மலையகம் வளர்த்த எழுத்தாளர் 'சாரல் நாடன்' உடன் ஒரு நேர்காணல்! - பகுதி 01

மலையக இலக்கிய ஆளுமைகள் குறித்துப் பேசும்போது 'சாரல் நாடன்' தவிர்க்கப்பட முடியாதவர்.  'சாரல் நாடன்' இலங்கை, நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா வீரம்மா தம்பதிகளுக்கு 1944 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி பிறந்தார். தேயிலைத் தொழிற்சாலைகளில் மேலதிகாரியாகப் பணியாற்றிய இவர், சிறுகதை, புதினம் மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியதனூடாக மலையக இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.  'சாரல் நாடன்' 31.07.2014 அன்று காலமானார்.  'சாரல் நாடன்' அவர்களை பாடசாலைக் காலத்தில் 2005 ஆம் ஆண்டு நேர்காணல் செய்திருந்தேன். இந்த நேர்காணல் செப்டெம்பர் 2008 ஆம் ஆண்டு 'செங்கதிர்' கலை இலக்கிய சஞ்சிகையில் வெளியானது. அதனை 'சிகரம்' வாசகர்களுக்காக இங்கே பதிவு செய்கிறோம்.

'சாரல் நாடன்' - சில முக்கிய குறிப்புகள்:

* இவர் மலையகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் சிறந்தவர் என்ற வகையில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். 

* இலங்கை சமாதான நீதிவானாகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

* 'சாரல் வெளியீட்டகம்' இன் உரிமையாளரான இவர் இதன் மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

* இவரைப் பற்றிய தகவல்களோடு வெளியான நூல் 'சாதனையாளர் சாரல் நாடன்' என்பதாகும்.

* இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.

* நான்கு தடவை மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது பெற்றுள்ளார்.

* இவரின் இயற்பெயர் கருப்பையா நல்லையா என்பதாகும்.



எழுத்தாளர் 'சாரல் நாடன்' அவர்களைப் பற்றி இணையத்தில் வெளியாகியுள்ள சில குறிப்புகள்:




# வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும் - சை.கிங்ஸ்லி கோமஸ் - ஊடறு

# மறைக்கப்பட்ட ஆளுமைகள் - திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி - லெனின் மதிவானம் - இனியொரு

# மலையக இலக்கியத்தின் செல்நெறியும் தற்காலத்தில் அதன் முக்கியத்துவமும் - லெனின் மதிவானம் - தேனீ இணையத்தளம்

# மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் - நமது மலையகம்

# மலையக இலக்கிய கர்த்தாக்கள் - தொகுதி 01 (நூல்) - என். செல்வராஜா - நூலகம்

# மலையக நாவல்கள் பற்றிய தகவல்கள் திரட்டுவதற்கு காலம் அரும்பியுள்ளது - சாரல் நாடன் - நமது மலையகம்




இவர் எழுதிய நூல்கள்:

01. சி. வி. சில சிந்தனைகள் (1986)

02. தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988)

03. மலையகத் தமிழர் (1990)

04. மலையக வாய்மொழி இலக்கியம் (1993) - மத்திய மாகாண சாகித்திய விருது பெற்ற ஆய்வு நூல்

05. மலைக் கொழுந்தி (1994) - சாகித்திய விருது பெற்றது

06. மலையகம் வளர்த்த தமிழ் (1997) - கட்டுரைகள்

07. பத்திரிகையாளர் நடேசய்யர் (1999) - ஆய்வு நூல்

08. இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999) - கட்டுரைகள்

09. மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் (2000)

10. பிணந்தின்னும் சாத்திரங்கள் - குறு நாவல் (2002)

11. மலையக தமிழர் வரலாறு (2004)

12. பேரேட்டில் சில பக்கங்கள் (2005)

13. கண்டி ராசன் கதை (2005)

14. புதிய இலக்கிய உலகம் (2006)

15. குறிஞ்சி தென்னவன் கவிதைச் சரங்கள் (2007)




மலையகத்தின் வரலாற்றில் தடம் பதித்த 'சாரல் நாடன்' அவர்களுடனான நேர்காணல்:

சிகரம் : வணக்கம் ஐயா!

சாரல் : வணக்கம்!

சிகரம் : உங்களுடைய கலைத்துறைப் பிரவேசத்திற்கான காரணம்?

சாரல் : மலைநாட்டின் மீதான பற்று

சிகரம் : உங்களது கலைத்துறைக்கு ஊக்கமளித்தோர்?

சாரல் : எனது ஆசிரியர்கள்.

சிகரம் : நீங்கள் சாரல் நாடன் எனும் புனைபெயர் வைத்துக்கொண்டதற்கான காரணம்?

