Posts

Showing posts from June, 2020

ராஜா ராஜா தான்!

Image
இளையராஜா!  எப்போதுமே இசையின் ராஜா தான்.  அண்மையில் அவரது பிறந்த நாளின் போது வானொலியைக் கேட்க நேர்ந்தது.  அப்போது சில பாடல்களை கேட்டேன்.  என்ன சொல்ல?  ஆஹா.... சிறப்பு...  ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... இதயம் ஒரு கோவில்  என்ன சத்தம் இந்த நேரம்  குருவாயூரப்பா  பாடறியேன் படிப்பறியேன்  சொர்க்கமே என்றாலும்  தென்மதுரை வைகை நதி  கரகாட்டக்காரன்  இதெல்லாம் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.  இது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. கேட்டது இவ்வளவு தான்.  வருடம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  அப்படி ஒரு மாயவித்தை அந்த பாடல்களுக்குள் இருக்கிறது.  அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.  மீண்டும் சந்திப்போம்!

பதினைந்தாம் ஆண்டில் கால் பதிக்கும் 'சிகரம்' !

Image
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். வருடாவருடம் இந்த பதிவை எழுதுவதை தவிர, பாரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை.  இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், பதினான்கு ஆண்டுகளைக் கடந்து பதினைந்தாம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !.  2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பயணம். எங்கெங்கோ தடம்மாறிச் சென்றுகொண்டே இருடிக்கிறது.  இலக்கை நோக்கிய பயணம் என்று சொல்லிக் கொண்டாலும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் இலக்கு காணப்படாதபோது எதை நோக்கிப் பயணிப்பது? பயணம் சில நேரங்களில் உற்சாகமாக இருந்தாலும், பல நேரங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.  என்றாலும், மனதுக்குள் ஓர் குரலின் உந்துதல்!  என்னை முன்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறது.  இதோ இலக்கை நோக்கி வந்துவிட்டோம் எனும் போதெல்லாம், இலக்கு ஒரு கானல் நீராக மாறிவிடுகிறது.  என்றாலும், ஒரு தீராத தாகம்!  வெற்றிபெற்றேயாக வேண்டும் எனும் ஏக்கம்.  ஆனால், அந்த வெற்றியைப் பெறுவது எப்போது என்பதை சிந்திக்கும் போதுதான்... ம்ம்ம்... அண்மையில் ' வலை ஓலை ' வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டது.  இதுவரை, 43 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  ஆனால், வலைத்தளத்தின் பயன்பாடு என