சிகரம் பாரதி 30 / 50 - அமெரிக்க அதிபர் தேர்தலும் இந்திய செல்லாக் காசுகளும்!

வணக்கம் வலைத்தள வாசகர்களே! அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளின்டனை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார். அதே நேரம் நம் இந்திய மக்கள் பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். உலக வல்லரசு நாட்டிலும் தெற்காசிய வல்லரசு நாட்டிலும் இருவேறு மாறுபட்ட நிகழ்வுகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. 

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வானதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை. தொகுதிவாரி முறையின் காரணமாக ஹிலாரி கிளின்டனை விட குறைவான வாக்குகளையே பெற்றிருந்தாலும் வெற்றி வாகை சூடினார் டிரம்ப். இதனை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றவண்ணமுள்ளன. மேலும் அவரது கல்வி நிறுவனமொன்றின் மீது அதன் முன்னாள் மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நட்ட ஈடாகத் தர முன்வந்துள்ளார். அத்துடன் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டுமே அதாவது அமெரிக்காவில் பிறந்து பூர்வீகமாக வாழ்பவர்களுக்கே சொந்தம் என்று கருத்துத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தேர்தலின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டு வந்தார். பார்க்கலாம் ஒபாமாவைப் போல நல்லாட்சி செலுத்துவாரா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்று!

கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று கூறிக்கொண்டு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் நவம்பர் 8 ஆம் திகதி நள்ளிரவுக்கு 4 மணித்தியாலங்களே இருந்த நிலையில் ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நாட்டு மக்கள் பரிதவித்துப் போயினர். மோடி நிம்மதியாக உறங்கச் சென்ற நேரத்தில் பாரத மக்கள் வங்கிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலைமோதினர். நாடே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க உல்லாசமாக வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார் மோடிஜி. செல்லாத நோட்டுகளின் விவகாரத்தால் இந்திய சனத்தொகை 45 பேரினால் குறைவடைந்துள்ளது. பத்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் மக்கள் பணத்துக்காகத் திண்டாடும் நிலை. சரியான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சாமானிய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது. பணம் படைத்த கறுப்புப் பண உரிமையாளர்களுக்கு சிறு கீறல் கூட விழவில்லை. 

என்ன கொடுமை சரவணன் இது?

Comments

  1. கறுப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று ரூ 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால், எவரும் பிடிபடவில்லையே!

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!