Posts

Showing posts from April, 2019

வலைப்பதிவு வழிகாட்டி - 04

Image
பிளாக்கர் (Blogger) துணையுடன் வலைப்பதிவு ஒன்றை உருவாக்குவது பற்றி இதுவரை நாம் பார்த்தோம்.  Image Credit: Google  அதன் படி முறைகளை நீங்கள் கீழ்வரும் இணைப்புகளில் ஒழுங்குமுறையில் காணலாம்.  வலைப்பதிவு வழிகாட்டி - 01   வலைப்பதிவு வழிகாட்டி  - 02   வலைப்பதிவு வழிகாட்டி - 03   சரி, வலைப்பதிவை உருவாக்கிவிட்டோம். இனி எழுதப் போகலாமே என்பது உங்கள் எண்ணமாக இருக்கும். ஆனால் அதை விட முக்கியமான சில படிமுறைகள் இருக்கின்றன. அவற்றையும் செய்த பின்னர் நாம் எழுதத் துவங்குவோம்.  வலைப்பதிவு அமைப்புகளை (Settings) கட்டமைக்க வேண்டும்.  உங்கள் வலைப்பதிவின் கட்டுப்பாட்டு பகுதியில் (Dashboard) இடது பக்கத்தில் கீழே இந்த Settings காணப்படும்.  Settings இனை தெரிவு செய்யுங்கள்  இங்கு 'Basic' என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவின் அடிப்படை விவரங்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம்.  Title என்னும் தெரிவில் உங்கள் வலைப்பதிவு தலைப்பை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவுக்கான புதிய தலைப்பை உள்ளிட்ட பின்னர் 'Sa

அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள் | கட்டுரை | பிபிசி தமிழ்

Image
அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள்! பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது.  இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.  காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.  இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.  எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பங்களாதேஷ் அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  பங்களாதேஷ் அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit : ICC  மஷ்ரபி மோர்தசா (தலைவர்)  தமீம் இக்பால்  லிதோன் தாஸ்  சௌம்யா சர்கார்  முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்)  மஹ்மதுல்லாஹ்  ஷகிப் அல் ஹசன்  மொஹம்மட் மிதுன்  சப்பிர் ரஹ்மான்  மொஸாடெக் ஹாசன்   மொஹமட் சைபுதீன்  மெஹிதி ஹாசன்  ருபேல் ஹுசைன்  முஸ்தபிஸுர் ரஹ்மான்  அபு ஜயித்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பங்களாதேஷ் அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-bangladesh.html  #CWC19 #Australia #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

உலகில் கோபமும் மன அழுத்தமும் அதிகரித்துள்ளன - புதிய ஆய்வில் தகவல்

Image
ஒரு புதிய உலகளாவிய ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக கோபம், மன அழுத்தம் மற்றும் கவலையால் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  Gallup என்னும் நிறுவனம் உலகின் 140 நாடுகளில் உள்ள 151,000 பேரிடம் 2018ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.  ஆய்வில் பங்கு கொண்ட மூன்றில் ஒரு பகுதியினர் தாம் மனா அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் ஐந்து பேரில் ஒருவர் சோகம் அல்லது கோபமாக உணர்கின்றனர்.  Gallup 2019 Global Emotions Report மூலம் மக்களின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்கள் குறித்து  Gallup நிறுவனத்தினர்   கேட்டறிந்துள்ளனர்.  Image Credit : gallup.com ஆய்வில் பங்கேற்ற மக்களின் ஆய்வு நடத்தப்பட்ட நாளுக்கு முந்தைய நாளின் அனுபவங்கள் குறித்து  Gallup நிறுவனத்தினர்  கவனம் செலுத்தியிருந்தனர்.  71% பேர் முந்தைய நாளில்குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.  மன அழுத்தம், கவலை மற்றும் சோகம் ஆகியன முன்பை விட அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வுக்கு முந்தைய நாளில் 39% பேர்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  அவுஸ்திரேலிய அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC  ஆரோன் பின்ச் (தலைவர்)  ஜேசன் பெஹ்ரென்டோர்ப்ஃ  அலெக்ஸ் கரே  நெதன் கோல்டெர் நைல்  பெட் கம்மின்ஸ்  உஸ்மான் கவாஜா  நெதன் லயன்  ஷோன் மார்ஷ்  கிளென் மெக்ஸ்வெல்  ஜாய் ரிச்சர்ட்ஸன்  ஸ்டீவ் ஸ்மித்  மிட்சேல் ஸ்டார்க்  மார்கஸ் ஸ்டோய்னிஸ்  டேவிட் வார்னர்  ஆடம் ஸம்பா  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | அவுஸ்திரேலிய அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-australia.html  #CWC19 #Australia #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

