Posts

Showing posts with the label சிகரம் திரட்டி

சிகரம் வலைப்பூங்கா - 04

Image
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ அ. முத்துலிங்கத்தின் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தை வாசிக்கும் போது அது நாவல் என்று கூறப்பட்டு இருந்தாலும் சுயபுனைவு என்றே புரிந்துகொள்ள முடிகிறது. தடுக்கிச் சரியும் ஒவ்வொரு அத்தியாயமும் அவரது பால்யத்தை எள்ளலுடன் புன்னகைக்கும் வகையில் சொல்லிச் சென்றிருக்கும். இந்தப் புன்னகைக்க வைக்கும் தன்மைதான் அப்புத்தகத்தின் வெற்றியோ என்று கூட தோன்ற வைக்கும். பால்யத்தை மீட்டிப் பார்க்கும் போது இனிமையான சம்பவங்கள் சட்டென்று முதலில் நினைவுக்கு வரும்; பின்னர் மெல்ல மெல்ல அந்த நினைவுகளைக் கடந்து கசப்பான நினைவுகள் சுற்றிப்பிடித்து விழுங்க ஆரம்பிக்கும். இதனைச் சமநிலை குலையாமல் எழுதும் போதே சுயபுனைவுக்கான வடிவம் கூடிவருகிறது. இவற்றை சுயசரிதையாக வெறுமே கருத முடிவதில்லை. ஊகங்களாகக் கடந்து செல்ல வேண்டியவற்றைக் கூட சம்பவங்களாக எழுதி ஆசிரியரால் இட்டு நிரப்படப்படுகிறது. புனைவுக்கான முடிச்சுகளுடன் கச்சிதமாக முடிக்கப்படுகின்றன. முழுமையாக வாசிக்க...   திருக்குறள் கதைகள் - அறத்துப்பால் - 255. சரஸ்வதியின் சந்தேகம் "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப் ப...

சிகரம் வலைப்பூங்கா - 03

Image
வலைப்பதிவு : கலையும் மௌனம்  பதிவு : அப்பெல்லாம் எப்படி தெரியுமா?  அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்.., அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து பெரியவர்கள் தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.  முழுமையாக வாசிக்க Photo Credit : Google / moneyhomeblog.com வலைப்பதிவு : காளிகபாலி  பதிவு : வாசம் வீசும் நேரம்   "வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..." "வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......" வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில்தோன்றும் வாசம் எது?  முழுமையாக வாசிக்க வலைப்பதிவு : திண்டுக்கல் தனபாலன்  பதிவு : நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?  திருவள்ளுவரின் குறளும் அதற்குப் பொருத்தமான பாடல்களும் அடங்கிய பதிவு  முழுமையாகப் படிக்க வலைப்பதிவு : எங்கள் Blog  பதிவு : திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி - மோர் ரசம் மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வ...

சிகரம் வலைப்பூங்கா - 02

Image
வலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். ' எனது கவிதைகள் ' வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் தனது கவிதைகளுடன் திரையிசைப் பாடல்களும் ஒலிபரப்பான ' கவிதையும் கானமும் ' நிகழ்ச்சியை எழுத்து வடிவில் நமக்குப் படைத்தளித்திருக்கிறார். அவர் தனது 'நிழல் உலகம்' என்னும் கவிதையில் இப்படிக் கூறுகிறார்.  இளைப்பாறுதல்களும் எல்லை மீறுதல்களும் மலிந்து கிடக்கும் இவ்வுலகில் பொய் முகத்துடனும் புனை பெயருடனும் ஒரு வேளை நீயுமிருக்கலாம் என்ற எண்ணம் வரும் போது மட்டும் ஒரு கணம் நின்று - பின் துடிக்கிறது இதயம் இப்படியாக அவரது பல கவிதைகளை ' கவிதையும் கானமும் ' பதிவில் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி வடிவிலும் கேட்டு மகிழலாம்.  ஒரு படைப்பை படைப்பாளனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் வாசகனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாசகனின் பார்வை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். எழுத்தாளன் சிந்திக்காத கோணத்தையெல்லாம் வாசகன் சிந்தித்து அறிவான். எழுத்தாளன் ஒரு படைப்பை ஒரு தடவை தான் எழுதுகிறான்....

