Posts

Showing posts with the label ராஜசங்கீதன் ஜான்

இலங்கை சிந்தும் ரத்தம் உண்மையில் யாருக்கானது ? வரலாறு தரும் புதுக்கோணம் ! | கட்டுரை | கலைஞர் செய்திகள் | ராஜசங்கீதன்

Image
இனப்படுகொலையால் சிவந்த மண் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவந்திருக்கிறது. இயேசு மீது சிதறிய ரத்தம் இலங்கையோடு நிற்காமல் இந்தியப்பெருங்கடலுக்கும் பரவும் வாய்ப்பை அலசுகிறது இக்கட்டுரை. ராஜசங்கீதன் மனித வரலாறை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, போர்க்காலம். இரண்டு, போருக்கு தயாராகும் காலம். சமாதானம் என ஒன்றை மனிதன் அறிந்ததே இல்லை (ஓஷோ).  உலகப்போர்கள் திடுமென ஒரு நாளில் தொடங்கி விடுவதில்லை. முதல் உலகப்போர் ஆஸ்த்ரிய ஹங்கேரி நாட்டின் இளவரசர் கொல்லப்பட்டதில் தொடங்கியதாக நாம் படித்திருப்போம். ஆனால், அக்கொலைக்கு முன் இருந்த உலகச்சூழலை அலசி பார்த்தால் முக்கியமான உண்மை தெரியும். அத்தகைய சூழல் எப்போதுமே உலகில் இருந்து வருகிறது என்கிற உண்மை!  உலகப்போர்களுக்கான காரணங்கள் என்ன? முதல் உலகப்போருக்கு முன், உலக வணிகத்தில் முதன்மையாக இருந்த நாடு பிரிட்டன். உலகின் பெரும்பான்மையான நாடுகளை அடிமையாக்கி காலனிகளாக வைத்திருந்தது. அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி, உழைப்பை உறிஞ்சி, வணிகத்தையும் பெருக்கி படாடோபமாக கல்லா கட்டிக் கொண்டிருந்தது. ‘சூரியன் மறையாத பேரரசு’ என சொல்லி...

அரசியல் | தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? | ராஜசங்கீதன் ஜான்

Image
கேள்வி : தமிழ் தேசியம் என்றால் என்ன? அது சாத்தியமா? அனைத்து சித்தாந்தம் பேசும் தலைவர்களும் தமிழ் தேசியம் பேச வேண்டும் என எதிர்பார்க்கப்படுவது எதனால்? சரியா? தமிழ் தேசியம், சாதி தேசியமா? தமிழ் தேசிய அரசியல் இன்றை தலைமுறை இளைஞர்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?, தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்குமா? பதில் : தமிழ் தேசியம் சாத்தியமா என கேட்டால் நிகழ்சூழலை கவனிப்பவர்களுக்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றும். இந்திய அரசின் அதிகாரம், பன்னாடுகளுடனான இந்தியாவின் உறவு, உலக மூலதனத்துக்கான பெருஞ்சந்தையாக இந்தியா இருத்தல் போன்ற விஷயங்களை அவதானித்தால் தமிழ்தேசியம் சாத்தியமில்லை என்றே படும். உண்மை என்னவெனில், இந்தியா போன்ற ஒரு பெரும் அசாத்தியமே சாத்தியப்பட்டிருக்கையில், இங்கு எதுவுமே சாத்தியம் என்பதுதான். தமிழ்தேசியம் என்னும் அசாத்தியம் மட்டும் சாத்தியப்படாதா என்ன? தமிழ்தேசியத்துக்கான பலவகை கருத்தியல்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. எந்த கருத்தியலை போலவும் தமிழ்தேசியத்துக்கும் இடது, வலது உண்டு.  இடது தமிழ்தேசியத்தை கூர்மையாக்கியவர் பெரிய...

இனி என்ன?

Image
கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துவிட்டதாக தகவல் திங்கட்கிழமை மாலை வந்தபோது மாலில் (Mall) தோழி ஒருவருடன் உணவருந்தி கொண்டிருந்தேன். தகவல் கேட்டதும் மனம் இருள் கொண்டது. நிர்க்கதி என்பார்களே, அந்த நிலை! தோழி 'என்னாச்சு' என்றார். நிறைய ஆகியிருக்கிறது. எதை சொல்வது! கருணாநிதி இல்லையெனில் அந்த மால் இல்லை. மாலுக்கு வந்து சேர்க்கும் சாலைகளும் பாலங்களும் இல்லை. பேருந்துகள் இல்லை. தெருவுக்குள் இறங்கி நடக்கும் நாங்கள் இல்லை. என் அறிவு இல்லை. அந்த மாலுக்குள் அதிகம் தென்பட்ட இஸ்லாமியர்கள் இல்லை. இது நன்றிக்கடன் மட்டுமா? இல்லை. ஒரு மனிதனாக பிறந்து தன் சாதியை துறந்து மதத்தை துறந்து கட்சியைத் தாண்டி இனத்தை தாண்டி தனக்கானவர்களுக்கும் தனக்கு அல்லாதவர்களுக்கும் என ஒடுக்கப்படும் அனைவருக்காகவும் எந்தவித பாரபட்சமும் பிரதிபலனும் இன்றி உழைத்த தலைவனை இழந்த வேதனையா? இல்லை. பார்ப்பனீயம் என்ற மிகப்பெரும் ஒடுக்கு இயந்திரத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்தியாவுக்குள் இருந்து கொண்டு, மக்களை ஏய்க்க அது உருவாக்கியிருக்கும் தேர்தல் முறையையே கொண்டு, தமிழ் மக்கள் திரளை மிகச்சரியான arithmetic-ல...