Posts

வாசிப்பும் பகிர்வும் - 03 | வாசிப்பது எப்படி - செல்வேந்திரன்| வாசிப்பு அனுபவக் குறிப்புகள்

Image
பா. ராகவன் எழுதிய உக்ரையீனா புத்தகம் பற்றிய எனது எண்ணங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.  இன்று நாம் பார்க்கவிருக்கும் புத்தகம் - வாசிப்பது எப்படி?  நூலாசிரியர் - செல்வேந்திரன் தலைப்பைப் பார்த்ததும் இதற்கெல்லாம் ஒரு புத்தகம் தேவையா என்ற எண்ணம் நமக்குள் எழலாம். ஆனால் அதற்கான தேவை இருக்கிறது என்பதை இந்த புத்தகத்தை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.  82 பக்க கட்டுரைகளை மட்டும் கொண்ட ஒரு புத்தகம் இது. ஒருசில மணிநேரத்திற்குள் இதனை வாசித்துவிட முடியும்.  ஆனால் ஆசிரியர் சொல்ல வந்த கருத்தை நாம் உணர்ந்து வாசிப்பது அவசியம்.  நாம் வாசிப்பு என்ற உடனேயே புத்தக வாசிப்பை மாத்திரமே கருத்திற்கொள்வோம். ஆனால் நாளிதழ் வாசிப்பதும் வாசிப்பின் ஒரு அங்கம் என்பதையும், புத்தகம் வாசிப்பவர்கள் நாளிதழ்களை வாசிக்கப் பழக வேண்டும் என்பதையும் செல்வேந்திரன் வலியுறுத்துகிறார்.  உயிருள்ள பாடப்புத்தகம் என நாளிதழ்களை அழைக்கும் செல்வேந்திரன், அந்த நாளிதழ்களை எப்படி வாசிப்பது என நமக்கு கற்றுத்தருகிறார்.  ஆசிரியர் நமக்கு ஒரு கோரிக்கையை முன்னுரையில் முன்வைக்கிறார். இந்த புத்தகத்தை முழுதாகப் படிக்கும் பொறுமை இல்லாதவர்கள் வாசிப்ப

வாசிப்பும் பகிர்வும் -02 - உக்ரையீனா - பா ராகவன்

Image
வாசிப்பு என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஏன் எனக்குப் பிடித்தமானதும் கூட. சிறுவயதில் இருந்தே நூல்களும் நூலகங்களும் எனக்குப் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. வாசிப்பின் தொடர்ச்சியாக பாடசாலைக் காலத்தில் கையெழுத்து சஞ்சிகையும் தொடர்ந்து வந்த காலத்தில் வலைப்பதிவுகளும் பின்னர் ஒரு சில இணையத்தளங்களும் என என் முயற்சிகள் விரிவடைந்து சென்றிருக்கின்றன. ஆனாலும் புத்தகம் வெளியிட நினைத்தாலும் இதுவரை அந்த எண்ணம் ஈடேறவில்லை. இருந்தாலும் இடைநடுவில் சிலகாலம் வாசிப்பை விட்டு நான் பிரிந்திருக்க நேரிட்டது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். ஆனால் உரிய காலத்திற்குக் காத்திருந்ததன் விளைவாக இந்த ஆண்டு வாசிப்பு மாரத்தான் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்குபற்றுகிறேன்.  எனது முதல் வாசிப்பு பதிவாக எழுத்தாளர் பா. ராகவன் Pa Raghavan எழுதிய உக்ரையீனாவை பதிவு செய்ய விரும்புகிறேன். அளவில் சிறியதாக இருந்தாலும் விடயத்தில் பெரியதாக இருக்கிறது இந்த நூல். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே தற்போது மூண்டுள்ள இந்த போர், ஏன், எதற்கு என்பதை விரிவாக ஆராய்கிறது உக்ரையீ

நான் அறியாத நீ...!

