Posts

Showing posts from May, 2018

மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01

Image
மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர்.  'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.  'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார்.  'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம். 'சாரல் நாடன்' - சில முக்கிய குறிப்புகள்: * இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர் என்ற வகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.  * இலங்கை சமாதான நீதிவானாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். * 'சாரல் வெளியீட்டகம்' இன் உரிமையாளரான இவர

பாஸ் என்கிற பிக்பாஸ் - 001

Image
ஹாய்டா மச்சி! ஹாய். வா மச்சி... ஆமா, நாட்டு நடப்பு என்ன சொல்லுது? நாட்டு நடப்பு என்ன சொல்லுதுன்னே புரியல மச்சி... ஏன்டா சலிச்சுக்கிற? வேற என்னடா பண்றது? நம்ம நெலமை அப்படி... அதுசரி. மொபைல்ல என்னடா ரொம்ப நேரமா நோண்டிக்கிட்டிருக்க? அதுவா? நம்ம பிக்பாஸ் இரண்டாவது சீஸனும் துவங்கப் போகுதில்ல? ஆமா மச்சி, நானும் கேள்விப்பட்டேன். எப்போ ஆரம்பிக்குது? ஜூன் 17ஆம் திகதி ஆரம்பிக்குதுன்னு சொல்றாங்க. அப்படியா? ஆமா, நம்மவர் கமல் தான் இந்த முறையும் தொகுத்து வழங்கப் போறார்! அவர் தான் அரசியல் வாதியாகிட்டாரேடா? ஏன் அரசியல் வாதின்னா நிகழ்ச்சி பண்ணக் கூடாதா என்ன? பண்ணலாம்... பண்ணலாம்.... ம்ம்... இந்த முறை பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரா இருக்கும்னு நெனைக்கிற? இப்போ தானேடா நிகழ்ச்சியே அறிவிச்சிருக்காங்க? அதுக்குள்ளே எப்படித் தெரியும்? தெரியுமே... அத தான் மொபைல் ல பாத்துக்கிட்டிருந்தேன். நம்ம டைம்ஸ் ஆப் இந்தியா இணையத்துல போட்டிருந்தாங்க... தகவல் உண்மைதானா? அவங்களும் ஊகத்துல தான் போட்டிருக்காங்க. ஆனா, எப்படியாச்சும் தகவல் கிடைச்சிருக்கும்.

ஐபிஎல் கிண்ணத்தை தனதாக்கியது சென்னை! #WhistlePodu #CSK

Image
சென்னை மீண்டும் ஐபிஎல் வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கியிருக்கிறது. கோடிக்கணக்கான சென்னை ரசிகர்களின் கனவு நனவாகியிருக்கிறது. இரண்டாண்டு கால தடைக்கு தக்க பதிலடியைத் தந்து தனது மீள்வருகையை அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கிறது சென்னை. ஐபிஎல் 2018 இன் முதல் போட்டியில் வெற்றி பெற்று பயணத்தைத் தொடங்கிய சென்னை அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று ஐபிஎல்லின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து வைத்திருக்கிறது. சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்.  2013, 2015 மற்றும் 2017 ஆகிய பருவங்களில் ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது மும்பை அணி. இந்த சாதனையை 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றி சமன் செய்திருக்கிறது சென்னை. இந்த இரண்டு அணிகள் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரு தடவை (2012 & 2014), ராஜஸ்தான் ஒரு தடவை (2008), டெக்கான் சார்ஜர்ஸ் ஒரு தடவை (2009) மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு தடவை (2016) கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ்  2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று பருவங்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் 2008, 2012, 2013 மற்றும்

ஐ.பி.எல் 2018 - சென்னை எதிர் ஹைதராபாத் - இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?

