கால் நூற்றாண்டுக் காதல் கடித்தைத் தேடிப் போகலாம் வாருங்கள்!
'கால் நூற்றாண்டு காதல்' குறுந்திரைப்படத்தை பார்த்து முடித்த சூட்டோடு அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். முதலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
நண்பரின் பதிவு: காதல் கடிதத்தைத் தேடி - குறும்படம்
ஒரு வாசகம்: நீங்கள் விரும்பிச் செய்யும் எதிலும் உங்களுக்கு தோல்வி கிடையாது!
ஒரு கோரிக்கை: வலை ஓலை வலைத்திரட்டியை தங்கள் வலைத்தளங்களின் மெனுவில் இணைப்பதுடன், தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி உதவுங்கள்.
குறும்படம்:
25 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட காதல் கடிதத்தைத் தேடிய ஒரு பயணம். ஒரு சில கதாபாத்திரங்களை வைத்து அருமையாக இயக்கப்பட்டிருக்கிறது.
தேவையில்லாத பின்னணிக் கதைகள், துணைக் கதைகள், வரலாறு எல்லாம் இல்லாமல் திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
நடிப்பு வேறு ரகம். அனாவசியமான மினக்கெடல்கள் இல்லாத இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நாம் வாழ்வில் செய்யும் எல்லா செயல்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். சில அர்த்தங்கள் உடனடியாக தெரியவரும். சில, காலம் கனிந்தால் தான் புரிய வரும்.
25 வருடத்துக்கு முன்னால் அந்த கடிதம் உரிய நேரத்தில் கிடைத்திருந்தால்? அந்த பையனுக்கு ஒரு பயண அனுபவம் கிடைத்திருக்குமா? அந்த நேரத்தில் அந்த காதல் கடிதம் இதே மகிழ்ச்சியை அந்த தம்பதிக்கு கொடுத்திருக்குமா? இன்னும், வழியில் சந்தித்த மனிதர்களையெல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால் காணக் கிடைத்திருக்குமா?
இல்லை.
ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. சொல்லப்பட்ட காதல்களுக்கும் சரி, சொல்லப்படாத காதல்களுக்கும் சரி.
பழைய ராஜா கதைகளில் ராஜாவின் உயிர் கிளியில் இருப்பதாக சொல்வார்கள். இந்த கதையில் தந்தையின் உயிர் ஒரு பழைய கடிதத்தில் இருந்திருக்கிறது.
ஒரு மன நிறைவான குறுந்திரைப்படத்தைப் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி!
குறுந்திரைப்படம்:
இணைப்புச் சுட்டி: Kaal Nootraandu Kaadhal Tamil Short Film| Saran RV | SIIMA AWARDS BEST ACTOR Vignesh Kumar | Ashwin
ஆகவே, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் உயிர்ப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த நாளில் அன்று:
2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து ஒரு நகைச்சுவைப் பதிவை எழுதியிருந்தேன். இன்றைக்கும் பொருத்தமாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.
கந்தசாமியும் சுந்தரமும் - 02
குறிப்பு: பதிவின் அமைப்பு நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களிடம் இருந்து சுடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றி. விரைவில் அமைப்பை மாற்றிக் கொள்கிறேன்.
படிப்பதோடு நில்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு யோசனை: கொரோனாவால் இப்போது எல்லாமே இணையவழி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் இணையவழி வலைப்பதிவர் சந்திப்பை நடத்தினால் என்ன?
ஆகவே, உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் உயிர்ப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த நாளில் அன்று:
2014ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து ஒரு நகைச்சுவைப் பதிவை எழுதியிருந்தேன். இன்றைக்கும் பொருத்தமாக இருக்கும். படித்துப் பாருங்களேன்.
கந்தசாமியும் சுந்தரமும் - 02
குறிப்பு: பதிவின் அமைப்பு நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களிடம் இருந்து சுடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றி. விரைவில் அமைப்பை மாற்றிக் கொள்கிறேன்.
படிப்பதோடு நில்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு யோசனை: கொரோனாவால் இப்போது எல்லாமே இணையவழி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் இணையவழி வலைப்பதிவர் சந்திப்பை நடத்தினால் என்ன?
குறும்படத்தை நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். அடுத்தவர் கதையினை அதுவும் காதல் கதையினை தெரிந்துக்கொள்ள கசக்குமா என்ன?!
ReplyDeleteநிச்சயமாக பாருங்கள். அருமையாக இருக்கும். காதல் கதைகள் எப்போதும் இன்மையானவை தானே?
Deleteஎன் பதிவினையும் இங்கே குறிப்பிட்டதில் மகிழ்ச்சி சிகரம் பாரதி. குறும்படம் குறித்து நீங்களும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள். உங்களது முந்தைய பதிவினையும் இதோ படிக்கிறேன்.
ReplyDeleteநிச்சயமாக. தங்கள் பகிர்வுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteகாணொளி அருமை...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Delete