Posts

Showing posts with the label செய்திகள்

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி

Image
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.  அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது.  Image Credit: Its Respective Owners only. இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார்.  சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.  இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும...

இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Image
இலங்கை, மேல் மாகாணம், நீர்கொழும்பில் இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் பாரியளவில் வெடித்ததால் நீர்கொழும்பில் உள்ள 11 பிரதேசங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  இதே வேளை, குறித்த முறுகல் நிலை தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப் படலாம் என்ற அச்சத்தில் சமூக வலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.  இதன் படி, பேஸ்புக், வாட்ஸப், மெசேஞ்சர் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எனினும் IMO என்னும் சமூக வலைத்தளம் மட்டும் தடையின்றி இயங்கி வருகிறது.  Image Credit: Virakesari.lk நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவுகின்ற போதிலும் ஆங்காங்கே நடைபெறும் சோதனை நடவடிக்கைகளும் கைப்பற்றப்படும் பொருட்கள் தொடர்பிலான தகவல்களும் தொடர்ந்தும் அச்ச நிலைமையை நீடிக்கச் செய்துள்ளன.  இலங்கை | நீர்கொழும்பில் பதற்றம் - இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்   https://newsigaram.blogspot.com/2019/05/social-media-ban-again-in-sri-lanka.html  #SocialMedia #Ban #LK #LKA #lanka #srilanka #ISIS #Te...

உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!

Image
சித்திரை விடுமுறைக்குப் பின்னர் வழமைக்குத் திரும்ப முயன்ற இலங்கை பெரும் துயரில் வீழ்ந்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் சுமார் 227 பேர் வரை பலியாகியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையிலுள்ள உணவகம், தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி ஆகியன குண்டுவெடிப்புக்கு இலக்கான பகுதிகள்.  2019.04.21 அன்று காலை முதல் மதியம் வரை எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.  கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் - 65 பேர் பலி; 267 பேர் காயம்.  மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் - 30 பேர் பலி; 75 பேர் காயம்.  நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் - 112 பேர் பலி; 100 பேர் காயம்.  தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகில் உள்ள உணவகம் - 2 பேர் பலி.  Image Credit: FB கொழும்பு தெமட்டகொட குடியிருப்பு பகுதி - 3 பேர் பலி.  கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதிகள் (ச...

சவூதி அதிகாரிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டுக்கு கஷோக்கி குடும்பத்தினர் மறுப்பு

Image
நீதிமன்றத்திற்கு வெளியில் சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், மகன்மார் பணம் பெற்றுக் கொண்டதாகவும் வெளியான குற்றச்சாட்டுகளை, படுகொலை செய்யப்பட்ட சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் குடும்gத்தினர் நிராகரித்துள்ளனர்.  “இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. யாருடனும் எந்தக் கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை” என சாலாஹ் கஷோக்கி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் நேற்று (10) தெரிவித்தார்.  Photo Credit: Google / Washington Post சாலாஹ் உள்ளிட்ட கஷோக்கியின் பிள்ளைகள் பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வீடுகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கான டொலர்கள் அதிகாரிகளினால் வழங்கப்படுவதாகவும் அமெரிக்காவின் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கடந்த முதலாம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.  சவூதி அரேபிய அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, கடந்த வருடம் அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் வைத்து, சவூதியினால் அனுப்பப்பட்ட 15 பேர் கொண்ட முகவர் குழுவினரால் படுகொலை செய்யப...

பாங்கொக் வணிக வளாகத்தில் தீ விபத்து - மூவர் பலி!

Image
பாங்கொக்கிலுள்ள வணிக வளாகமொன்றில் இன்று (10) ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.  56 மாடிகளைக் கொண்ட சென்டெரா கிராண்ட் ஹோட்டல் கட்டடத்தின் எட்டாவது மாடியில், உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து, சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  குறைந்தபட்சம் ஒருவர் கட்டடத்தில் இருந்து வீழ்ந்ததனால் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  Photo Credit: thethaiger.com  குறித்த பாரிய வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.  மாலை நேரத்தில் காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்தை சென்றடைவதற்கு தீயணைப்புப் படையினர் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்தினால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானதுடன் இருவர் வைத்தியசாலையில் பலியானதாக பாங்கொக் ஆளுநர் அஸ்ஸாவின் க்வான்முவாங் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  தீ விபத்து ஏற்பட்டமைக்கான க...

பிரெக்ஸிட்டை 2020 வரை ஒத்திவைக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

Image
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை 2020 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது.  கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைந்த பிரெக்ஸிட்டுக்கான கால எல்லையை இம்மாதம் 12ஆம் திகதிவரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்திருந்தது.  எனினும் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயின் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஆதரவளிக்கவில்லை. இதனால் மேலுமொரு குறுகிய கால நீட்டிப்பை தெரெசா மே எதிர்பார்த்திருந்தார்.  Photo Credit: Google / BBC எனினும் குறுகிய கால நீட்டிப்பை பெற்றுக் கொள்வதற்கான தெரெசா மேயின் பேச்சுவார்த்தைகளின் மீதான நம்பிக்கையற்ற தன்மை காரணமாக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரித்தானியாவுக்கு கால அவகாசம் வழங்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்ட் டஸ்க் எதிர்பார்த்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரித்தானியா தவிர்ந்த ஏனைய 27 நாடுகளின் மத்தியிலும் பிரெக்ஸிட்டை நீண்டகாலத்துக்கு தாமதப்படுத்துவதற்கான ஆதரவு அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது.  இவ்வாண்டு டிசம்பர் அல்லது 2020 மார்ச் ஆகிய ...

உலகம் | அல்ஜீரிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Image
புதிய இடைக்கால ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக அல்ஜீரிய பொலிஸார் தண்ணீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.  அல்ஜீரியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த அப்தலசீஸ் போடேஃபிலிகா, பல வார தொடர் ஆர்ப்பாட்டங்களையடுத்து தான் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.  Photo Credit: Google / BBC / Reuters இதனையடுத்து, நாடாளுமன்ற மேல் சபையின் சபாநாயகரான அப்தெல்காதெர் பென்சலாஹ் புதிய இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.  ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும்வரை பதவி வகிக்கவுள்ள பென்சலாஹ், தான் மக்களின் நலன்களுக்காகப் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.  எனினும் மக்களில் பலர் இன்னும் தீவிரமான மாற்றத்தை விரும்புகின்றனர்.  “மக்களுக்கான சொல்லை கூடிய விரைவில் மீண்டும் கொண்டு வருவதற்காக உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் கடுமையாக உழைப்பதற்காக இக் காலப்பகுதியில் இந் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அரசியலமைப்பை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என பதவியேற்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார்.  பென...