Image
உன்னைப் பழகி  உன் குணமறிந்து  விருப்பம் தெரிந்து  தேவையறிந்து எண்ணம் புரிந்து எல்லாம் அறிந்து  காதல் செய்யும் ஆசை எனக்கில்லை வேண்டாம் உன்னை நான்  அறிய வேண்டாம்  நான் அறியா  நீ தான் வேண்டும்  தூரத்தில் உன்  முகம் பார்த்து கண்ணோடு கண் பேசி  எனக்குள் நானே  அர்த்தம் கற்பித்து அதுதான் நிஜமென  எண்ணி வாழும்  அந்த வாழ்க்கை  போதும் எனக்கு வேண்டாம் நான் அறிந்த நீ வேண்டாம் உன் குணம்  நான் விரும்பாமல் இருக்கலாம் உன் எண்ணம் ஒவ்வாததாயிருக்கலாம்  உன் ஆசை பேராசையாய் இருக்கலாம் ஆகவே நான் அறிந்த நீ வேண்டாம் நானறியா நீ தான் என் தேவை  பொய்யெனத் தெரிந்தும்  அதை  மெய்யெனக் கொள்ள நான்  தயார்  நானறியாத நீ  நானும் நீயுமாக இருந்தால்...!

சோறுடைக்கும் சோழநாட்டின் குடிமகள் 'அபிராமி பாஸ்கரன்' உடனான சிகரம் வழங்கும் நேர்காணல்!

Image
சிகரம்: வணக்கம் அபிராமி! சிகரம் இணையத்தளம் சார்பாக உங்களை வரவேற்கிறோம்! அபிராமி பாஸ்கரன்: வணக்கம் சிகரம்: எமது வாசகர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். அபிராமி பாஸ்கரன்: வணக்கம். நான் அபிராமி பாஸ்கரன். எனது ஊர் மன்னார்குடி. சோறுடைக்கும் சோழ நாட்டின் குடிமகள். MBA., M.Phil., பட்டதாரி. நான் வெற்றிக்களிறு என்ற சரித்திர நாவலின் ஆசிரியர். வரலாற்றின் மீது அதீத ஆர்வம் உண்டு. சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழுவின் துணைத்தலைவராக உள்ளேன். முகநூலில் இயங்கும் பொன்னியின் செல்வன் குழுவின் நிர்வாகிகளில் ஒருத்தி. சிகரம் இணையத்தளத்துடன் இணைந்து பயணிப்பத்தில் மகிழ்ச்சி. சிகரம்: தங்களின் எழுத்துப் பயணம் பற்றிக் குறிப்பிடுங்களேன்? அபிராமி பாஸ்கரன்: எனது முதல் நாவல் வெற்றிக்களிறு. தற்பொழுது அடுத்த நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகளும் எழுதியுள்ளேன். எனக்கு வரலாற்று நாவல் ஒன்று எழுதுவதற்கும், வரலாற்றின் மீதான ஆர்வத்திற்கும் தூண்டுக்கோலாக அமைந்தது அமரர் திரு. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தான். Abirami's Articles about Ponniyin Selvan என்ற எனது முகநூல் பக்கத்தில் பொன்னியின் செலவன் கு

சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே -எனக்குப் பிடித்த பாடல்

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே...!  நலம், நலமறிய ஆவல்.  நீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளத்தில் சந்திக்கிறோம்.  இன்று நான் என்னைக் கவர்ந்த பாடலொன்று பற்றி இங்கு பகிர்ந்துள்ளேன்.  நயன்தாராவின் நடிப்பில் வெளியான நெற்றிக் கண் திரைப்படத்தில் இடம்பெற்ற இதுவும் கடந்து போகும் என்ற பாடலே அது.  பேசுவதற்கு இப்போது அதிக நேரமில்லை.  ஆனால் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.  கேட்ட மாத்திரத்தில் பாடலை பிடித்து விட்டது.  எளிமையான இசையும், அழகான வரிகளும் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.  நீங்களும் கேளுங்க..  விரைவில் சந்திப்போம்.... பாடலும், வரிகளும் இதோ..! இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் சுடரி இருளில் ஏங்காதே வேலி தான் கதவை மூடாதே ஆறு காலங்களும் மாறி மாறி வரும் இயற்கையின் விதி இதுவே அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை அனுபவம் கொடுத்திடுமே மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன சுடரி சுடரி உடைந்து போகாதே உடனே வலிகள் மறைந்து போகாதே சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே அதுவாய் மறக்கும் பின் தொடராதே இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும் இதுவும் கடந

