சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே -எனக்குப் பிடித்த பாடல்

வணக்கம் வலைத்தள நண்பர்களே...! நலம், நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளத்தில் சந்திக்கிறோம். இன்று நான் என்னைக் கவர்ந்த பாடலொன்று பற்றி இங்கு பகிர்ந்துள்ளேன். நயன்தாராவின் நடிப்பில் வெளியான நெற்றிக் கண் திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்ற பாடலே அது. பேசுவதற்கு இப்போது அதிக நேரமில்லை. ஆனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். கேட்ட மாத்திரத்தில் பாடலை பிடித்து விட்டது. எளிமையான இசையும், அழகான வரிகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. நீங்களும் கேளுங்க.. விரைவில் சந்திப்போம்.... பாடலும், வரிகளும் இதோ..! இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் சுடரி இருளில் ஏங்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே இதுவும...