உலகத் தமிழ் இலக்கிய மாநாடு (05) - ஆய்வரங்கு - சிற்றிதழ் - [பகுதி - 02]
பகுதி - 01 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ( 04) - ஆய்வரங்கு - சிற்றிதழ் பகுதி - 02 'பெண்ணியம்' குறித்துத் தீவிரமாகப் பேசப் படும் இக் கால கட்டத்தில் சிற்றிதழ் துறை சார்ந்தும் அவ்விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. சிற்றிதழ் துறையில் பெண்களின் பங்களிப்பை பின்வரும் வகைப் பாட்டின் அடிப்படையில் பார்க்க முடியும். பெண்களால் பெண்களுக்காக வெளியிடப்படும் சஞ்சிகை. ஆண்கள் பெண்களுக்காக வெளியிடும் சஞ்சிகை. பொதுவான சஞ்சிகைகளில் பெண்களின் ஆக்கங்கள் இடம் பெறுதல். சிற்றிதழ்களில் ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப் படாவிட்டாலும் பின்வந்த காலங்களில் பெண்களுக்கும் இடம் வழங்கப் பட்டது. தற்போது சிற்றிதழ்களிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப் படுவதைக் காணலாம். இணைய சிற்றிதழ்கள் பற்றிப் பார்க்கும் போது சிற்றிதழ்களுக்கான சகல பண்புகளையும் கொண்டமைந்த ஆனால் பௌதீக வடிவத்தைக் கொண்டிராத, இலத்திரனியல் வடிவில் இணையத்தினூடாக வெளிவரும் சிற்றிதழ்களை 'இணைய சிற்றிதழ்கள்' என அடையாளப் படுத்துகிறோம். பௌதீக (அச்சு) வடிவில் வெளியாகும் ச...