Posts

Showing posts from May, 2014

சென்னைக்கு விசில் போடு!

Image
                  ஐ.பி.எல். என்கிற இந்தியன் பிரிமியர் லீக் 20-இருபது கிரிக்கட் போட்டிகளின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். இன்னும் இரண்டே போட்டிகள். 7 வது தொடரின் மகுடம் யாருக்கென்று தெரிந்துவிடும்.            என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல் இன் ஆரம்பத்தில் இருந்தே சென்னைக்கு தான் ஆதரவு. முதல் காரணம் தோனி . அடுத்தது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்துவது என்பதாலும் இன்னபிற காரணங்களாலும். இதோ இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கப் போகும் ஆட்டத்திற்கும் சென்னை தேர்வாகியிருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் சென்னை எதிர் பஞ்சாப் போட்டியில் வெல்லும் அணிதான் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடவிருக்கிறது.                                  இந்த முறையும் ஐ.பி.எல் கிரீடத்தை சென்னை வெல்ல வேண்டும் என்பதே என் அவா. உங்களுக்கு?                     இதுவரை ஒரு மகுடத்தையேனும் வென்றிராத கிங்ஸ் இலவன் பஞ்சாப் [Kings XI Punjab ] அணி தனது புதிய வரலாற்றை படைக்க தயாராகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் [Chennai Super Kings ] அணி தனது இரண்டு மக

வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்!

Image
  * இந்த யுகத்தில் ஒளிபெற்ற பல விஷயங்களில், ஆத்மாவைப் பற்றிய உண்மை இது தான்: மனிதன் தான் , அவனது குணங்களை அமைக்கும் சிற்பி, சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டி கர்த்தா; அவனது எண்ணங்களின் தலைவன். * சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.   * ஆத்மா எதை ரகசியமாக அவாவுகிறதோ , அதை ஈர்க்கிறது. எதைக் காதலிக்கிறதோ அதைக் கவர்கிறது ; எதைக் கண்டு பயப்படுகிறதோ அதை அடைகிறது. உள்மன நிலைக்கேற்ப வெளி உலக சூழ்நிலை உருவாகிறது. சொன்னது யார்? விரைவில்.........

மீண்டும் அதிசயா.

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இது ஒரு வித்தியாசமான - முக்கியமான பதிவு. அதிசயா. நாம் அறிந்த ஒருவர் தான் - வலைகளின் முட்கள் நிறைந்த பாதைகளில் நம்மோடு சில காலம் பயணித்தவர்தான் . அவர் தனது கல்வி செயற்பாடுகள் காரணமாக இப்போது வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லை. முகநூலில் மட்டும் அவ்வப்போது தனது குட்டிக் கவிதைகளை வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் மகிழ்ச்சி தான். ஆனாலும் அது அவரது வளர்ச்சியில் இத்தனை முக்கிய பங்கு வகித்த வலைத்தளத்தினூடாக வெளிவருவது தானே பெருமை? நான் வலைத்தளங்களில் எழுத ஆரம்பித்த பிறகு என்னுடைய நண்பர் வட்டத்தில் இணைந்துகொண்டவர் தான் அதிசயா. நாங்கள் பல தடவைகள் கைப்பேசியினூடாக உரையாடியிருக்கிறோம். எங்கள் சுக துக்கங்களை பரிமாறியிருக்கிறோம் . எப்போது பேசினாலும் நான் அவரிடம் மறக்காமல் கூறும் ஒரு விடயம் உண்டு. அது, அடிக்கடி வலைத்தளத்தின் பக்கம் வாருங்கள் என்பது தான். ஆனால், அது அவரால் முடியவில்லை. அதனால் தான் நான் அவரது முகநூலில் அவரால் கடந்த நான்கு மாதங்களுக்குள் பதிவிடப்பட்ட குட்டிக் கவிதைகளைத் தொகுத்து பதிவாக இங்கு வெளியிடுகிறேன். இதற்கு அனுமதியளித்த அதிசயாவுக்கு மிக்க நன்றி. இப்பதி

இன்றைய தேவை இன்னுமோர் தொழிற் புரட்சி!

Image
வணக்கம் வாசகர்களே! மே தினக் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. கட்சிகளும் மக்களும் அவரவர் பணிகளுக்கு திரும்பியாயிற்று. இனி? தொழிலாளர் உரிமைகள்? நலன்கள்?? எல்லாமே வெறும் மேடைப் பேச்சு தானா? மே தினம் ஏன் உருவானது? வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக மட்டுப்படுத்த வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் புரட்சி செய்து வென்றதன் அடையாளம் தான் மே தினம். ஆனால் இன்று நடப்பது என்ன? எல்லோரும் சரியாக எட்டு மணி நேரம் தான் வேலை செய்கிறோமா? உழைப்பதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுகிறதா? நிறுவனங்கள் தொழிலாளர் நலன்களில் அக்கறையுள்ளவை தானா? இவை அனைத்தையும் உங்களோடு பேசுவது தான் இந்த நூறாவது சிறப்புப் பதிவின் நோக்கம். அதற்கு முன்பு என்னை இப்பதிவை எழுதத் தூண்டிய விஜய் தொலைக்காட்சியின் “ நீயா நானா – மே தின சிறப்பு நிகழ்ச்சி ” உங்களுக்காக இங்கே [இப்பதிவை வாசிக்க இந்நிகழ்சியை பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை] : அல்லது https://www.youtube.com/watch?v=wYvyjSjyE-0 என்ற இணைப்பின் மூலம் பார்க்கலாம். என்ன பார்த்து விட்டீர்களா? வலைத்தளத்திலேயே பார்க்க முடியாதவர்கள் "Watch on youtube.com" என்ற இணைப்பை