Posts

Showing posts from February, 2017

தொடர்பு கொள்ளுங்கள்!

வணக்கம். 'சிகரம்' இணையத்தளம் விரைவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதே எமது கொள்கை. ஆகவே உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளமே 'சிகரம்' ஆகும். இது யாருடையதும் தனிப்பட்ட இணையத்தளமல்ல. மக்களின் பங்களிப்புடன் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு செல்லப்போகும் ஒரு ஊடகம். ஆகவே உங்கள் அனைவரினதும் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். பின்வரும் முறைகளில் உங்கள் படைப்புகளை எங்கள் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பி வையுங்கள். தமிழை வளர்க்க பங்களிப்போம் வாரீர்! நமது இணையத்தளம் # https://sigaram.co/ நமது வலைத்தளம் # http://sigaramco.blogspot.com/ பேஸ்புக் பக்கம் # https://www.facebook.com/SigaramCo-1879019562334897/ பேஸ்புக் தளம் # https://www.facebook.com/profile.php?id=100015435425786 டுவிட்டர் # https://twitter.com/sigaramco மின்னஞ்சல் # sigaramco

சிகரம் - தூரநோக்கு மற்றும் இலட்சிய நோக்கு!

"சிகரம்" கையெழுத்துப் பிரதியாக தனது பயணத்தை மேற்கொண்டிருந்த நேரத்தில் 75 ஆவது பிரதியை வெளியிடும் வேளையில் தூரநோக்கு, இலட்சிய நோக்கு மற்றும் இலக்கு ஆகியன முதன் முதலில் வரையறை செய்யப்பட்டன. 2006 ஆம் ஆண்டு "சிகரம்" கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய போதிருந்தே அதனை நிறுவனமாக்கும் கனவையும் கொண்டிருந்தேன். ஆகவே அதற்கான ஒரு படியாக நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் கீழ்வரும் வாசகங்கள் உருவாக்கப்பட்டன. கையெழுத்துப் பத்திரிகை வலைத்தளமாகி இன்று  https://www.sigaram.co/  என்னும் முகவரியில் ஒரு இணையத்தளமாக பரிணமிக்கும் இவ்வேளையில் இவ்வாசகங்களை நினைவு கூர்வது அவசியம் என்பதால் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம். இவற்றில் காலத்தின் தேவை கருதி சில திருத்தங்கள் 2017.06.01 திகதிக்கு முன்பதாக மேற்கொள்ளப்படும். "சிகரம்" தனது பதினோராவது ஆண்டு நிறைவை ஜூன் மாதத்தில் கொண்டாடும் வேளையில் உலக அரங்கில் தமிழுக்கான தனித்துவமிக்க அடையாளமாக மிளிர்வதற்கான பாதையில் புதிய பரிணாமத்தில் "சிகரம்" பயணிக்கவுள்ளது என்பதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.  எமது தூர

நாளைய தமிழக முதல்வர் யார்?

வணக்கம்! இன்றைய தமிழக அரசியல் சூழலில் #tn_sasikala #TamilnaduRevolution #RIPADMK #Enforce_President_Rule_in_TN #TnsaysNotoSasikala #TNneedsReElection போன்ற குறிச்சொற்கள் (Hashtags) சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றன. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டது முதல் தமிழகம் தள்ளாடிக்கொண்டுதான் இருக்கிறது. ஜெயலலிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் தமிழக மக்கள் அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் தமிழக முதல்வராகும் வாய்ப்பை அளித்தனர். ஆனால் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மரணப் படுக்கையில் வீழ்ந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருதப்பட்டாலும் எதிர்த்துக் கேட்பாரில்லை. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்பது வெளியுலகுக்கு இன்னமும் தெரியாத வகையில் ரகசியம் பேணப்பட்டு வருகிறது.  மாண்புமிகு தமிழக முதல்வர் திருமதி சசிகலா நடராஜன் வருகிறார்! பராக்! பராக்!! பராக்!!! - என்று கடந்த சில நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் கூறிக

SIGARAM.CO - சிகரம் இணையத்தளம் உருவாகிறது!

Image
நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் உதயமாகிறது என்னும் மகிழ்ச்சியான செய்தியை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் 'சிகரம்' இணையத்தளம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. வடிவமைப்புப் பணிகள் கடந்த மாதம் (தை 2048) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துர்முகி வருடம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் நான்காம் நாள் (2017.02.16) அன்று வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து எனது கைகளுக்கு இணையத்தளம் ஒப்படைக்கப்படும். மாசி மாதம் ஏழாம் நாள் (2017.02.19) அன்று உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளேன். வடிவமைப்புப் பணிகளில் ஏதேனும் தாமதங்கள் நேர்ந்தாலோ அல்லது ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள நேர்ந்தாலோ மாசி மாதம் இருபத்தோராம் நாள் (2017.03.05) உங்கள் பார்வைக்கு 'சிகரம்' இணையத்தளம் சமர்ப்பிக்கப்படும். பதிவுகள் இடப்பட்டு முழுமையான பாவனைக்குரிய தளம் வைகாசி மாதம் பதினெட்டாம் நாள் (2017.06.01) அன்று உங்கள் எண்ணங்களுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது. 'சிகரம்' வலைத்தளத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களாக நீங்கள் நல்க