இலங்கையில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் - நாளேடுகளில் நமது பார்வை - 2019.04.22

Image
இலங்கை நாளேடுகளில் சில...  இந்திய நாளேடுகளில் சில...  இலங்கையில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் - நாளேடுகளில் நமது பார்வை - 2019.04.22  https://newsigaram.blogspot.com/2019/04/sri-lanka-terror-attack-our-view-on-news-papers.html  #MetroNews #Virakesari #Vidivelli #DailyExpress #CeylonToday #Thinakaran #Dinakaran #TamilMurasu #Dinamalar #DailyThanthi #Dinasudar #TheHinduTamil #Thinaboomi #NewsPaper #Review #Lka #Lanka #SriLanka #BombBlast #SriLankaBlasts #srilankaterrorattack #EasterSundayAttacksLK #EasterAttackSL 

இலங்கையில் சமூக வலைத்தள முடக்கம் சொல்லும் செய்தி

Image
இலங்கையில் 2019.04.21 அன்று இடம்பெற்ற 8 தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.  கடந்த வருடம் கண்டி திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து குறித்த சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக முடக்கப்பட்டிருந்தன.  இப்போது இரண்டாவது முறையாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.  Image Credit: Google  அண்மையில் நியூஸிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சேர்ச் பகுதியில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்காக பேஸ்புக் கடும் கண்டனங்களை சந்தித்திருந்தது.  சமூக வலைத்தளங்கள் ஊடாக அவதூறு பரப்புவதும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.  தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல திறன்பேசி வைத்திருக்கும் எல்லோரும் ஊடகவியலாளர்களாகி விடுகிறார்கள். பக்கத்து வீட்டு சண்டை முதல் பக்கத்து நாட்டு சண்டை வரை எல்லாவற்றையும் வரைமுறையின்றி பதிவிடுகின்றனர்.  தனி மனித தாக்குதல்களும் இன முறுகல்களைத் தோற்றுவிக்கக் கூடிய வகை

உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!

Image
சித்திரை விடுமுறைக்குப் பின்னர் வழமைக்குத் திரும்ப முயன்ற இலங்கை பெரும் துயரில் வீழ்ந்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் சுமார் 227 பேர் வரை பலியாகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையிலுள்ள உணவகம், தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி ஆகியன குண்டுவெடிப்புக்கு இலக்கான பகுதிகள்.  2019.04.21 அன்று காலை முதல் மதியம் வரை எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் - 65 பேர் பலி; 267 பேர் காயம்.  மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் - 30 பேர் பலி; 75 பேர் காயம்.  நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் - 112 பேர் பலி; 100 பேர் காயம்.  தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் - 2 பேர் பலி.  Image Credit: FB கொழும்பு தெமட்டகொட குடியிருப்பு பகுதி - 3 பேர் பலி.  கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதிகள் (சின்னமன் கிராண்ட், ஷங்ரிலா மற்றும்

பேராதனை பழைய புகையிரத நிலையம்

Image
இலங்கையில் புகையிரத சேவை இற்றைக்கு சுமார் 161 ஆண்டுகளுக்கு முன்பு 1858ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.  படிப்படியாக ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் புகையிரத சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன.  இன்று காணப்படும் புகையிரத மார்க்கங்களில் பெரும்பாலானவை சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டவை ஆகும்.  ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையின் அளவுக்கு சிங்கள அரசாங்கத்தால் புகையிரதப் பாதைகள் மேம்படுத்தப்படவில்லை.  இன்றைக்கும் கூட ஆங்கிலேயர் கால சேவை அட்டவணையின் பிரகாரமே புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்படுவதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.  சரி, 2019.04.20 அன்று எனது ஊரில் இருந்து கொழும்புக்கு வரும் வழியில் பேராதனை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்தது.  அதன் போது புகையிரத நிலையத்தின் ஒரு புறம் இருந்த பேராதனை பழைய புகையிரத நிலைய கட்டடம் கண்ணில் பட்டது.  இப் புகையிரத நிலையம் 1867ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.  அதாவது இலங்கையில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகளில்!  காலம் கடந்த நினைவுச் சின்னங்கள் அருகி வ

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  இந்திய அணி விபரம்   15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC விராட் கோஹ்லி (தலைவர்)  ரோஹித் ஷர்மா  ஷிக்கர் தவான்  கே.எல். ராகுல்  மகேந்திர சிங் தோனி  கேதார் ஜாதவ்  ஹர்திக் பாண்டியா  விஜய் ஷங்கர்  குல்தீப் யாதவ்  யுஸ்வேந்திர சாஹல்  ஜஸ்பிரிட் பும்ரா  புவனேஷ்வர் குமார்  மொஹமட் ஷமி  ரவீந்திர ஜடேஜா  தினேஷ் கார்த்திக்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | இந்திய அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-india.html  #CWC19 #NewZealand #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

