வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01
இணைப்பு: https://newsigaram.blogspot.com/2016/11/vaanavalliyudan-oru-sariththirap-payanam-01.html
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 02
https://newsigaram.blogspot.com/2021/04/vaanavalli-reading-experience-2.html
வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 03
முதலில் வானதி பதிப்பகத்தாரின் பதிப்புரை ஒரு பெரும் எதிர்பார்ப்பை நமக்குள் உருவாக்குகிறது.
'இப்புதினத்தை வாசித்தவர்கள் வாசித்தவர்கள் ஓரளவு சங்ககாலத் தமிழர் வரலாற்றை அறிந்தவர்கள் ஆவார்கள்' என்ற அவர்களது ஒரு வரி போதும், நாவலின் பெறுமதியை உணர்த்துவதற்கு.
அடுத்து, வானவல்லி எழுதத் தொடங்கிய பிறகு தான் சங்க இலக்கியங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வாசிக்க ஆரம்பித்தேன்' என்று என்னுரையில் கூறுகிறார் வெற்றி.
அவரை புதிதாக அறிபவர்களும், இந்த புதினத்தை முதலாவதாக வாசிப்பவர்களும் இந்த கூற்றின் மேல் கொள்ளும் நம்பிக்கையை, புதினம் வாசித்து முடித்த பின்னர் தகர்த்தெறிந்து இருக்கிறார் அவர்.
அதுவே வானவல்லி புதினத்தின் வெற்றியும் கூட.
அத்துடன் என்னுரையில் ஓரளவு தேவையான விளக்கத்தை வழங்கியிருப்பதால், தெளிவுடன் புதினத்துக்குள் நாம் நுழைய முடிகிறது.
இந்த புதினத்தை வாசிப்பவர்களின் முதலாவது கேள்வி யார் இந்த வானவல்லி? என்பதுதான்.
அதற்கு முதல் அத்தியாயத்திலேயே விடை இருக்கிறது. பெருவணிகன் வேளாதனின் மகளின் தோழிதான் வானவல்லி.
வணிகன் மகளின் தோழியா அவர்?
அவரை அரசியாகவோ, இளவரசியாகவோ எண்ணியவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
இப்போது அடுத்த கேள்வி எழும்.
ஒரு வணிகன் மகளின் தோழியான வானவல்லி, கதையின் நாயகியானது எப்படி?
அதுதானே மிகுதிக் கதை?
வாங்க வாசிக்கலாம்...
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்