Posts

Showing posts with the label வாட்ஸப்

வாட்ஸப் தந்த தமிழ் கூறும் நல்லுலகம்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். வாட்ஸப்! இன்று தொடுதிரைக் கைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் இணையவழிக் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கு பெரும்பாலும் வாட்ஸப்பையே பயன்படுத்துகின்றனர். வைபர், பேஸ்புக் மெசேன்ஜர், இமோ என பலப்பல செயலிகள் இருந்தாலும் அவற்றுள் வாட்ஸப்புக்கு என தனி இடம் உண்டு. எளிமை, வசதி குறைந்த கைப்பேசியிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளமை போன்ற பல காரணிகள் மக்கள் இதனை விரும்பக் காரணமாக அமைகின்றன. குரல் பதிவு, புகைப்படங்கள், ஆவணங்கள், குரல் மற்றும் காணொளி அழைப்பு (Video Call ) மற்றும் குறுஞ்செய்திகள் என அனைத்தையும் இதனூடாக பரிமாறிக் கொள்ள முடிகிறது. வாட்ஸப் ஒரு பொழுதுபோக்கு செயலியாக மட்டுமல்லாமல் சில நேரங்களில் பயனுள்ள விடயங்களைப் பரிமாறிக் கொள்ளவும் உதவுகின்றது.  'தமிழ் கூறும் நல்லுலகம்' என்னும் வாட்ஸப் குழு தமிழ் விரும்பும் நலன்விரும்பிகளுடன் இணைந்து செயற்படும் ஒரு குழுவாகும். இக்குழு கடந்த ஒரு மாதகாலமளவில் செயற்பட்டு வருகிறது. இக்குழுவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பல்வேறு துறை சார்ந்தவர்க...

சிகரம் பாரதி - 0003

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். மீண்டும் ஒரு வாட்ஸப் பதிவுடன் சந்திக்கிறேன். வாட்ஸப் கேலி கிண்டல்களை மட்டுமல்லாது சிந்தனைக்குரிய விடயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வேறு எந்த செயலியை விடவும் வாட்ஸப் பிரபலமாக இருக்கிறது. காரணம் குறைந்த வசதிகளையுடைய கைப்பேசியில் கூட வாட்ஸப்பை பாவிக்கக் கூடியதாக உள்ளது தான். இதன் எதிர்காலத்தை மிகச் சரியாகக் கவனித்து பேஸ்புக் உரிய காலத்தில் வளைத்துப் போட்டுக்கொண்டது. வாழ்க வாட்ஸப்! வாழ்க பேஸ்புக்! # இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் . அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் (பாதை) மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்ட...

சிகரம் பாரதி - 0002

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த வாட்ஸாப்பைக் கண்டுபிடித்தாலும் பிடித்தார்கள் எங்கும் எதிலும் ஒரே கேலியும் கிண்டலும்தான். சில நேரம் ஒரே விடயத்தை பலர் ஒரே நேரத்தில் நமக்கு அனுப்பினால் சிரிப்புக்கு பதில் கோபமே வரும். என்னதான் இருந்தாலும் வாட்ஸாப் சிரிப்புக்கு நிகரேதும் இல்லை. அதில் ஒன்று உங்களுக்காக இங்கே. சிரிப்பு வராவிட்டால் நிறுவனம் பொறுப்பல்ல.  # இலங்கை அரசின் அடுத்த அதிரடி திட்டம்: அத்தனையும் இலவசம்! இலவச 4G சிம் – ஜனவரி 15-ம் திகதி முதல் BSNL புது 4G சிம் இலங்கையில் வெளி வர இருக்கின்றது… சிம் விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே. அழைப்பு நேரம்  2500 ரூபாய் இலவசம். ஒரு நாளைக்கு 1000 குறுஞ்செய்தி  இலவசமாக வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர் அழைப்பு ஒலி  இலவசம். ஆறு மாதம் இணையப் பாவனை இலவசம். கிட்டதட்ட 1200 GB இலவசமாக வழங்கப்படுகிறது. ரோமிங் கட்டணம் கிடையாது. தேசிய அடையாள அட்டை அவசியம். ஆனால்……………… சமிக்ஞைக் கோபுரம் மட்டும் நீங்கதான் நட்டுக்கணும். கோபப்படாதீங்க. எனக்கும் இப்படித்தான் அனுப்பினாங்க…. # என்ன வாசகர்களே...