Posts

Showing posts from May, 2012

2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01

Image
இந்த இடுகைக்கு செல்லும் முன்னர் வாசகர்கள் தயவு செய்து எனது முன்னைய வலைப்பதிவான 'தூறல்கள்' வலைப்பதிவிற்கு சென்று உலக அழிவு தொடர்பில் நான் ஏற்கனவே இட்ட இரு இடுகைகளையும் வாசித்துக் கொள்ளவும். இடுகை - 01  உலகம் அழியப் போகிறதா?  இடுகை - 02  உலக அழிவு எப்படி இருக்கும்? இது தொடர்பில் வலைத்தளங்களில் ஏற்ககனவே இடப்பட்டுள்ள இடுகைகளின் திரட்டு. 1. உலகின் பொற்காலம் - 2012 mangaimano.wordpress.com 2. 2012இல் என்ன நடக்கப் போகிறது? mjmnashath.blogspot.com 3. உலகின் இறுதி நாள்  indiathendral.blogspot.com 4. பூமியைத் தாக்கவுள்ள விண்கல் – 2036 இல் பேரழிவு அபாயம்? meenmagal.net 5. உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது? ( Will the world see its end? ) koodal.com 6. 2012.12.22 ம் நாள் உலக அழிவு ஏற்படும்? kalamm.blogspot.com 7. உலகம் எப்போதுதான் அழியும்? panangkudil.blogspot.com 8 . உலக அழிவு - 3 : மாயன் காலண்டர் coolaaary.blogspot.com 9 . உலக அழிவு உண்மைதான்! wikileek.blogspot.com 10. 2012ல் உலகம் அழிந்து விடுமா?

என்னைக் கவர்ந்த சில கவிதைகள் (இணையத் தேடலில் அகப்பட்டவை)

Image
மூலம்:  பிரியத் தோழி  மூலம்:  தமிழ் மக்கள் குரல்   மூலம்:  பாரத் மொம்ஸ்   மூலம்: My wall paper site மூலம்:  மங்கை மனோ 

வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு....

Image
இது எனது 16வது திரைப்படம். (என்னாது? நீங்க படமெல்லாம் எடுக்குறீங்களா சார்? - இது என்ன உங்க புதுப் பட தலைப்பா? - அப்படின்னெல்லாம் அவசரப்பட்டு கேள்வி கேட்கக் கூடாது. அதாவது நான் திரையரங்கில் பார்க்கும் 16வது படம்னு சொல்ல வந்தேன்.) சினிசிட்டி திரையரங்கு - மருதானை, கொழும்பு-10. நுழைவுச்சீட்டின் விலை 20 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. (எந்த விலைதான் கூடாமல் இருக்கிறது?) அரங்கம் நிறைந்த காட்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். முன்வரிசை ஆசனங்கள் அப்படியே கிடந்தன. படம் வந்து ஒரு மாசமாயிருச்சில்ல? (நான் படம் பார்த்தது 2012/05/13 - ஞாயிற்றுக் கிழமை - மாலை 06:30 மணி) இப்ப எந்த படத்தைப் பத்தி பேசப் போறேன்னு தலைப்பை வச்சே நீங்க புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பத்தி தான் பேசப் போறேன். கதையே இல்லாமல் வெற்றி கரமாக ஓடிய திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. வலுவான திரைக்கதைப் பின்னணி ஏதும் இதற்கு இல்லை.  நகைச்சுவைத் திரைப்படம் என்றாலும் கூட திரைக்கதை மனதில் ஓட்ட வேண்டும். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சற்று ஏமாற்றம் தந்ததாகவே உணர முடிகிறது. சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை. க

உங்கள் உள்ளம் திறந்து நண்பனிடம் சொல்லுங்கள்

Image
இலங்கை மக்களின் மனங் கவர்ந்த "வெற்றி" வானொலியில் திங்கள் - வெள்ளி இரவு 8 மணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகிவரும் 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி பற்றி தான் இந்தப் பதிவு பேசப் போகிறது.  உங்கள் மனதில் கஷ்டமா? துக்கம் தாளாமல் அவதிப் படுகிறீர்களா? என் கஷ்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு நல்ல நண்பன் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உடனே 'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்படுத்தி உங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சோகத்தை முழுமையாக, சரியாக பகிர்ந்து கொள்வதற்கு இது மிகச்சிறந்ததொரு களமாகத் திகழ்கிறது. ஏனைய வானொலிகளைப் போல ஓரிரு நிமிடங்களுக்குள் உங்கள் துயரங்களை அடக்க வேண்டிய அவசியமில்லை. மனம் திறந்து என்னவெல்லாம் பேச நினைக்கிறீர்களோ அத்தனையையும் பேச  'நண்பனிடம் சொல்லுங்கள்' நிகழ்ச்சி மிகப் பொருத்தமானது. மிக நீண்ட காலமாக ஏராளமான நண்பர்கள் தங்கள் மனதை அடைத்துக் கொண்டிருந்த துக்கங்களைப் பகிர்ந்து ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். நிகழ்ச்சியைக் கேட்டாலோ , தொடர்பு கொண்டு உங்கள் சோகங்களைப் பகிர்ந்து கொண்டாலோ உங்களுக்கும் நிச்சயம்

துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!

