சிந்தனையின் ஓரத்தில் சில எழுத்துக்கள்...!
- பிளாக்கர் தளம் சில மாற்றங்களைக் கண்டு வருகிறது. மகிழ்ச்சி. நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த பிளாக்கருக்கு கூகுள் மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பது நல்லது. ஆனால் இதுவரை புதிய தீம்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது சற்றுக் கவலையே.
- எது சரி, எது பிழையென நிச்சயிக்கமுடியாத வாழ்க்கையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்று சரியென தோன்றுவது நாளை பிழையாகிவிடுகிறது.
ஆனாலும், சிலவற்றை நாம் சகித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், நம் சகிப்புத் தன்மையால் அது மாறிவிடும் என்கிற நம்பிக்கை தான். நம்பிக்கையோ, நப்பாசையோ... நல்லது நடந்தால் சரியே.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன:ஒன்று காலம்...இன்னொன்று மெளனம்...-இணையம்
பிளாக்கர் தளத்தில் தொடர்ந்து மாற்றங்கள் - நல்லதாக இருந்தால் நலமே.
ReplyDelete