தமிழ் வரலாற்றுப் புதினங்கள் - கால வரிசை

வணக்கம் வலைத்தள வாசகர்களே! தமிழில் இதுவரை பல்வேறு வரலாற்றுப் புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை இப்பதிவு அக்கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. உங்கள் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. 1895 முதல் வரலாற்றுப் புதினங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சுமார் 130 வருடகாலமாக வெளியிடப்பட்ட புதினங்களை கதைக்களத்தின் கால வரிசையில் வகைப்படுத்துவதே இப்பதிவாகும். வாசகர்களாகிய உங்கள் ஒத்துழைப்பு இத்தொகுப்பை மேலும் பயனுடையதாக ஆக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்தத் தொகுப்புக்காக தகவல்களைத் தேடிய போது ஒரே கதை ஒவ்வொருவராலும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆகவே முதலில் தமிழர்களின் சரித்திரத்தை யாரேனும் காலங்களினால் வகைப்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வரலாற்றுப் புதினங்கள் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். இப்போது தொகுப்பு உங்களுக்காக இங்கே: கி.மு 200 ( வானவல்லியை அடிப்படையாகக் கொண்டு காலம் கணிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் காலத்தை குறிப்பிடவில்லை) கரிகால் வளவன் -  சோழர்களின் வரல...

டுவிட்டர் @newsigaram - 07

Image
# ஆசை க்கு ஒரு பெண் குழந்தை ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை - இது பழசு . ஆசைக்கு ஒரு ஆண்ட்ராய்டு போன் சார்ஜ் க்கு ஒரு சாதா போன் - இது புதுசு # நியாயத்தை கேட்கும் / பேசும் பெண்களுக்கு இந்த சமூகம் வாயாடி என பெயர் வைத்திருக்கிறது ! # கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் தோற்றம் மறைவு வருடங்களை கூட்டிக் கழித்து பார்த்து விடைக்கேற்ப வருந்திவிட்டு நகர்கிறது மனசு!!! # ஒருவருக்கு நம்மை இப்போதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் ...... பெரும்பாலும் நம்மிடம் அவருக்கான தேவைகள் முடிந்து விட்டதாகவும் இருக்கலாம் .....! # நீ யாருக்கோ செய்த மவுன அஞ்சலியை பார்த்ததும் எனக்கும் செத்து விட தோன்றியது -தபூசங்கர் # இன்றையத் தேவைக்குப் பேனாவைத் தேடுகையில் நேற்று தேடிய பென்சில் கிடைக்கும். தேடினால் ஏதாவது கண்டிப்பாகக் கிடைக்கும். தேடுங்கள். # எது உண்மையில் தோல்வி என்றால், எமக்கு ஏற்படும் தோல்வியில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளாதது தான்!! # பேசிப் பேசியே கழிந்தன ஐம்பதாண்டுகள் பேசியவை பிழையென இனி பேசலாம் -யுகபாரதி # நண்பர் 1 : மொட்டை மாடில தூங்க போறேன்னு ஸ்டேட்டஸ் போட்டது தப்ப போச்...

