Posts

Showing posts from 2020

வாசிப்பும் பகிர்வும் -01

Image
வணக்கம் நண்பர்களே!  நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இன்று நான் வாசித்துக் கொண்டிருக்கும் சில புத்தகங்களை பற்றி சொல்ல நினைக்கிறேன்.  முதலாவது புத்தகம் அல்ல. எதிர்காலத்தில் புத்தகமாக வெளிவரும். நண்பன் வெற்றிவேல் எழுதும் 'கரிகாலன்' தொடர்.  Image rights reserved to respective owners only. நண்பனின் முதலாவது வெளியீடான 'வானவல்லி' மிக அருமையாக இருந்தது. அதற்கு சற்றும் குறையாமல் 'கரிகாலன்' சுவாரஸ்யமாக இருக்கிறது.  ஒவ்வொரு அத்தியாயமும் சுவாரஸ்யம் குன்றாமல் வாசிக்க சொல்லி ஈர்க்கிறது. விட்டால் நாள் முழுவதும் வாசித்துக் கொண்டே இருக்கலாம்.  வார்த்தை பிரயோகங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றம் தேவை என நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் போன்றவற்றின் பாதிப்பாக இது இருக்கலாம்.  ஆனால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை என்றே சொல்ல வேண்டும். மிகுதியை பிறகு சொல்கிறேன்.  மற்றைய புத்தகங்கள் கோபிநாத் எழுதிய 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!' மற்றும் அப்துல் ரகுமானின் 'பூப்படைந்த சப்தம்' ஆகியன.  இந்த இரண்டு புத்தகங்களை பற்றியும் பிறக

துணிவு

Image
Image credit: Respective owners only எந்தவொரு  சந்தர்ப்பத்துக்காகவும்  உயிரை விடுவதல்ல துணிவு  எண்ணிய கருமத்தை  இறுதி வரை  போராடி  வெல்வதே  துணிவு!

கற்பனை உலகம்

Image
Image credit to respective owners only என் எண்ணத்தில்  ஓர் கற்பனை உலகம்  அதில் குரு பெயர்ச்சியும்  சனி உச்சமும் கிடையாது  தேர்தல் இல்லை  தேவைகள் இல்லை  போலிகள் இல்லை  பொய்களும் இல்லை  அங்கு  நானும் அவளும்  ஓர்  அழகான வாழ்க்கையும்  இந்த வாழ்க்கை  இப்படியே  கற்பனையில்  போனாலும் பரவாயில்லை ஆனால்  அந்த  அழகான வாழ்க்கை பற்றிய  கற்பனை மாத்திரம்  போய்விடக்கூடாது  இல்லையெனில்  என் நிழலை  நான்  எங்கு தேடுவேன்?

சிந்தனையின் ஓரத்தில் சில எழுத்துக்கள்...!

Image
பிளாக்கர் தளம் சில மாற்றங்களைக் கண்டு வருகிறது. மகிழ்ச்சி. நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த பிளாக்கருக்கு கூகுள் மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பது நல்லது. ஆனால் இதுவரை புதிய தீம்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது சற்றுக் கவலையே. 

ராஜா ராஜா தான்!

Image
இளையராஜா!  எப்போதுமே இசையின் ராஜா தான்.  அண்மையில் அவரது பிறந்த நாளின் போது வானொலியைக் கேட்க நேர்ந்தது.  அப்போது சில பாடல்களை கேட்டேன்.  என்ன சொல்ல?  ஆஹா.... சிறப்பு...  ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா... இதயம் ஒரு கோவில்  என்ன சத்தம் இந்த நேரம்  குருவாயூரப்பா  பாடறியேன் படிப்பறியேன்  சொர்க்கமே என்றாலும்  தென்மதுரை வைகை நதி  கரகாட்டக்காரன்  இதெல்லாம் எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.  இது மட்டும் தான் என்று சொல்ல முடியாது. கேட்டது இவ்வளவு தான்.  வருடம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.  அப்படி ஒரு மாயவித்தை அந்த பாடல்களுக்குள் இருக்கிறது.  அப்போதே எழுத வேண்டும் என நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.  மீண்டும் சந்திப்போம்!