சாரல் : கலித்தொகை படித்தேன். அதில் சாரல் நாடன் என்றொரு பெயர் வந்தது. சாரல் நாடன் என்பது மலைநாட்டைக் குறிக்கும் ஒரு சொல்லாக அமைகிறது. அதனாலேயே இந்த சாரல் நாடன் எனும் பெயரை வைத்துக் கொண்டேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பு எது?

சாரல் : 1960இல் படைத்தேன். அது 'ஐயோ பாவம்' என்னும் கவிதை.




சிகரம் : அதனைத் தொடர்ந்து உங்களது எழுத்துப் பணி எவ்வாறு அமைந்தது?

சாரல் : சில நூல்களை எழுதியிருக்கிறேன். எனது சாரல் வெளியீட்டகம் மூலம் பல நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறேன்.

சிகரம் : உங்களுடைய முதலாவது படைப்பின் கரு?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்களைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது.

சிகரம் : அதனைத் தொடர்ந்து வந்த படைப்புகளில் எடுத்துக்கொண்ட கருப்பொருள்?

சாரல் : மலையகத்து வாழ்க்கையை எழுத்தாக்கி மக்களுக்கு உணர்த்த முயற்சித்தேன்.

சிகரம் : உங்களுடைய படைப்பின் மூலம் வாசகர்களுக்கு சொல்ல விழையும் கருத்து?

சாரல் : மலைநாட்டு மக்களின் அவலங்கள்

சிகரம் : எழுத்துப் பணியில் நீங்கள் அடைந்த வெற்றி?

சாரல் : எழுத்துப் பணியில் வெற்றி அடைந்தேன் என்று கூற முடியாது. ஏனெனில் எனது கருத்துக்கள் எனது படைப்புக்களின் மூலம் வாசகர்களுக்கு சென்றடைந்திருக்குமானால் அதை ஒரு சிறு வெற்றியாகக் கருதலாம்.




(அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்.

சாரல் : எனது படைப்புக்களை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?


சிகரம் : ஆம்


சாரல் : என்ன படைப்புகள்?


சிகரம் : மலைக்கொழுந்தி, மலையகத் தமிழ் இலக்கியம் முதலியவை.


தொடர்ந்து எனது வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.)


சிகரம் : இதுவரை நீங்கள் எழுதிய கவிதைகள்?

சாரல் : முதல் கவிதை 1960இல் படைத்தேன். முதலில்கூடச் சொன்னேன். 'ஐயோ பாவம்' என்ற கவிதை. அதுதான் என்னுடைய முதல் படைப்பு.

சிகரம் : உங்களுடைய கட்டுரைகள்?

சாரல் : கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

சிகரம் : உங்களுடைய சிறுகதைகள்?

சாரல் : பதினைந்து சிறுகதைகள் எழுதியிருந்தேன். அது மலைக்கொழுந்தி என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாக இந்தியா, சென்னையில் இருந்து வெளிவந்தது.

சிகரம் : நீங்கள் எழுதியுள்ள நாவல்கள் பற்றி...?

சாரல் : 'பிணம் தின்னும் சாத்திரம்' என்ற நாவலை எழுதியிருக்கிறேன். இது பற்றிய விபரம் 2002 வீரகேசரியில் வெளிவந்தது. மேலும் 'பலி' எனும் குறுநாவலையும் எழுதியிருக்கிறேன்.

இது ஒரு வித்தியாசமான முறையில் எழுதப்பட்டதொரு குறுநாவலாகும். அதன் முதல் அத்தியாயத்தை என்.எஸ்.எம் ராமையா எழுதினார். இரண்டாம் அத்தியாயத்தை தெளிவத்தை ஜோசப் எழுதினார். மூன்றாம் அத்தியாயத்தை நான் எழுதினேன். ஆனாலும் நாம் மூவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. தபால் மூலம் தான் குறுநாவல் எழுதப்பட்டது. 

அதாவது முதலில் ராமையா முதல் அத்தியாயத்தை எழுதி ஜோசப்புக்கு தபால் மூலம் அனுப்பினார். அவர் இரண்டாம் அத்தியாயத்தை எழுதி எனக்கு அனுப்பினார். ஆக, மூன்று அத்தியாயங்களைக் கொண்ட இந்த 'பலி' எனப்படும் குறுநாவல் மூவர் இணைந்து எழுதிய ஒரு குறுநாவலாக அமைந்தது. 

இது 1967 தைத்திங்கள் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட பொங்கல் விழா மலருக்கு அழகு சேர்ப்பதாகவும் அமைந்தது. இது 1997இல் 30 வருடங்களின் பின் 'கொழுந்து' சஞ்சிகையில் 11 மற்றும் 12ஆம் இதழ்களில் மீள்பிரசுரம் செய்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

#சிகரம் #சிகரம்பாரதி #நேர்காணல் #சாரல்நாடன் #மலையகம் #இலக்கியம் #SIGARAM #SigaramBharathi #Interview #SaaralNadan #Malaiyagam #UpCountry 

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!