Posts

Showing posts with the label உலகச் செய்திகள்

திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?

Image
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை. அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான். 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன. Image Credit: Respective Owners only 2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலம...

சவூதி அதிகாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்கு கஷோக்கி குடும்பத்தினர் மறுப்பு

Image
நீதிமன்றத்திற்கு வெளியில் சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், மகன்மார் பணம் பெற்றுக் கொண்டதாகவும் வெளியான குற்றச்சாட்டுகளை, படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் குடும்gத்தினர் நிராகரித்துள்ளனர்.  “இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. யாருடனும் எந்தக் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை” என சாலாஹ் கஷோக்கி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று (10) தெரிவித்தார்.  Photo Credit: Google / Washington Post சாலாஹ் உள்ளிட்ட கஷோக்கியின் பிள்ளைகள் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகாரிகளினால் வழங்கப்படுவதாகவும் அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த முதலாம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.  சவூதி அரேபிய அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து, சவூதியினால் அனுப்பப்பட்ட 15 பேர் கொண்ட முகவர் குழுவினரால் படுகொலை செய்யப...

பாங்கொக் வணிக வளாகத்தில் தீ விபத்து - மூவர் பலி!

Image
பாங்கொக்கிலுள்ள வணிக வளாகமொன்றில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.  56 மாடிகளைக் கொண்ட சென்டெரா கிராண்ட் ஹோட்டல் கட்டடத்தின் எட்டாவது மாடியில், உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  குறைந்தபட்சம் ஒருவர் கட்டடத்தில் இருந்து வீழ்ந்ததனால் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  Photo Credit: thethaiger.com  குறித்த பாரிய வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  மாலை நேரத்தில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்தை சென்றடைவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் பலியானதாக பாங்கொக் ஆளுநர் அஸ்ஸாவின் க்வான்முவாங் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தீ விபத்து ஏற்பட்டமைக்கான க...

பிரெக்ஸிட்டை 2020 வரை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

Image
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை 2020 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.  கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைந்த பிரெக்ஸிட்டுக்கான கால எல்லையை இம்மாதம் 12ஆம் திகதிவரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்திருந்தது.  எனினும் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயின் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை. இதனால் மேலுமொரு குறுகிய கால நீட்டிப்பை தெரெசா மே எதிர்பார்த்திருந்தார்.  Photo Credit: Google / BBC எனினும் குறுகிய கால நீட்டிப்பை பெற்றுக் கொள்வதற்கான தெரெசா மேயின் பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்தானியாவுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் எதிர்பார்த்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 நாடுகளின் மத்தியிலும் பிரெக்ஸிட்டை நீண்டகாலத்துக்கு தாமதப்படுத்துவதற்கான ஆதரவு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.  இவ்வாண்டு டிசம்பர் அல்லது 2020 மார்ச் ஆகிய ...

உலகம் | அல்ஜீரிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
புதிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக அல்ஜீரிய பொலிஸார் தண்ணீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.  அல்ஜீரியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்தலசீஸ் போடேஃபிலிகா, பல வார தொடர் ஆர்ப்பாட்டங்களையடுத்து தான் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.  Photo Credit: Google / BBC / Reuters இதனையடுத்து, நாடாளுமன்ற மேல் சபையின் சபாநாயகரான அப்தெல்காதெர் பென்சலாஹ் புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.  ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்வரை பதவி வகிக்கவுள்ள பென்சலாஹ், தான் மக்களின் நலன்களுக்காகப் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.  எனினும் மக்களில் பலர் இன்னும் தீவிரமான மாற்றத்தை விரும்புகின்றனர்.  “மக்களுக்கான சொல்லை கூடிய விரைவில் மீண்டும் கொண்டு வருவதற்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடுமையாக உழைப்பதற்காக இக் காலப்பகுதியில் இந் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலமைப்பை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என பதவியேற்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.  பென...