Posts

Showing posts from November, 2016

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01.2 [ திருத்தம் 02 ]

1.2 தோழிகளின் சந்திப்பு  "திவ்யா...." "...................." "அடியேய் திவ்யா...." கை அனிச்சையாய் தேநீரை வாய்க்குள் ஊற்ற வாயும் அதே போல் தேநீரைப் பருக மனம் வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அப்போது  யாரோ என் தோளைப் பிடித்து உலுக்குவதைப் போலிருக்க  நினைவுகளில் இருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்தேன். தோழி நந்தினி சிரித்தபடி நின்றிருந்தாள்.  "என்னடி யோசனை?" "ஒன்னுமில்ல" "ஒன்னுமில்லாமலா கூப்பிடறது கூட வெளங்காம உட்கார்ந்திருக்க?" "........................." "நா சொல்லவா?" "தெரிஞ்சுக்கிட்டே ஏன் கேக்குற?" "இப்படியே எப்பப் பாத்தாலும் அதப் பத்தியே நெனைச்சுக்கிட்டிருந்தா எப்படி?" "மறந்துரச் சொல்றியா?" "அப்படி இல்ல....." "அப்போ நெனைச்சுக்கிட்டு தானே இருக்கணும்?" "....................." என் கேள்விக்கு நந்தினியால் மௌனத்தையே பதிலாய் அளிக்க முடிந்தது. என் மனம் படும் பாட்டை அவளும் அறிந்திருந்தத

சிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்!

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! வாட்ஸப் இன் புதிய பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த வசதி வந்தே விட்டது. மேலும் மடிக்கணினிகளிலும் இப்போது வாட்ஸாப்பை பயன்படுத்த முடியும். ஆனால் கணினியில் பயன்படுத்தும் அதே நேரம் கைப்பேசியும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் கணினியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. குரல் பதிவுகளை அனுப்ப முடியும். வைபர், இமோ போன்றவற்றின் கணினிப் பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  அல்லோ, டுவோ, ஹேங்அவுட்ஸ், வாட்ஸப், வைபர், இமோ, பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் என எட்டு  செயலிகள் என் கைப்பேசியில் உள்ளன. இதில் கூகிள் அல்லோ எழுத்துக்களையும் குரல் பதிவுகளையும் மட்டுமே பரிமாற்றுகிறது. கூகிள் டுவோ வீடியோ அழைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.  மற்ற அனைத்திலும் எழுத்து, குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த அனைத்து செயலிகளுக்குமிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. நான் பயன்படுத்துவது எட்டு செயலிகள் என்றால் இன்னும் பல செயலிகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் சேர்

சிகரம் பாரதி 31 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! பிளாக்கரின் டாஷ்போர்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்மனையில் http இலிருந்து https வசதியை வழங்கியது. இப்போது ஒருவர் தனது அனைத்து வலைப்பதிவுகளையும் இலகுவில் கட்டுப்படுத்தக் கூடியவாறு வடிவமைத்துள்ளது. இது கூகிள் வலைத்தள சேவையை பயனாளிகளுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்னும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இன்னும் பல மாற்றங்களை எதிர்காலத்தில் எதிர்பார்க்கிறேன்.  தொழிலுடன் எதிர்கால இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கையில் பல தடைகள் வந்துபோகின்றன. முக்கியமாக நேரமின்மை. காலை 6.30 மணிக்கு எழுந்து தயாராகி 8.00 மணிக்கு வேலைக்கு சமூகமளித்து பணிகளை நிறைவு செய்துவிட்டு நிமிர்ந்தால் இரவு 8.00 மணியாகியிருக்கும். பணி முடிந்து மீண்டும் இல்லத்தை வந்தடையும்போது இரவு 9.00 மணிக்கு மேலாகிவிடுகிறது. குளித்து, உணவு உண்டு முடிக்கையில் இரவு 11.00 மணி தாண்டி விடுகிறது. இடைப்பட்ட 11.00-06.30 நேரத்தில் தான் தூங்கவும் எழுதவும் வாசிக்கவும் வேண்டும். சில நாட்களில் தூங்குவதற்கு அதிகாலை 02.00 மணியாகிவிடும். நம்ம வாழ்க்கை அப்படி.  நேர முகாமைத்துவத்தை என்ன முயன்றாலும்

சிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளின்டனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதே நேரம் நம் இந்திய மக்கள் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். உலக வல்லரசு நாட்டிலும் தெற்காசிய வல்லரசு நாட்டிலும் இருவேறு மாறுபட்ட நிகழ்வுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.  டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தொகுதிவாரி முறையின் காரணமாக ஹிலாரி கிளின்டனை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தாலும் வெற்றி வாகை சூடினார் டிரம்ப். இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. மேலும் அவரது கல்வி நிறுவனமொன்றின் மீது அதன் முன்னாள் மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நட்ட ஈடாகத் தர முன்வந்துள்ளார். அத்துடன் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே அதாவது அமெரிக்காவில் பிறந்து பூர்வீகமாக வாழ்பவர்களுக்கே சொந்தம் என்று கருத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கரு