Image
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இரண்டு மாதங்கள் - 60 போட்டிகள் - எட்டு அணிகள் என நம்மை மகிழ்வித்த இருபது-20 கிரிக்கெட் திருவிழாவின் வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தருணம் வந்து விட்டது.  ஐபிஎல் 2018 இல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களையும் கைப்பற்றிய இரண்டு அணிகளும் மீண்டும் பலப்பரீட்சை நடத்தப் போகின்றன. முதலாவது தகுதிகாண் போட்டியில் பரபரப்பான இறுதிக் கட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுநர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்த போட்டிக்குத் தேர்வானது. இரண்டாவது தகுதி காண் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தேர்வானது ஹைதராபாத். ஐபிஎல் 2018 இன் இறுதிப்போட்டி 2018.05.27 இன்று இரவு 07 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. சென்னை அணி ஏழாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. சென்னை இரண்டு முறை ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் சன் ரைசர்ஸ் இதுவரை ஒரு தடவை மட்

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

Image
பிக் பாஸ் தமிழ் - 02 ஜூன் 17 ஆம் திகதி முதல் உங்கள் விஜய் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது. தற்போது பிக் பாஸ் தமிழ் - 02 குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நமக்குக் கிடைத்த வண்ணமிருக்கின்றன. அவற்றின் தொகுப்பே இந்தப் பதிவு! வாங்க போகலாம். பிக் பாஸ் வீடு இப்படி இருக்குமோ? பிக் பாஸ் இப்படியா நடக்கும்? இவிங்க தான் அவிய்ங்களா? ம்ம்... நடத்துங்க... நடத்துங்க.... #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ்2 #கமல் #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #VijayTV #StarVijayTV #KamalHassan #Maiam #BiggBossTroll #BiggBossMemes #TamilMemes #Sigaram #SigaramCO #சிகரம் 

நுட்பம் - தொழிநுட்பம் - 03

Image
'மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது' என்கிற வார்த்தை தொழிநுட்ப உலகிற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும். தொழிநுட்ப உலகின் மீது பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டாலும் தீர்வுகளை நோக்கி நிதானமாக நகர்ந்து வருகிறது தொழிநுட்ப உலகம். தற்போது தொழிநுட்ப உலகில் நடைபெற்று வரும் மாற்றங்களின் தொகுப்பே இப்பதிவு. வாங்க போகலாம்.  விசா அட்டையின் புதிய அம்சம்  விசா அட்டை (Visa Card) என்றாலே அனைவருக்கும் தெரியும். கடனட்டை, வரவட்டை இரண்டையும் விநியோகிப்பதில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனம் தான் விசா. இந்த விசா அட்டையில் தற்போது Pay Wave என்னும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  நீங்கள் கடைகளில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது POS என்னும் இயந்திரத்தில் உங்கள் அட்டையை தேய்ப்பார்கள். அதன் பின்னரே உங்கள் பணம் விற்பனையாளருக்குச் சென்று சேரும். இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ததும் POS இயந்திரத்திற்கு அருகில் உங்கள் அட்டையை காட்டினால் போதும். உங்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டு விடும். எப்பூடி? கூகுளின் goo.gl சேவைக்கு மூடு விழா! கூ

மலையகமும் மறுவாழ்வும்

Image
இலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஐவர் மூன்று தசாப்தங்கள் கடந்து இலங்கை வந்திருந்தனர். கேகாலை மாவட்டத்தில் இருந்து தமிழகம் சென்ற (ஈழம் மலர் மன்னன்) தம்பிராஜா (தமிழகத்தில் கிராம அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), ஆகரப்பத்தனை டொரிங்டன் பகுதியில் இருந்து சென்ற செவந்தி (இவர் நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்), தலவாக்கலை பகுதியில் இருந்து சென்ற பூபாலன், நாவலப்பிட்டி பகுதியில் இருந்து சென்ற ஜெயசிங் (இவர்கள் இருவரும் வங்கி அதிகாரிகளாக பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளனர்) ஆகியோருடன் இரத்தினபுரி, லெல்லோபிட்டிய தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழகன் (ராமச்சந்திரன்) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.  தெளிவத்தை ஜோசப் திருச்சியில் வழக்கறிஞராக பணியாற்றும் தமிழகன் 2015 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கை திரும்பி பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்புகள் ஊடாக தனதும், இலங்கை மலையக எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் இணைத்ததாக மலையகமும் மறுவாழ்வும் எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை தொகுத்திர