Image
பெண்: துக்கமென்ன துயரமென்ன?                 எங்கிட்ட சொல்லு சொல்லு ....!                (துக்கமென்ன)                 கஷ்டமிந்த வாழ்க்கையில                 யாருக்கிங்கு இல்ல... இல்ல..?                ஒனக்கென நானிருக்க                எனக்கென நீயிருக்க                உள்ளுக்குள்ள வச்சு வெதும்பிட                வேணா எம் மாமா... எம் மாமா....                 (துக்கமென்ன) ஆண்:  சொந்தம் விட்டு மந்தையில                நின்ன கத சொல்லட்டுமா?                பெத்தவள வேதனையில்                விட்ட கத சொல்லட்டுமா?  பெண்: அப்பஞ் சொல்லு ஆறுதலு                 அத்தனையும் நாந் தருவேன்                  பச்ச மண்ணா நீயழுதா                  தாய் மடியா நானிருப்பேன் ஆண்:  தூக்கி என்ன வளத்த சொந்தம்                தூரமென ஆனதம்மா பெண்: தொப்புள் கொடி அத்தத தான்                 சொந்தம் விட்டுப் போயிடுமா? ஆண்:  ஏனிந்த பாடு?                தாங்காது கூடு பெண்: காலம் இனி மாறும் எம் மாமா                 (துக்கமென்ன)                  (ஒனக்கென)        

எங்கே செல்லும் இந்தப் பாதை? யாரோ யாரோ அறிவாரோ?

Image
இலங்கை மக்கள் தினசரி காலை எழுந்ததும் பத்திரிகையில் எதைப் பார்க்கிறார்களோ இல்லையோ, இன்று என்ன பொருளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளது என்று தான் தேடுகிறார்கள். திரை விமர்சனம் நிகழ்ச்சியில் 'இந்த வார புது வரவு' என்று அறிவிப்பதைப் போல இனி செய்திகளிலும் 'இந்த வார விலை அதிகரிப்பு' என்று அறிவிக்கும் நிலை தான் உருவாகப் போகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் வேகத்திற்கு உழைக்கும் மக்களின் வேதனங்கள் உயர்த்தப் படுவதில்லை என்பது மற்றுமொரு கசப்பான உண்மை. தற்போது வலைப் பதிவுகளிலும் சரி, இலங்கை மக்களின் மத்தியிலும் சரி பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயம் தான் இந்த விலை அதிகரிப்பு. கடந்த வெள்ளிக் கிழமை (மே - 04) சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12.5 கி.கி எடை கொண்ட சமையல் எரிவாயு 350 ரூபாவினாலும் 1 கி.கி பால் மாவின் விலை 163 ரூபாவினாலும் சீமெந்து மூட்டை (50 கி.கி) ஒன்றின் விலை 70 ரூபாவினாலும் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேற்படி விலை அதிகரிப்பின் பிரகாரம் 1 கி.கி பால்மாவின் உச்ச பட்ச விலை 810 ரூபாவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதங்களில் எரி பொருட்களி

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

Image
கொழும்புத் தமிழ் சங்கம் தனது 70வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இலக்கிய மாநாடொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. 2012 ஜூன் மாதம் 1,2,3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் இவ்விலக்கிய மாநாடு நடைபெற உள்ளது. "தமிழ் இலக்கியமும் , சமூகமும் - இன்றும், நாளையும்" என்ற தொனிப் பொருளிலேயே இம்மாநாடு நடை பெற உள்ளது. 2, 3, மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களும் மாநாட்டு தொனிப் பொருளுக்கு அமைவான கருத்தரங்குகள் இடம் பெற உள்ள அதே வேளை முதல் நாள் சென்னை பாரதியார் சங்கத்துடன் இணைந்து "பாரதி விழா" நடத்தப் பட உள்ளது. மாநாட்டில் பங்கு பற்றுவதற்கான மற்றும் ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் சங்க இணையத்தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சங்கத்தில் இடம்பெற உள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் "உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு" கொழும்பு தமிழ் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. குறித்த மாநாட்டிற்குப் பிறகு நடைபெறும் மாபெரும் விழாவாக இதனைக் கருத முடியும்.  ஜூன் மாதம் நடை பெற உள்ள உலகத் தமிழ் இலக்கிய மாநாடு சிறப்புற அமைய

வணக்கம் வலைத்தளம்!

Image
அன்பார்ந்த வலைப்பதிவுலக நண்பர்களே! இன்று முதல் நானும் உங்களோடு வலைப் பதிவுலகில் இணைந்து கொள்ளப் போகிறேன். ஏற்கனவே வலைப் பதிவுலகிற்கு சற்றே அறிமுகமானவன் தான் நான். " தூறல்கள் ".இப்படி ஒரு வலைப் பூவின் பெயரை அறிந்தவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். சிற்சில பிரச்சினைகள் காரணமாக " தூறல்கள் " வலைப் பதிவினை என்னால் தொடர முடிய வில்லை. எனவே தான் இந்த "சிகரம்" என்ற புதிய வலைப் பதிவினை தொடங்கி உள்ளேன். இப் புதிய வலைப் பதிவினை தொடர்ந்து நடத்திச் செல்ல உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கிறேன். நிகழ்காலத்தில் பயனுள்ள பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்க "சிகரம்" தயாராக உள்ளது. வலைப் பூவுலகில் ஆயிரக் கணக்கான வலைப் பூக்கள் வலம் வருகின்றன. அத்தனைக்குள்ளும் எனது வலைப் பூவும் வாசகர்களின் மனம் கவர்ந்த வலைப் பூவாக திகழ வேண்டும் என்பதே எனது பேரவா. எனது பெயர் சிகரம்பாரதி. இது எனது புனை பெயர் தான். இப் பெயரிலேயே நான் புகழ் பெற வேண்டும் என எண்ணுகிறேன். இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான். தற்போது கொழும்பில் தொழில் புரிகின்