கொரோனா தொற்று சவால்களும் -சர்வதேச தொழிலாளர் தினமும்

Image
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நிச்சயமற்ற தொழில் சூழலொன்று உருவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தை நாம் அனுஸ்டிக்கிறோம்.  தொற்று நோயின் தீவிரத்தினால் பல்வேறு தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கு பல்வேறு அரசாங்கங்களும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.  இதன் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களே தமது பணியாளர்களை தொழிலில் இருந்து நீக்கியிருக்கின்றன.  கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மையினால் பல்வேறு வணிகங்கள் மூடப்பட்டுள்ள நிலையையும் அவதானிக்க முடியும்.  சர்வதேச அளவில் படிப்படியாக குறைந்து வந்த வேலையின்மை வீதம் மீண்டும் சடுதியாக அதிகரித்திருக்கிறது.   Image copyrights reserved to respective owners only இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்கள் வீழ்ச்சியை எதிர்நோக்கியிருக்கின்றன.  அது மட்டுமல்ல, தொழிலாளர் தினத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமையே எட்டு மணி நேர உழைப்பு என்பதாகும்.  இந்த உரி

எழுத்தாளர் சிகரம் பாரதி...!

Image
வணக்கம் தோழர்களே. நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இந்த காலப்பகுதியில் நானும் சரி, வலைத்தளமும் சரி, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.  அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, என்னை அடையாளப்படுத்துவதற்கான தேவையாக, 'எழுத்தாளர் சிகரம் பாரதி' வலைத்தளத்தை நான் உங்களுக்கு இங்கே அறிமுகம் செய்து வைக்கிறேன்.  நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முகவரியில் இயங்குவது தான் பிரதான வலைத்தளம். இது தவிர்ந்த எத்தனையோ உப வலைத்தளங்களை உருவாக்கியிருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை.  அதே போல, புதியதொரு நோக்கத்திற்காக இந்த வலைத்தளத்தையும் நான் உருவாக்கியிருக்கிறேன்.  எனது படைப்புகள் மற்றும் எண்ணங்கள், கருத்துக்கள் என எல்லாவற்றையும் நீங்கள் தற்போது காணும் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறேன். ஆனால் இவை எதுவும் அற்ற எனது படைப்புகளுக்கு மட்டுமான தனியானதொரு களம் தேவை என நான் உணர்ந்தேன்.  அதன் விளைவாகவே 'எழுத்தாளர் சிகரம் பாரதி' எனும் இந்த புதிய வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறேன்.  இங்கு எனது கவிதைகள், சிறுகதைகள் மற்றும்

சம்பவம் நடந்தது

Image
 ஆம்  சம்பவம் நடந்தது...  சம்பவத்தை சுற்றி  கோடுகளும்  பாதுகாப்பு வலயமும்  அதனை பாதுகாக்க  சிலரும்...  'என்ன நடந்தது?'  'சம்பவம்'  'எப்போது?'  '7 மணிக்கு'  'இரவா, பகலா? யார் யாரோடு  யாருக்காக ஏன் எதற்கு?'  கேள்விக் கணைகள் சுற்றியிருந்தவர்களை  துளைத்தன.  Image copyrights reserved to respective owners only காவல்துறையின் கேள்விகளை  நீதிமன்றங்களும்  மீண்டும் மீண்டும்  கேட்டன.  வருடங்கள் ஓடின,  சாட்சியாளர்களின்  எண்ணிக்கை குறைந்தது.  இறுதியாக  நீதிபதி என்னைக்  கேட்டார்  'என்ன நடந்தது?'  'ஒன்னுமில்லீங்க?'  'நீதிமன்றத்தின்  பொன்னான நேரத்தை  வீணாக்கி விட்டீர்கள்,  இரண்டாயிரத்து ஐநூறு  அபராதம்!  நீதி கிடைத்தது  ஆனாலும்  சம்பவமும் நடந்தது, நீதியும் கிடைத்தது  சம்பவம் நடந்தது  யாருக்கோ,  நீதி கிடைத்தது யாருக்கோ. ஆம்!  சம்பவம் நடந்தது!

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்னுரையில் ஓரளவு தே