ஏறு தழுவும் உரிமை மீட்க வெகுண்டெழுந்தான் செல்லினத்தமிழன்! - 03

Image
வணக்கம். ஏறு தழுவும் உரிமை மீட்க தொடங்கிய இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழக அரசு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம், நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ( பிப் 05 - 2017 ) மிகக் கோலாகலமாக, மிக வெற்றிகரமாக இளைஞர்களுக்கு நன்றி கூறி நடாத்தி முடிக்கப் பட்டுள்ளது. மேலும் பாலமேடு மற்றும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இவ்வாரம் ( பிப் 09, 10 - 2017 ) ஏறு தழுவும் விளையாட்டு இடம்பெறவுள்ளது. எந்தக்காலத்திலும் ஏறு தழுவும் விளையாட்டு நடாத்தப்படும் நேரத்தில் தமிழக இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. ஜல்லிக்கட்டு அமைப்போ அல்லது தமிழக அரசோ ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் என்னும் இவ்வெற்றிக்கு உரிமை கோர முடியாது. தமிழக அரசு மக்களின் எண்ணத்தை நிறைவேற்றிய கருவி மட்டுமே. இளைஞர்களின் எழுச்சிக்கு தலைவணங்குகிறேன்!   ஏறு தழுவும் உரிமை மீட்க இலட்சக்கணக்கில் திரண்ட இளைஞர் கூட்டத்தைப் பார்த்து உலகமே வியந்து போனது. பயன் தருமா

தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும்!

அண்மையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நிகழ்வொன்றில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சாடியிருந்தார். நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் ஒரு குழுவாக இணைந்து திரைப்படத்தை உருவாக்கினால் தமிழ் ராக்கர்ஸ் அதை இணையத்தில் வெளியிட்டு இன்புறுகிறார்கள். அவர்களை இன்னும் ஆறு மாதத்தில் கண்டுபிடித்து அழிப்பேன் என சூளுரைத்தார். இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் பல்வேறு தொழிநுட்பங்களினால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் திரையரங்குகளும் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கி வரும் நிலையில் மக்கள் இறுவட்டுக்களையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளங்களையும் நாடிச் செல்வது ஏன்? இதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சரி செய்யாமல் இணையத்தளங்களைக் குறை கூறுவது நியாயமில்லை.  காரணம் திரையரங்கக் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. சாமானியன் நெருங்கக் கூடிய இடத்தில் திரையரங்குகள் இல்லை. ஆக இறுவட்டுக்களும் இவ்வாறான இணையத்தளங்களுமே மக்களின் திரைப்படப் பொழுதுபோக்கிற்கு தீனி போடுகின்றன. வாழ்க தமிழ் ராக்கர்ஸ்! இவர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். திரைத்துறை ஏழை எளிய மக்களுக்கானதாக்கப்பட வேண

இலங்கையின் 69வது சுதந்திர தினம்

Image
இன்று (பிப்ரவரி 04 ) இலங்கை தேசத்திற்கு சுதந்திர தினமாம். 'நா இங்க இல்ல' என்ற வடிவேலு பாணியில் 'நா அடிமையா இல்ல' என்று வருடா வருடம் நம் நாட்டு மக்களைக் கூப்பிட்டு அறிவிக்கும் நாள். இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் அனைத்தும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்தன. 1948 இல் ஆங்கிலேயர் விட்டுச் சென்றதை விட மோசமான நிலையிலேயே இன்று நம் நாடு உள்ளது. பொருளாதாரம், அரசியல் மற்றும்  கல்வி போன்ற அனைத்திலுமே பின்தங்கிய நிலையிலேயே உள்ளோம். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்ற கருத்தும் இன்று நம்மில் பலரிடையே உள்ளது. ஆங்கிலேயர் சென்ற பின்புதான் இனவெறி, அரசியல் பகைமைகள் மற்றும் ஊழல்கள் ஆகியவை பல்கிப் பெருகி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தன. ஆங்கிலேயரின் அரசியலமைப்பில் தமிழர்களுக்கு பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  ஆனால் சிங்களவர்களின் கையில் ஆட்சி ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமிழர்களை அழித்தொழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக சுதந்திரம் பெற்ற கையோடு தனிச்சிங்கள சட்டம் அமுல்படுத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். இன்று

சிகரம் பாரதி - 0006

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று (2016.01.31) கே.டிவி யில் பள்ளிக்கூடம் திரைப்படமும் ராஜ் டிவி யில் பெண்மணி அவள் கண்மணி திரைப்படமும் ஒளிபரப்பானது. பள்ளிக்கூடம் திரைப்படம் நம்மை நம் பாடசாலைக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. நாமும் நமது பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிந்திக்கவைத்திருக்கிறது திரைப்படம். பெண்மணி அவள் கண்மணி திரைப்படம் நடிகர், இயக்குனர் விசுவினுடையது. விசுவின் திரைப்படங்களில் கருத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது. பெண் கொடுமை, மாமியார் கொடுமை எனப் பல கோணங்களில் பேசுகிறது திரைப்படம். சொல்வதற்கென்ன, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அருமையான திரைப்படம். பாடல்களும் அருமை. நீங்களும் ஒருதடவை பார்த்து ரசியுங்களேன்..