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04 [ திருத்தம் 01 ]

04. குறுந்தகவல் எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம். திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. "நான் உங்களோடு கொஞ்சம் முக

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 [ திருத்தம் 01 ]

Image
03. கண்டேன் காதலை பயணங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. சிலரின் வாழ்வில் மறக்க முடியாதவை. நம் வாழ்க்கையில் பல நூறு பயணங்களை மேற்கொண்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் நம்மால் மறக்கவியலாது. எனது இந்தப் பயணம் என் காதலைக் கொன்று இன்னொருத்தியை என் மனதிற்குக் காவல் வைக்கப்போகும் பயணம். என் வாழ்க்கைப் பாதையைத் திசை மாற்றப்போகும் பயணம். இந்தத் தமிழ்த் திரைப்படங்களைப் போல இந்தப் பயணத்தில் திடீர் மாற்றம் நடக்கும் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்துவிடக்கூடாதா என்றே என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்தேன் நான்.  "வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை. வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன. வீட்டின் வரவ

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02 [ திருத்தம் 01 ]

Image
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை  சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன். நான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன். பேரூந்தில் இருந்து இறங்கி என் வீட்டுக்கு செல்லும் ஒழுங்கையில் இறங்கி நடந்து சென்று வீட்டை அடைந்தேன். வீட்டில் உறவினர்கள் பலரும் குழுமியிருந்தனர். என்னைக் கண்டதும் அப்பா அருகில் வந்து "சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வா ஜெய்" என்றார். 'சரி' என்பதாக தலையை மட்டும் ஆட்டி விட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். மனது ஒரு பக்கம் தனியாக சிந்தனையில் மூழ்கிப் போக கட்டிலில் எனக்காய் தயாராய் வைக்கப் பட்

சிகரம் பாரதி 29 / 50

Image
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இவ்வாரம் எனது இணைய இணைப்பின் அனுமதிக்கப்பட்ட பொதியின் [Internet Package ] அளவு முடிவடைந்துவிட்டது. Dialog 4G Home Broadband இணைய இணைப்பை கடந்த மாதம் முதலாம் திகதி வாங்கியிருந்தேன். முதலில் 10GB பொதியை வாங்கியிருந்தேன். பிறகு 25GB பொதிக்கு மாறிவிட்டேன். இப்போது 25ஜிபி யும் முடிவடைந்து எல்லை மீறிக் கொண்டு போகிறது. இது போதாதென்று 1ஜிபி பொதியை மேலதிகமாக இணைத்திருந்தேன். அது போன இடம் தெரியவில்லை. அவ்வளவு வேகமாக முடிந்துவிட்டது. இப்போது இணைப்பு அவ்வளவு வேகமாக இல்லை. பல்வேறு இடையூறுகளும் தடங்கல்களும் வந்த வண்ணமுள்ளன. என்ன செய்ய? பேசாமல் குவைத் நாட்டுக்குப் போய்விடலாம்  என்றிருக்கிறேன். காரணம் அங்கு இலங்கை ரூபாய் 4900 க்கு [இந்திய ரூபாய் 2250 மட்டுமே] 1TB பாவனை அளவு கிடைக்கிறது. 1TB ன்னா எவ்ளோ தெரியுமா? 1024GB ! அம்மாடி!!! இப்பவே கண்ணைக் கட்டுதே!  13.11.2016 இல் சன் டிவி யில்  பிச்சைக்காரன் திரைப்படம். முழுவதுமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை. இடைநடுவில் இருந்துதான் பார்க்கக் கிடைத்தது. இறுவட்டு வாங்கி முழுமையாகப் பார்க்க வேண்டும். எனக்குப் பொதுவாகவே விஜய

