Posts

Showing posts with the label வானவல்லி

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03

Image
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03 முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.  'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.  அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.  அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.  அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.  அத்துடன் என்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02

Image
வான வல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01 இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02  வானவல்லி! நண்பர் வெற்றிவேல் முதன்முதலில் எனக்கு அறிமுகமான வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்த தொடர்.  ஒரு பத்துப் பதினைந்து அத்தியாயங்கள் வலைத்தளத்தில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.  பின்னர் அதனை இடைநிறுத்திவிட்டு புத்தகமாகவே வெளியிட தீர்மானித்தார் வெற்றி.  https://iravinpunnagai.blogspot.com/2013/12/1.html   வலைத்தளத்தில் வெளியிட ஆரம்பித்த போதே பாரிய வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தை மட்டுமேனும் வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம் என ரசிகர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.  ஆனால் வலைத்தளத்தில் வாசித்த போது எஞ்சியிருந்த எதிர்பார்ப்பே நாவலை வாசிக்க உதவியது என்றாலும் மறுப்பதற்கில்லை.  அதே போல், நான் உட்பட பலரினதும் விருப்ப நாவலாக / புதினமாக இருப்பது பொன்னியின் செல்வன்.  அந்த நாவலின் சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் சற்றும் குறையாமல் எனக்குத் தந்திருந்தது வானவல்லி.  அத்துடன் வானவல்...

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01

வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். "வானவல்லி" - நமது தோழர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் உருவான சரித்திரப் புதினம். பல தடைகளைத் தாண்டி வெற்றிவேலின் கன்னி நாவல் களம் கண்டிருக்கிறது. பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினங்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் 'வானவல்லி'யை வெளியிட்டதன் மூலம் தனிச் சிறப்பை இந்நூலுக்கு வழங்கியுள்ளது எனலாம். தமிழர்களின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பல நூறு புதினங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஆனால் கதை நிகழும் கால அடிப்படையில் புதினங்களை யாரும் வகைப்படுத்தவில்லை. இதை ஒரு பெருங் குறையாகவே நான் காண்கிறேன். வானவல்லி கி.மு. 175 இல் நிகழும் கதை என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆகவே வானவல்லியை முதல் தகவலாக இணைத்துக் கொண்டு புதினங்களை அவற்றின் கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சித்து வருகிறேன். இயன்ற நண்பர்கள் உதவுங்கள். 'வானவல்லி' கி.மு 175 இல் வாழ்ந்த கரிகால் வளவன் என்னும் சோழனின் வரலாற்றை புதினமாகப் படைத்துள்ளார் வெற்றி. இது வெற்றியின் முதல் புத்தகம்- முதல் புதினம். ஆனால் ஏனோ தானோவென்று எழுதாமல் தேர...

'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! 'வானவல்லி' நமது வலைத்தள நண்பர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் கருவாகி கைவண்ணத்தில் உயிராகி வெளிவந்திருக்கும் வரலாற்றுப் புதினம். 'வானவல்லி'க்காக ஒரு நேர்காணல் வேண்டும் என நண்பர் வெற்றியிடம் கேட்டேன். 'ஆகட்டும்' என உடன் ஒப்புக் கொண்டவர் பதில்களை 'வானவல்லி' வெளியானதும் தருகிறேன் என்று கூறினார். அத்துடன் 'நண்பா, நான் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் மாணவப் பத்திரிக்கையாளராக பணியாற்றியபோது ஒரு விடயத்தை அறிந்து கொண்டேன். அதாவது நமது கேள்விகள் மட்டுமே நேர்காணல் கொடுப்பவரை மட்டும் அல்லாமல் நம்மையும் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தும் என்று. ஆதலால் வழக்கமாக தொடுக்கப்படும் கேள்விகள் மட்டும் அல்லாமல் வாசிப்பவரையும் தூண்டும் விதத்தில் கேள்விகள் அமைவது சிறப்பு.' என்று ஆலோசனையும் கொடுத்தார். தற்போது 'வானவல்லி' வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நான் 'வானவல்லி'யை நம்மபுக்ஸ் என்னும் இணையத்தளத்தின் மூலம் கொள்வனவு செய்தேன். ஆனால் நூலை இலங்கைக்கு தருவிப்பதற்குள் போத...