Posts

Showing posts from November, 2012

முக நூல் முத்துக்கள் - 03

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள் மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்: அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்! 01. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”. சிறுவன் முகத்தில் வியப்பு. “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”. நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...! 02. நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு கொல்லுகின்ற துன்பம் ஒ

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!

வணக்கம் வாசக உள்ளங்களே! இன்று நாம் அடுத்த தலைமுறைக்கான அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றிப் பார்க்கப் போகிறோம். இன்றைய அரசியலானது சாக்கடை அரசியல் என்றே அழைக்கப்படுகின்றது. இந்தநிலை மாறாதா என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் நம்மால் என்ன முடியும் என்கிற இயலாமை எண்ணம் காரணமாக வெறும் வாய்ப்பேச்சோடு நிறுத்திக்கொள்கிறோம். வாக்குரிமை நம்கையில் இருக்கிற வரையில் நம்மால் அரசியலில் எதுவும் செய்ய முடியும். அதற்கு சமூகத்தின் ஒற்றுமையும் துணிச்சலும் தேவை. நமக்கான எதிர்கால அரசியல் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொண்டால் விரைந்து செயலில் இறங்க வசதியாயிருக்கும் அல்லவா? பதிவில் தேவையான இடங்களில் பொருத்தமான திருக்குறள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாருங்கள் பதிவிற்குள் போகலாம். 1.கல்வி அறிவு  நம் அரசியல் வாதிகளில் பலருக்கு கல்வியறிவு என்பதே கிடையாது. இதனால் அமைச்சுப் பதவிகள், அரசாங்க சொத்துக்கள் மற்றும் மக்கள் வரிப்பணம் என்பன துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. ஆகவே அரசியல்வாதியொருவர் தேர்தல் வேட்புமனு சமர்ப்பிக்கும்போது அவரது கல்வித்தகைமையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தப்படல் வ

கற்பிழந்தவள்

Image
கனவில் கூட  கண்டதில்லை இப்படியொரு  காட்சியை  எண்ணியும் பார்க்கவில்லை  எனக்கிப்படி நேருமென்று  அன்பு காட்டி  அரவணைத்த கை  காமம் கொண்டு  கட்டியணைக்கும் என்று  பிறந்தநாள் பரிசாக - எனக்குப்  பிடித்த ஆடையைப்  பரிசாக அளித்தவரே - அதைப்  பறித்து துச்சாதன வேடம் கொள்வாரென்று  பள்ளிக்கூடம் சென்று வந்தேன்  பல கலைகள் கற்றுவந்தேன்  அனைவரிலும்  அன்பு பாராட்டினேன்  நல்லவர்கள் எல்லாம்  நம்மோடு தான் இருக்கிறார்கள் என  நம்பிக்கை கொண்டிருந்தேன்  பொய்முகம் கொண்டிங்கு  போலி வாழ்க்கை வாழ்வதேனோ  சொந்தம் என்று உறவாடும் நீங்களே  சுகம்தேடி எம்மேனி தொடலாமா  சிறுமியர் நாங்கள்  சிறுபாவமும் அறியாதவர்கள்  உலகத்தை  உங்கள் மூலம்  அறிந்துகொள்ள  ஆவலாய் இருந்தோம்  ஆனால் நாங்கள் சுயமாகவே  அறிந்துகொண்டோம் உங்கள்  அனைவரின் முகத்திரைகளும்  அகற்றப்பட்டதன் மூலம்  கன்னித்தன்மை  கொண்டவளைத்தான்  கல்யாணம் செய்யவேண்டும்  என்று  எதிர்பார்க்கும் நீங்கள்  எங்கள் 

இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணைத் தொட்டது!

Image
வணக்கம் சொந்தங்களே! இன்று இலங்கையின் மிக முக்கியத்துவமானதும் வரலாற்றில் தடம் பதித்ததுமான முக்கிய நிகழ்வொன்று சீன மண்ணிலிருந்து இடம்பெற்றிருக்கிறது. சுப்ரீம் செட் வன் (Supreme Sat One) என்னும் இலங்கைக்கு சொந்தமான செய்மதி சீனாவிலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆம் திகதி ஏவப் படவிருந்த மேற்படி செய்மதி காலநிலை சீர்கேடு மற்றும் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இன்றைய தினம் ஏவப் பட்டுள்ளது. Supreme Sat (pvt) Ltd என்னும் நிறுவனம் இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபையுடனான ஒப்பந்தத்தின் பேரில் சீனாவின்  China Greatwall Industry Corporation (CGWIC) உடன் இணைந்து  சுப்ரீம் செட் வன் (Supreme Sat One)  என்னும் செய்மதியை 2012.11.27 அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 03.45 மணியளவில் சீனாவின்  Xichang Satellite Launch Centre இல் இருந்து  Long March 3B/E Launch செய்மதித்தாங்கி மூலம் ஏவப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் உரிமையை விண்வெளியியல் பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ என்பவர் கொண்டுள்ளார். இலங்கை - சீன நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய இச் செய்மதி செயற்றிட்டத்தின் தலைமை நிறைவேற்று அதி

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09/02

Image
பகுதி - 01 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 பகுதி - 02 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 பகுதி - 03 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 பகுதி - 04 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 4 பகுதி - 05 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 பகுதி - 06 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06 பகுதி - 07 கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07 பகுதி - 08   கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08 பகுதி - 09/01   கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 0 9/01                                        ***********************************   பகுதி - 09/02 ( நேற்றைய தொடர்ச்சி...........) "ம்ம்............ நந்தினிய கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?" திவ்யா என்ன முடிவில் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் இன்னமும் யூகிக்க முடியவில்லை. 'நந்தினியா? நானா என்கிறாளா?' இல்லை 'நந்தினி தான் உனக்கு' என்கிறாளா? குழப்பத்துடன் நான் பதிலை முன்வைத்தேன்.    "இல்ல" - மனம் குழப்பத்திலிருந்தாலும் குரலில் தீர்க்க