வானவல்லியுடன் ஒரு சரித்திரப் பயணம் - 01

வணக்கம் வாசகர்களே! நலம், நலமறிய ஆவல். "வானவல்லி" - நமது தோழர் சாளையக்குறிச்சி சி.வெற்றிவேல் அவர்களின் எண்ணத்தில் உருவான சரித்திரப் புதினம். பல தடைகளைத் தாண்டி வெற்றிவேலின் கன்னி நாவல் களம் கண்டிருக்கிறது. பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புதினங்களை வெளியிட்ட வானதி பதிப்பகம் 'வானவல்லி'யை வெளியிட்டதன் மூலம் தனிச் சிறப்பை இந்நூலுக்கு வழங்கியுள்ளது எனலாம். தமிழர்களின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பல நூறு புதினங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. ஆனால் கதை நிகழும் கால அடிப்படையில் புதினங்களை யாரும் வகைப்படுத்தவில்லை. இதை ஒரு பெருங் குறையாகவே நான் காண்கிறேன். வானவல்லி கி.மு. 175 இல் நிகழும் கதை என ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆகவே வானவல்லியை முதல் தகவலாக இணைத்துக் கொண்டு புதினங்களை அவற்றின் கதை நிகழும் கால அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சித்து வருகிறேன். இயன்ற நண்பர்கள் உதவுங்கள். 'வானவல்லி' கி.மு 175 இல் வாழ்ந்த கரிகால் வளவன் என்னும் சோழனின் வரலாற்றை புதினமாகப் படைத்துள்ளார் வெற்றி. இது வெற்றியின் முதல் புத்தகம்- முதல் புதினம். ஆனால் ஏனோ தானோவென்று எழுதாமல் தேர

சிகரம் பாரதி 28 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! நமது வலைத்தளம் 45000 பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆனாலும் இலக்கங்கள் வெற்றிகள் அல்ல என்பதையும் நான் மறந்துவிடவில்லை. இன்றும் உங்களுடன் ஒரு திரைப்படம் பற்றிப் பேசலாம் என்றிருக்கிறேன். என்ன அது? அது இணையம் தந்த இன்னுமோர் உபயம். 'காஷ்மோரா'!. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளியான திரைப்படம். படம் ரசிக்கும் படியாக இல்லை. நல்ல படங்களில் நடித்து வந்த கார்த்திக்கு இப்போது என்ன ஆயிற்று என்று வினவத் தோன்றுகிறது. நல்லவேளை இந்தத் திரைப்படத்தையெல்லாம் திரையரங்கிற்கு சென்று பார்த்து என் காசைக் கரியாக்கிவிட வில்லை என்பதை எண்ணி நிம்மதி கொள்கிறேன்.  இனி வர இருக்கும் திரைப்படங்களில் சிங்கம் 3, பாகுபலி 2 போன்ற திரைப்படங்களே எனக்குள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளன. இத்திரைப்படங்களை நிச்சயம் திரையரங்கில் சென்று பார்ப்பேன்!

விறல்வேல் வீரனுக்கோர் மடல் - 03

Image
அன்பு நண்பன், உடன் பிறவா சகோதரன் வானவல்லி நாயகன் வெற்றிவேல்- அவர்களுக்கு சிகரம்பாரதி எழுதும் பதில் கடிதம். நலம், நலமறிய ஆவல்.  உன் பதில் மடல் கண்டேன். மகிழ்ச்சி. இல்லற வாழ்வின் அடுத்த கட்டத்தில் நான் அடியெடுத்து வைத்துள்ளது குறித்து உனது வாழ்த்துக்களுக்கு நன்றி. உனது அறிவுரைகள் பெறுமதி மிக்கவை. சவால் மிகுந்த எதிர்காலத்திற்குள் அடியெடுத்து வைக்க நம் குழந்தைகளுக்கு நிறையவே கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. பழைமையைக் கற்றுக் கொடுக்கவும் புதுமையை பழக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தையும் அதன் சவால்களையும் தைரியத்துடன் முகம் கொடுக்கக் கற்றுத்தர வேண்டும். புத்தகக் கல்வி வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. அனுபவக் கல்வியே வாழ்வின் அடிப்படை என்பதை உணர்த்த வேண்டும். மேலும் முக்கியமாக தமிழைக் கற்றுத்தர வேண்டும். நம்மில் பலர் மறந்துவிடும் முக்கியமான விடயம் இது. தமிழில் எழுத, பேச, வாசிக்க மட்டுமல்லாமல் தமிழனாகவே வாழவும் கற்றுத்தர வேண்டும். சுயமாக இயங்கவும் முடிவெடுக்கவும் கற்றுத்தர வேண்டும். ஆண் - பெண் உறவைக் கற்றுத்தர வேண்டும். காதலைக் கற்றுத்தர வேண்டும். மீண்டும் உனது அறிவுரைகளுக்கு நன்றி.

