வாசிப்பும் நானும் - சில குறிப்புகள்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXdkb4J9fkqf4sO5x5JRXUN2OyWMJ_Jth2rokVRu__xb7SjCThR5A098AGvwBZoX_NbL_tXp-FLPIcx5m4FUEZ7UEV7PeO7JkZ5LTyHmuV1NL8aO2BbIl6Sb0W77HtY6nEVSKhuHdOmgw_7qY18Txgjc7bpSysTEYegjR0kLAcGetUvu3B6pZn7ovzyUYT/s320/20240405_134925.jpg)
வாசிப்பு என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் தேடிப்பார்க்கின்ற போது பலர் வாசிப்பு ஆர்வம் அற்றவர்கள் போலவே இருக்கின்றார்கள். இதற்கு என்ன காரணம்? நூலகங்கள் பல இருந்தாலும் அவற்றை நாடுவோர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? முதல் காரணமாக நான் கருதுவது பலருக்கு தமக்கு பொருத்தமான புத்தகங்களை கண்டடைய முடியாமல் போகின்றது. தமது வாசிப்பு தேடலைப் பூர்த்தி செய்யும் புத்தகத்தை அவர்களால் கண்டடைய முடிவதில்லை. நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்துள்ள எனக்கே பல சமயங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. அடுத்தது மாணவப் பருவத்தில் வாசிப்பு அநாவசியமான ஒன்றாக பார்க்கப்படுவது. கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த பாடம் தொடர்பில் நூலகத்தில் ஏதேனும் தேடிக் கொண்டு வா என்று சொல்வதில்லை. நூலக ஆசிரியரே நூலகத்திற்கு மாணவர்களை அழைக்காத நிலையே பல பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. இந்த பின்னணியில் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் மாணவர்கள், நூலகமும் நூல்களும் அப்போதைய ஆய்வுத் தேவைக்கு மாத்திரம் தான் என் முடிவு செய்து விடுகின்றனர். ஒரு சிலரே தமது துறை சார்ந்தேனும் நூல்களை வாசிக்கின்றனர். எனக்க