும் எழுதலாம்' ஆசிரியர்) 5.  பன்முகப் பார்வையில் மலையகச் சிற்றிதழ்களின் இயக்கம் - சு.முரளிதரன் (தலைவர், ஹட்டன் தமிழ்ச் சங்கம்) 6.  இணைய இதழ்கள் - பார்வையும் பத...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (03) - ஆய்வரங்கு - கணினியும் தமிழும்.

அரங்கு எண்: 01 பேராசிரியர் ஆ.மயில்வாகனம் அரங்கு (மண்டபம் 01 - சங்கரப்பிள்ளை மண்டபம்) 02-06-2012 பி.ப - 01:45: - 04:45 மணி. அரங்கு: கணினியும் தமிழும்  இணைத் தலைமை: ஞா.பாலச்சந்திரன் (கணினி விரிவுரையாளர்), டாக்டர் எம்.கே.முருகானந்தன்  ஆய்வு மதிப்பீட்டாளர்: மேமன் கவி  இணைப்பாளர்: ஆ.குக மூர்த்தி. ஆய்வுக் கட்டுரைகள்: 1.  தொலைக்கல்வியில் கணினியின் பங்கு - இலங்கை மீதான ஒரு கண்ணோட்டம் - ரதிராணி யோகேந்திர ராஜா (யாழ் பல்கலைக் கழகம்) 2.  தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ், சவால்களும் தீர்வுகளும் - ஒரு பார்வை - தங்கராஜா தவரூபன் (தலைமை நிறைவேற்று அலுவலர், இணையத்தள/ மென்பொருள் வடிவமைப்பாளர், யாழ் பல்கலைக் கழகம்) 3.  தமிழும் இணையமும் - பேராசிரியர் மு.இளங்கோவன் ( பாரதி தாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச் சேரி, தமிழ் நாடு. வலைத்தளம்:  http://muelangovan.blogspot.com/  ) 4.  "விழி மொழி" - தமிழ் சைகை மொழி கணினியாக்கம் - சிவஜோதி வஞ்சிக்குமரன் (மென்பொருள் பொறியியலாளர்) - பதிலியாக கட்டுரையை விழாவில் சமர்ப்பித்தவர் - ரமேஷ் குமரேசன...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (02) - தொடக்க விழா

Image
                             உலகத் தமிழ் இலக்கிய விழா கோலாகலமாக கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் துவங்கியிருக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை பேராளர்களைப் பதிவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது. நான் எனக்கான பதிவை 10 மணிக்கே மேற்கொண்டேன். பேராளர்களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு தோல் பை ஒன்று வழங்கப்பட்டது. அதில் கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடான 'சங்கத் தமிழ்' இதழ் ஒன்றும் குறிப்பெடுத்துக் கொள்வதற்கான கோவை ஒன்றும் நிகழ்ச்சி நிரலும் க.ஜெயவாணி என்பவரின் 'இப்போது வந்த சொல் எப்போது வந்த கவிதை நீ?' என்னும் கவிதை நூலும் இட்டு வழங்கப்பட்டன. சரியாக 10 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமானது.  "தமிழ் இலக்கியமும் சமூகமும் : இன்றும் நாளையும்" என்ற தொனிப் பொருளில் மாநாடு இடம் பெற உள்ளது.                                 மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து அருணந்தி ஆரூரன் அவர்களின் கணீர் குரலில் தமிழ் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தொடக்க விழா அரங...

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

Image
கொழும்புத் தமிழ் சங்கம் தனது 70வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இலக்கிய மாநாடொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 2012 ஜூன் மாதம் 1,2,3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் இவ்விலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. "தமிழ் இலக்கியமும் , சமூகமும் - இன்றும், நாளையும்" என்ற தொனிப் பொருளிலேயே இம்மாநாடு நடை பெற உள்ளது. 2, 3, மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களும் மாநாட்டு தொனிப் பொருளுக்கு அமைவான கருத்தரங்குகள் இடம் பெற உள்ள அதே வேளை முதல் நாள் சென்னை பாரதியார் சங்கத்துடன் இணைந்து "பாரதி விழா" நடத்தப் பட உள்ளது. மாநாட்டில் பங்கு பற்றுவதற்கான மற்றும் ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் சங்க இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சங்கத்தில் இடம்பெற உள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" கொழும்பு தமிழ் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. குறித்த மாநாட்டிற்குப் பிறகு நடைபெறும் மாபெரும் விழாவாக இதனைக் கருத முடியும்.  ஜூன் மாதம் நடை பெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிறப்புற அமைய ...