பதினைந்தாம் ஆண்டில் கால் பதிக்கும் 'சிகரம்' !

Image
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். வருடாவருடம் இந்த பதிவை எழுதுவதை தவிர, பாரிய மாற்றங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்துவிடவில்லை.  இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், பதினான்கு ஆண்டுகளைக் கடந்து பதினைந்தாம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !.  2006ஆம் ஆண்டில் ஆரம்பித்த பயணம். எங்கெங்கோ தடம்மாறிச் சென்றுகொண்டே இருடிக்கிறது.  இலக்கை நோக்கிய பயணம் என்று சொல்லிக் கொண்டாலும், கண்ணுக்கெட்டிய தூரத்தில் இலக்கு காணப்படாதபோது எதை நோக்கிப் பயணிப்பது? பயணம் சில நேரங்களில் உற்சாகமாக இருந்தாலும், பல நேரங்களில் சலிப்பே மிஞ்சுகிறது.  என்றாலும், மனதுக்குள் ஓர் குரலின் உந்துதல்!  என்னை முன்னோக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறது.  இதோ இலக்கை நோக்கி வந்துவிட்டோம் எனும் போதெல்லாம், இலக்கு ஒரு கானல் நீராக மாறிவிடுகிறது.  என்றாலும், ஒரு தீராத தாகம்!  வெற்றிபெற்றேயாக வேண்டும் எனும் ஏக்கம்.  ஆனால், அந்த வெற்றியைப் பெறுவது எப்போது என்பதை சிந்திக்கும் போதுதான்... ம்ம்ம்... அண்மையில் ' வலை ஓலை ' வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டது.  இதுவரை, 43 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  ஆனால், வலைத்தளத்தின் பயன்பாடு என

வலைப்பதிவு வழிகாட்டி - 04

Image
வணக்கம் நண்பர்களே!  இது மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுத ஆரம்பித்து இடைநடுவில் கைவிட்ட பதிவு.  முந்தைய பதிவுகளைப் படிக்க:  வலைப்பதிவு வழிகாட்டி - 01   வலைப்பதிவு வழிகாட்டி - 02   வலைப்பதிவு வழிகாட்டி - 03   இன்றைய பதிவு:  இன்று விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்வதற்கு சில காரணங்கள் உண்டு.  1. பதிவை மீண்டும் தொடர்ந்து புதிய வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டுவது.  2. வலைப்பூவில் (பிளாக்கர்) ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களை உலகுக்கு தெரியப்படுத்துவது.  இரண்டும் ஒன்றே என்பதால் இப்படியே வாசிக்கலாம்.  வலைப்பூவில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  பாரிய மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை என்றாலும் வலைப்பதிவர்களை கவரக் கூடிய மாற்றங்களாகவே இருக்கின்றன.  வலைப்பதிவர்கள் எதிர்பார்த்த புதிய தீம்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமே.  மாற்றங்கள்:  01. பதிவுகளின் பட்டியலை காண்பிக்கும் முகப்புத் திரை மாறியிருக்கிறது.  இது எந்தவொரு பதிவும் இல்லாத புதிய வலைப்பதிவு காட்சியளிக்கும் முறை.  இது பதிவுகள் உள்ள வலைப்பதிவு ஒன்று காட்சியளிக்கும் விதம்.  இதனைப் பார்க்கும் பழைய பதிவர்கள் தமது வலைப்பதிவுகளில்