வாழ்தலின் பொருட்டு - 05

Image
கருத்த இவ்விருளைக் குழைத்து பொட்டிட்டுக் கொண்டபின் இருவிழி மூடி அவ்விருளின் நிறம் அப்பிய கணத்தில் பறக்கத் துவங்கியது பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்! நேற்று சமைத்த பாத்திரத்தில் மீந்த சோறாய் காய்ந்து ஒட்டிக் கொண்ட நினைவுகளை அகற்ற தோதாய் ஊற வைக்கிறேன் உள்ளத்தை ! ஆவியில் அவித்த இட்லியாய் விண்டு விழுங்கிவைத்தும் நினைவைச் செரிக்கும் அகத்தினை பெற்றதும் வரமேதான்! அணைந்த தீபத்தின் கருகல்வாடையாய் அடைகாத்த அன்பு விழித்திரை தாண்டி படர்கிறது துளிகளாய்! எங்கோ எப்போதோ சிரித்து வைத்த, சிநேகித்த சில நொடிகள் குமிழிகளாய் உள்ளக்கிடங்கில் வெடித்துச் சிதறுகையில் கருநிற இருளில் மினுமினுக்கிறது நம்பிக்கை நட்சத்திரங்கள்...! உன்னைப் போர்த்திக் கொண்டு உறங்குதலே மீயின்பம் ஆதலால் உன்னோடு சூடுபறக்கும் ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்து பசியாற்றிக் கொள்ள என்னோடே இருந்துவிடமாட்டாயா மையிருளே? ! உடைந்த வளையல் துண்டாய் உறுத்தி ரணமாக்குகிறது வலி உள்ளத்தை! சேர்த்து வைத்த அத்தனையும் செலவழித்துத் தீர்ந்ததுபோல் திக்கற்றுத் திணறுகையில்தான் அகோரப்பசியென்று பிசைந்து நிற்கிறது பிரியம் தேடி மனது !

பயணங்கள் பலவிதம் - 04

Image
மகிழ்ச்சி! மகிழ்ச்சி எதில் இருக்கிறது? எங்கே இருக்கிறது? மகிழ்ச்சி மனதிற்கு உள்ளேயா அல்லது வெளியேவா இருக்கிறது? அதை எப்படி அடைவது? எவ்வாறு கண்டுகொள்வது? நமக்குக் கிடைக்குமா, கிடைக்காதா? ஒரு மனிதனால் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து விட முடியுமா? இக்கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது கடினம். கண்டறிந்தால் அவனை விட மகிழ்ச்சியாக யாரும் வாழ்ந்து விட முடியாது. 2018.05.19 ஆம் திகதி! ஈஸ்வரன் பிரதர்ஸ் நிறுவனத்தில் எனது ஏழு வருட சேவைக் காலத்தின் இறுதி நாள். கனத்த இதயத்துடன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். ஆறு வருடங்கள் இருப்புக் கட்டுப்பாட்டாளராகவும் (Material Controller) ஒரு வருடம் தரவு உள்ளீட்டாளராகவும் (Data entry Operator) பணி புரிந்திருக்கிறேன். மாறி வரும் வணிகச் சூழலில் நாம் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் நிறுவனங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. அவரவர் பைகளை நிறைத்துக் கொண்டால் அவரவருக்குத் திருப்தி தான்.  எனது மனைவியும் அதே நிறுவனத்தில் உதவியாளராக (Helper) நான்கு வருடங்கள் பணிபுரிந்து கடந்த 2018.04.28 திகதியில் சேவையை விட்டு வில