வலை ஓலை - கனவு நனவாகுமா?
தமிழ் வலையுலகில் எண்ணற்ற வலைப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவை அத்தனையையும் ஒன்றாய்க் கோர்த்து பூமாலை ஆக்குவதே வலைத் திரட்டிகளின் பணி. கடந்த காலங்களில் அந்த பணியை பல்வேறு கைகள் செய்துவந்தாலும், இப்போது மாலை கோர்க்க ஆளில்லாமல் பூக்கள் வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன.
பதறியது எம் மனம். உதறினோம் தயக்கம். யார் யாரையோ எதிர்பார்ப்பதற்கு பதில் நாமே களத்தில் இறங்கி களப்பணி செய்தால் என்ன என்று சிந்தித்தோம். உருவானது வலை ஓலை
ஆரம்பித்து இரண்டு மாதங்களில் 27 வலைப்பூக்களையும், அந்த வலைப்பூக்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கொண்டு ஆலம் விழுதாய் வேர்விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது நம் வலைத்திரட்டி.
நன்றிகள் எத்தனை சொன்னாலும், அத்தனைக்கும் ஈடாகாது உங்கள் அனைவரினதும் அன்பு. இந்த அன்பும் ஒத்துழைப்பும் அன்பும் என்றென்றும் தொடர வேண்டும் என்பதே எமது அவா.
ஆயிரமாயிரம் வலைப்பூக்களையும், இலட்சக்கணக்கான பதிவுகளையும் கொண்டு தலை சிறந்த வலைத்திரட்டியாய், வலை ஓலை உருவாக வேண்டும் என்பதே எமது அவா.
இந்த கனவு நிறைவேறுவதும், கனவாகவே கலைந்து போவதும் தங்கள் கைகளில் தான் இருக்கிறது நண்பர்களே!
வலையில் வரும் ஓலைகளில் தமிழ் மணக்கிறது
ReplyDeleteமிக்க நன்றி. தமிழைத் தொடர்ந்தும் உலகமெங்கும் மணக்கச் செய்வோம்!
Deleteஉங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.
Deleteநீங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டதை, என்னால் பங்களிக்க முடியவில்லை... இன்றைய நிலை அவ்வாறு உள்ளது என்பதும் ஒரு காரணம்... நன்றி...
ReplyDeleteநல்லது. தங்களால் முடியும்போது அந்த உதவியை செய்யுங்கள். நன்றி.
Deleteஉங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Deletecould you add my blog to valai oosai. in this time i can`t write in tamil.sorry
ReplyDeleteதங்கள் வலைப்பதிவு 'வலை ஓலை'யில் தற்போது இணைக்கப்பட்டுள்ளது நண்பரே.
Deleteநல்ல முயற்சியில் களம் இறங்கியுள்ளீர்கள். வெற்றியடைய வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
Delete