சிகரம் பாரதி 27 / 50

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே! 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். விஜய் சேதுபதி மீதான எனது நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போல 'றெக்க' திரைப்படத்தையும் இணையத்தின் உபயத்தில் தரவிறக்கிப் பார்த்தாயிற்று. ஒரு வாரத்திற்கு முன்னால் இலங்கையின் உள்ளூர்த் தமிழ்த் தொலைகாட்சி ஒன்றில்  'றெக்க' திரைப்படம் ஒளிபரப்பாகிவிட்டது என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தர விரும்புகிறேன். சிவகார்த்திகேயனைப் போலவே விஜய் சேதுபதியும் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  'ஆண்டவன் கட்டளை'யும்  'றெக்க'யும் மிக அருமை.  'றெக்க'யை விட  'ஆண்டவன் கட்டளை' தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அருமையான கதையம்சம். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இடைத்தரகர்களை நம்பி ஏமாறும் சாமானிய மக்களே கதைக்கரு. காதலுக்கு அதிக இடம் கொடுத்துக் கொண்டிராமல் இயக்குநர் திரைக்கதையை வடிவமைத்துள்ளமை சிறப்பாகும்.  'றெக்க' வழமையான அதே பழைய காதல் - மோதல் கதைதான் என்றாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. 'ரெமோ'வுக்குப் ப

விதியை நம்புகிறீர்களா?

'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள்.  அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு  விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்? மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளு

சிகரம் பாரதி 26 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று எனக்கு வாட்ஸாப்பில் படித்ததில் பிடித்தது என்று குறிப்பிட்டு ஒரு கதை வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.  தினமும் நான் போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.  அதில் "என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது. எனக்கும் பொழுது போகவில்லை. அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். "இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு" அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில்  கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா. என் காலடி சத்தம் கேட்டதும் 'யாருப்பா நீ?' என வினவினார்.  'அம்மா நான் இந்த வழியாக வந்தேன். எனக

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01 [ திருத்தம் 01 ]

Image
'என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்...  நல்ல நாளில்.... கண்ணன் மணித் தோளில் .... பூமாலை நான் சூடுவேன்.... பாமாலை நான் பாடுவேன்...  என் கல்யாண வைபோகம் ...' - என்று சூரியன் பண்பலை என் கைப்பேசியில் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தில் வேலை அலுத்துப் போகும் நேரங்களில் கைப்பேசியில் உள்ள வானொலியைத்தான் துணைக்கு அழைத்துக் கொள்வேன். பழைய பாடல்களின் பரம ரசிகன் நான். புதிய பாடல்களில் ஒரு சிலவற்றைத்தான் பிடிக்கும். ஆனால் பிடிக்காத பாடல்கள் என்றாலும் வானொலி பாடும்போது அவற்றைக் கேட்கக் கூடாது என்று என் காதுகளுக்கு நான் தடைபோடுவதில்லை.  இன்று ஏனோ வேலையில் மனம் லயிக்கவில்லை. கடமைக்காக ஒன்றிரண்டு வேலைகளை மெதுவாகச் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பிடித்த பழைய பாடல்களில் கூட மனம் ஒட்டவில்லை. காரணம் இன்று மாலை நடக்கவிருக்கும் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி எப்படியேனும் நின்றுவிடாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சத்தியமாக அதைத் தடுக்க திட்டமேதும் போடவில்லை.  சுசி என்கிற சுசிதரன். பால்ய - பாடசாலை நண்பன். ஒரே ஊர், ஒரே பாடசாலை; இன்று ஒரே வேலைத்தளம். ஆச்சரியமான இணைபிரியாத

சிகரம் பாரதி 25 / 50

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று காலை எட்டு மணிக்குத் துவங்கிய வேலை இரவு எட்டு மணிக்குத் தான் முடிவடைந்தது. இருப்புக் கணக்கெடுப்பு எதிர்பார்த்தது போலவே காலை துவங்கி மதியம் தான் நிறைவு பெற்றது. பணி முடிந்து இரவு வீடு திரும்புகையில் கடும் மழை. வெப்பம் கொளுத்தும் கொழும்பில் குளிரில் நடுங்கிய படியே வீடு வந்து சேர்ந்தேன். இடி மின்னலுடன் பெய்த கடும் மழை இரண்டு மணிநேரத்தில் அடங்கிப் போனது.  கொழும்பைப் பொறுத்தவரை மழை அவ்வளவாகப் பெய்யாது. சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குக் கூட மழை வராது. அப்படியே பெய்தாலும் சில நிமிடங்கள் அல்லது ஓரிரு மணித்தியாலங்களில் நின்று விடும். வெயில் நேரங்களில் வெப்பம் பாடாய்ப் படுத்தும். எனது மண் மலையகத்துக்கு சென்றால் குளிர் தாங்க முடியாது. கொழும்பில் இரவு 12 மணிக்குக் கூட எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடும் நான் ஊருக்குப் போனால் மாலை 6 மணிக்குப் பின் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. காரணம் குளிர்.  இந்தச் சிறு தீவுக்குள்ளேயே எப்படி இத்தனை காலநிலை வேறுபாடுகள்? எல்லாம் இயற்கையின் திருவிளையாடல்கள் அல்லவா? இப்போது எனக்கு உறக்கம் வந்துவிட்டது.