வேண்டும்

Image
Image Credit : Google கல்வியில் சிறப்பு வேண்டும்  வறுமையில் பொறுமை வேண்டும்  உலகில் சமாதானம் வேண்டும்  இனத்தில் ஒற்றுமை வேண்டும்  வாழ்வில் அமைதி வேண்டும்!  துரைசாமி லட்சுமணன்,  கொட்டகலை.  குறிப்பு : 2003ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் என்னால் முதன்முதலில் எழுதப்பட்ட கவிதை இது. எந்த தினத்தில் வெளியிடப்பட்டது என்பதை மிகச் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஆகவே 04.01.2019 திகதிக்கு இப்பதிவை அமைக்கிறேன். 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லியம்சன் - தலைவர்  டொம் ப்ளன்டெல்  ட்ரெண்ட் போல்ட்  லொக்கி ஃபெர்குசன்  கொலின் டீ க்ரென்தோம்  மார்டின் கப்டில்  மாட் ஹென்றி  டொம் லெதம்  கொலின் முன்றோ  ஜிம்மி நீஷம்  ஹென்றி நிகோல்ஸ்  மிட்ச் சாண்ட்னெர்  இஷ் சோதி  டிம் சௌதீ  ரொஸ் டெய்லர்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/04/icc-cricket-world-cup-2019-team-squad-new-zealand.html  #CWC19 #NewZealand #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

மலையகக் கல்வி நிலை பின்னடைவுக்கு (ஆசிரியர்களே) பொறுப்புக் கூற வேண்டும்

Image
மலையகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி கல்வியறிவு மேம்படுத்தப்பட வேண்டும். உரிய தரப்பினர் அக்கறை செலுத்தாமையினால் எமது கல்வி நிலை முன்னேறுவதற்குப் பதிலாக பின்னடைவையே எதிர்நோக்குகிறது. மலையகக் கல்வியின் பின்னடைவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல்வாதிகள், சமூகம் என சகல தரப்பினருக்கும் பங்குண்டு. ஆனால், பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு ஆசிரியர்களுக்கே உண்டு. ஏனெனில் இதில் அவர்கள் தான் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர். அரசியல் காரணங்கள், வளங்கள் இன்மை என எத்தனை சவால்கள் இருந்தாலும் அதையும் தாண்டி மலையகக் கல்வி அபிவிருத்தி, மாணவனின் முன்னேற்றம் என்பதை நோக்காகக் கொண்டு உழைப்பவரே உண்மையான ஆசிரியர்.  ஆசிரியர் தொழில் என்பது பலருக்கு ஒரு வருமான மார்க்கமாக மட்டுமே இருக்கிறது. தமது குடும்ப சூழ்நிலைகளின் பிரதிபலிப்புகளை அவர்கள் பாடசாலைக்குள் வெளிக்காட்டுகின்றனர். இது தவறாகும். ஆசிரியர்களிடையே கையடக்கத் தொலைபேசியின் பாவனை அதிகரித்து வருகின்றது. பாடங்களை நடத்தும்போது அழைப்புகள் வந்தால் பேசியே பாடத்தை முடித்து விடுகின்றனர்.  Image Credit: Google  மாணவர்களை முழுமையாக கல்வி

டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019

Image
டிஷ் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவையின் இலவச தமிழ் அலைவரிசைகள் 04-16-2019 (அன்றைய தின நிலவரப்படி)  Dish tv Satellite d2h service Free Tamil Channel List as at 04-16-2019  இலவச / கட்டணமில்லா / விலையில்லா தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள்  Image Credit: Google அலைவரிசை இலக்கம் / அலைவரிசை  522 - 7S Music  524 - புதுயுகம்  545 - கலைஞர்  549 - தந்தி  550 - Polimer  551 - சிரிப்பொலி  552 - வசந்த்  555 - முரசு  556 - மாலை முரசு செய்திகள்  557 - Captain  560 - வேந்தர்  563 - DD Tamil (பொதிகை)  565 - தமிழன்  572 - இசையருவி  577 - Cauvery News  578 - நம்பிக்கை  582 - புதிய தலைமுறை  583 - Polimer News  585 - கலைஞர் செய்திகள்  586 - மக்கள்  587 - Sathiyam  590 - வெளிச்சம்  593 - Sahana  மொத்தமாக, கட்டண அலைவரிசைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் அலைவரிசைகள் இருந்தாலும், இதன் மூலம் 23 இலவச தமிழ் அலைவரிசைகளை நீங்கள் பார்த்து மகிழலாம். இதற்கு மாதாந்த கட்டணம் 130 இந்திய ரூபா (GST உட்பட 154 ர