வலை ஓலை - எழுத்தாணி - சொல்

Image
இணைய உலகில் தமிழை வளம்பெறச் செய்ததில் வலைத்தளங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகிய இரண்டும் வலைத்தள சேவைகளை வழங்கினாலும், பிளாக்கரிலேயே அதிக அளவு வலைத்தளங்கள் உருவாகின.  தமிழ் வலைத் தளங்களுக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டு வரலாறு இருக்கலாம் என நினைக்கிறேன். ஆரம்பகால வலைத்தள எழுத்தாளர்களுக்கே தமிழ் வலையுலகின் அத்தனை பெருமைகளும் சாரும் என்றே நான் சொல்வேன்.  காரணம், அவர்கள் அனைத்தையும் உருவாக்கினார்கள். வலைத்தள சேவைகள் தமிழில் கிடைக்க அவர்கள் பெரும் பங்காற்றினார்கள். பல வலைப்பதிவர்கள் தமிழில் உருவாக அவர்களே காரணமாய் அமைந்தார்கள். அவர்களில் பலரும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பலரும் நவீன எழுத்தாளர்களாய் உருவாகினர்.  தமிழ் வலைத்தளங்களை அப்போது நடத்திச் செல்வதில் இருந்த சிரமம் இப்போது இல்லை. வலைத்தளங்கள் தற்போது வெகுவாக முன்னேறிவிட்டன. எந்தவொரு சிரமமும் இல்லாமல் யுனிகோடில் தட்டச்சு செய்ய முடிகிறது.  அத்துடன், வலைத்திரட்டிகள் தமிழ் வலையுலகில் ஆற்றிய பங்கு மறக்க முடியாது. தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகியன அவற்றில் வெகு பிரபலமானவை. இந்த மூன்றிலும் தம

கால் நூற்றாண்டுக் காதல் கடித்தைத் தேடிப் போகலாம் வாருங்கள்!

Image
'கால் நூற்றாண்டு காதல்' குறுந்திரைப்படத்தை பார்த்து முடித்த சூட்டோடு அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். முதலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.  நண்பரின் பதிவு:  காதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்   ஒரு வாசகம்: நீங்கள் விரும்பிச் செய்யும் எதிலும் உங்களுக்கு தோல்வி கிடையாது!  ஒரு கோரிக்கை: வலை ஓலை வலைத்திரட்டியை தங்கள் வலைத்தளங்களின் மெனுவில் இணைப்பதுடன், தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.  குறும்படம்:  25 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்தைத் தேடிய ஒரு பயணம். ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையாக இயக்கப்பட்டிருக்கிறது.  தேவையில்லாத பின்னணிக் கதைகள், துணைக் கதைகள், வரலாறு எல்லாம் இல்லாமல் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.  நடிப்பு வேறு ரகம். அனாவசியமான மினக்கெடல்கள் இல்லாத இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.  நாம் வாழ்வில் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சில அர்த்தங்கள் உடனடியாக தெரியவரும். சில, காலம் கனிந்தால் தான் புரிய வரு

வலை ஓலை - கனவு நனவாகுமா?

Image
தமிழ் வலையுலகில் எண்ணற்ற வலைப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவை அத்தனையையும் ஒன்றாய்க் கோர்த்து பூமாலை ஆக்குவதே வலைத் திரட்டிகளின் பணி. கடந்த காலங்களில் அந்த பணியை பல்வேறு கைகள் செய்துவந்தாலும், இப்போது மாலை கோர்க்க ஆளில்லாமல் பூக்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.  பதறியது எம் மனம். உதறினோம் தயக்கம். யார் யாரையோ எதிர்பார்ப்பதற்கு பதில் நாமே களத்தில் இறங்கி களப்பணி செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உருவானது வலை ஓலை   ஆரம்பித்து இரண்டு மாதங்களில் 27 வலைப்பூக்களையும், அந்த வலைப்பூக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கொண்டு ஆலம் விழுதாய் வேர்விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது நம் வலைத்திரட்டி.  நன்றிகள் எத்தனை சொன்னாலும், அத்தனைக்கும் ஈடாகாது உங்கள் அனைவரினதும் அன்பு. இந்த அன்பும் ஒத்துழைப்பும் அன்பும் என்றென்றும் தொடர வேண்டும் என்பதே எமது அவா.  ஆயிரமாயிரம் வலைப்பூக்களையும், இலட்சக்கணக்கான பதிவுகளையும் கொண்டு தலை சிறந்த வலைத்திரட்டியாய், வலை ஓலை உருவாக வேண்டும் என்பதே எமது அவா.  இந்த கனவு நிறைவேறுவதும், கனவாகவே கலைந்து போவதும் தங்கள் கைகளில் தான் இருக்கி

நானறியேன்...!

Image
உன்னைப் பார்க்கையில்  பிரமிப்பாக இருக்கிறது  சிறு குழந்தை  நீயெனக் கருதி  நான் அசரும் நேரத்தில்  நீ கூறும் வார்த்தைகள்  திடுக்கிடச் செய்கின்றன

பேனை தொட்டு...