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

Image
இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு! வணக்கம் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களே! இப்பதிவு உங்களின் முக்கிய கவனத்திற்குற்பட வேண்டும் என விரும்புகிறேன். "சிகரம்" இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விபரங்களைத் திரட்ட மற்றும் ஆவணப்படுத்த எண்ணியுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது. உங்கள்  அல்லது நீங்கள் அறிந்த இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளை பின்வரும் விபரங்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள். வலைப்பதிவு முகவரி: வலைப் பதிவர் பெயர்: வலைப் பதிவின் பெயர்: வலைப்பதிவு விளக்கம்: ஆரம்பிக்கப்பட்ட திகதி: சொந்த இடம்: தற்போதைய வசிப்பிடம்: அனைத்து விபரங்களையும் பின்னூட்டம் மூலமாகவோ , இவ்வலைத்தளத்தின் வலது பக்கப்பட்டியிலுள்ள "அஞ்சல் பெட்டி" ஊடாகவோ அல்லது மேல்பக்கப் பட்டியிலுள்ள "தொடர்புகளுக்கு" இல் உள்ள விபரங்களினூடாகவோ அனுப்ப முடியும். 31.08.2014 க்கு முன்னர் முடிந்தவர்கள் அனுப்பி வைக்கவும். ஆனால் இது இறுதித் திகதி அல்ல. இம்முயற்சியில் இணைந்துகொள்ள / கைகோர...

மீண்டும் அதிசயா.

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது ஒரு வித்தியாசமான - முக்கியமான பதிவு. அதிசயா. நாம் அறிந்த ஒருவர் தான் - வலைகளின் முட்கள் நிறைந்த பாதைகளில் நம்மோடு சில காலம் பயணித்தவர்தான் . அவர் தனது கல்வி செயற்பாடுகள் காரணமாக இப்போது வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லை. முகநூலில் மட்டும் அவ்வப்போது தனது குட்டிக் கவிதைகளை வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனாலும் அது அவரது வளர்ச்சியில் இத்தனை முக்கிய பங்கு வகித்த வலைத்தளத்தினூடாக வெளிவருவது தானே பெருமை? நான் வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்டவர் தான் அதிசயா. நாங்கள் பல தடவைகள் கைப்பேசியினூடாக உரையாடியிருக்கிறோம். எங்கள் சுக துக்கங்களை பரிமாறியிருக்கிறோம் . எப்போது பேசினாலும் நான் அவரிடம் மறக்காமல் கூறும் ஒரு விடயம் உண்டு. அது, அடிக்கடி வலைத்தளத்தின் பக்கம் வாருங்கள் என்பது தான். ஆனால், அது அவரால் முடியவில்லை. அதனால் தான் நான் அவரது முகநூலில் அவரால் கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவிடப்பட்ட குட்டிக் கவிதைகளைத் தொகுத்து பதிவாக இங்கு வெளியிடுகிறேன். இதற்கு அனுமதியளித்த அதிசயாவுக்கு மிக்க நன்றி. இப்பதி...

2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01

Image
இந்த இடுகைக்கு செல்லும் முன்னர் வாசகர்கள் தயவு செய்து எனது முன்னைய வலைப்பதிவான 'தூறல்கள்' வலைப்பதிவிற்கு சென்று உலக அழிவு தொடர்பில் நான் ஏற்கனவே இட்ட இரு இடுகைகளையும் வாசித்துக் கொள்ளவும். இடுகை - 01  உலகம் அழியப் போகிறதா?  இடுகை - 02  உலக அழிவு எப்படி இருக்கும்? இது தொடர்பில் வலைத்தளங்களில் ஏற்ககனவே இடப்பட்டுள்ள இடுகைகளின் திரட்டு. 1. உலகின் பொற்காலம் - 2012 mangaimano.wordpress.com 2. 2012இல் என்ன நடக்கப் போகிறது? mjmnashath.blogspot.com 3. உலகின் இறுதி நாள்  indiathendral.blogspot.com 4. பூமியைத் தாக்கவுள்ள விண்கல் – 2036 இல் பேரழிவு அபாயம்? meenmagal.net 5. உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது? ( Will the world see its end? ) koodal.com 6. 2012.12.22 ம் நாள் உலக அழிவு ஏற்படும்? kalamm.blogspot.com 7. உலகம் எப்போதுதான் அழியும்? panangkudil.blogspot.com 8 . உலக அழிவு - 3 : மாயன் காலண்டர் coolaaary.blogspot.com 9 . உலக அழிவு உண்மைதான்! wikileek.blogspot.com 10. 2012ல் உலகம் அழிந்...