Image
வெகு நாட்களுக்குப் பின்  பேனை தொட்டு ஒரு கவிதை  Image Credit to respective Owners only. Image Used for display purpose only.

பெப்ரவரி 29

Image
இன்று பெப்ரவரி 29ஆம் திகதி. லீப் வருட நாள். மீண்டும் 4 வருடங்களுக்குப் பின்னர் தான் இந்த நாள் வரும். இன்னும் இன்னோரன்ன சிறப்புகள் எல்லாம் இந்த நாளுக்கு சொல்லப்படுகின்றன.  சிறப்பு நாட்கள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பு டூடில் வெளியிடும் கூகிளும் இன்றைய நாளுக்கு சிறப்பு டூடிலை வெளியிட்டிருக்கிறது.  ஆகவே, நாமளும் சும்மா இருந்தா நம்மள சமூகம் மதிக்காது என்பதால் நானும் இன்று பதிவு எழுதி விட்டேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நாள் முடியப்போகும் வேளையில் தான் பதிவை வெளியிட நேரிட்டிருக்கிறது.  'தமிழ்மணம்' வலைத்திரட்டி கடந்த சில காலமாக முறையாக செயல்படவில்லை. முன்னதாக, இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய வலைத் திரட்டிகள் காணாமல் போயிருந்தன. அந்த வரிசையில் எஞ்சியிருந்த தமிழ்மணமும் சேர்ந்து விட்டது.  அதன் பின்னர் அந்த இடத்தை நிரப்ப பல்வேறு இணையத்தளங்கள் முயன்ற போதும் களத்தில் நிலைத்து நிற்கவில்லை.  ஆகவே, காலத்தின் தேவையுணர்ந்து நாம் களத்தில் இறங்கியிருக்கிறோம். அதற்காக உருவானது தான் ' வலை ஓலை ' வலைத் திரட்டி.  ' வலை ஓலை ' வலைத் திரட்டி குறித்த மேலதிகத் தகவல்களை

பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்?

Image
அண்மைக்காலமாக நாம் அதிகம் கேள்விப்படுவது சிசுக்கொலைகள் பற்றிய செய்திகளாக இருக்கின்றன. பிறந்த சில மணிநேரத்தில் குப்பையில் வீசப்பட்ட குழந்தை, பிறந்த ஒரு வாரத்தில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்ட குழந்தை, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட மூன்று வயதுக் குழந்தை என வித்தியாசமான செய்திகளை நாம் காண்கிறோம். பாடசாலை கூட சென்றிராத சிறுவர்கள் மரணப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்படுவது ஏன்? தவறான உறவு, பொருளாதார சூழல், குடும்ப சண்டை, ஆண் - பெண் பேதம், வெள்ளை - கறுப்பு வித்தியாசம் என ஆயிரம் காரணங்களை சொல்லலாம்.  Image Credit: https://www.financialexpress.com or Respective Owners only. அத்துடன், தாயோ, தந்தையோ அல்லது வேறு எவருமோ காவல்துறையினரால் கைது செய்யப்படுவதுடன் அந்த செய்தி குறித்த நமது தேடலும் முடிந்து போய்விடும். மீண்டும் அடுத்த வாரம்.... கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை என மற்றொரு செய்தி வரும். இதற்கு என்ன தீர்வு? கொலையாளியைக் கைது செய்வதால் தீர்வு கிட்டிவிடுமா? அல்லது படங்களில் காட்டப்படுவதைப் போல கொலையாளியை ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விடலாமா? நமது

திருத்தப்படுமா இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்?

Image
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விடயங்களே தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது வேறு ஒரு பிரச்சினை. அது CAA எனப்படும் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான போராட்டங்கள் தான். 1955ஆம் ஆண்டின் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணமாகியுள்ளன. Image Credit: Respective Owners only 2019ஆம் ஆண்டின் இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு 2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னதாக இந்தியாவில் குடியேறிய இந்து, சீக்கிய மற்றும் பௌத்த மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், குறித்த நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இதன் அடிப்படையில், இந்திய அடிப்படை அரசியலம

இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் சொல்லும் செய்தி

Image
இலங்கைப் பிரதமரின் இந்திய விஜயம் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் களமிறங்கியிருக்கின்றன.  அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரம் தான் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகள் எனத் தோன்றினாலும் ஏனைய நாடுகளுக்கும் அந்த எண்ணம் இருக்காது என்று புறம்தள்ளிவிட முடியாது.  Image Credit: Its Respective Owners only. இந்த நிலையில், பதவியேற்ற சூட்டோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் தற்போது இந்திய விஜயத்தை நிறைவு செய்திருக்கிறார்.  சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சீன விஜயம் ஒத்திவைக்கப்பட்டிருக்காவிட்டால் கள நிலவரம் இன்னும் பரபரப்பாக அமைந்திருக்கும்.  இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் இந்திய ஊடகங்களிலும், இலங்கைத் தமிழ் ஊடகங்களிலும

பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 02)

Image
பயணங்கள் பலவிதம் - 09 (பகுதி - 01)   2018/06/14  அடுத்த நாளும் நண்பனுக்கு வேலை நாளாக இருந்தது. அன்றே நான் புறப்படவும் வேண்டியிருந்தது. அன்றைய தினம் எழுத்தாளர் யாழ் பாவாணன் அவர்களை சந்திக்க சென்றேன். அவரை சந்தித்த பின் அவரது நட்பு எழுத்தாளரான 'யாழ் இலக்கியக் குவியம்' அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் வேலணையூர் தாஸ் அவர்களை சந்திக்க அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.  பின்னர் யாழ் பொது நூலகம் சென்றேன். பத்திரிகை வாசிப்புப் பிரிவுக்கு சென்று அன்றைய நாளிதழ்களைப் படித்தேன். இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நூலகத்திற்குள் அடியெடுத்து வைப்பதே பெருமை தரும் உணர்வாக இருந்தது.  அதன் பின்னர் யாழ் பாவாணன் அவர்கள் என்னை யாழ் பேரூந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கிருந்து எனது நண்பியின் இல்லம் அமைந்துள்ள வவுனியாவுக்கு சென்றேன். வவுனியா பேரூந்து நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் அவரது வீட்டைச் சென்றடைந்தேன்.  அன்று இரவு அங்கு தங்கினேன். தோழியின் உபசரிப்பு மிகவும் பிடித்திருந்தது. அவரும் அவரது கணவரும் நன்றாக உபசரித்தன

என்னதான் ஆச்சு நம்ம தமிழ்மணத்துக்கு?

Image
தமிழ்மணம் வலைத்திரட்டிக்கு என்ன ஆச்சு? தெரியவில்லை. கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி அதிகாலை 4.20க்கு இற்றைப்படுத்தியதாக திரட்டி கூறுகிறது.  இப்போது 6 மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.  ஆரம்பத்தில், தமிழ்மணத்தோடு இன்ட்லி மற்றும் தமிழ் 10 முதலிய வலைத்திரட்டிகள் செல்வாக்குச் செலுத்தின. ஒவ்வொரு திரட்டியிலும் எத்தனை விருப்பங்களைப் பெறுகிறார்கள் என்பதில் வலைப்பதிவர்களுக்கிடையே போட்டி நிலவும்.  இதன் காரணமாக வலைத்தளங்களுக்கு வாசகர்களை அழைத்துவருவது அத்தனை கடினமாக இருக்கவில்லை.  வலைப்பதிவர் ஒருவர் முக்கிய திரட்டிகளில் தனது பதிவைப் பகிர்ந்தாலே குறைந்தது 50 பக்கப் பார்வைகளாவது வந்துவிடும். அத்துடன், தினமும் வலைப்பதிவர்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.  என்றாலும், இன்ட்லி மற்றும் தமிழ் 10 ஆகிய திரட்டிகளின் மறைவு வலையுலகத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.  அதன் பின்னர் பல திரட்டிகள் முளைத்தாலும் தனிக்காட்டு ராஜாவான தமிழ்மணத்தோடு மோத முடியாமல் தடம் தெரியாமல் அழிந்து போயின.  காலம் செல்லச்செல்ல வயதான சிங்கத்தைப் போல