வாழ வேண்டும்!
நீ அதுவாக இரு
இதுவாக இரு
என்று
சொல்லிக்கொடுத்த சமூகமே...
ஏன் என்னை
நீ
நீயாக இரு
என்று
சொல்லிக்கொடுக்கவில்லை?
நிரந்தர வேலை
கண்ணில் கண்ட
அனைத்தையும்
வாங்க தேவையான சம்பளம்
சிகப்பான மனைவி
வெள்ளையான பிள்ளை
இரண்டு கார்
மூன்று பங்களா
இது தானா
நீ
சொல்லும் வாழ்க்கை?
ஏன்
ஓலைக் குடிசையில்
வாழ்பவன் மனிதனில்லையா?
இலட்சியத்துக்காக
போராடுநவன்
சமூக எதிரியா?
கறுப்பான பெண்ணை
காதலித்தால்
ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?
நீங்கள்
சொன்னபடியெல்லாம்
ஓடி ஓடி
எனக்கான வாழ்க்கையை
இழந்துவிட்டேன்
போதும்
உங்கள் பேச்சைக்
கேட்டது போதும்
உங்களை
கண்மூடித்தனமாக
நம்பியது போதும்
இனி
வாழ வேண்டும்
நான்
நானாக...
எனக்காக...
சிந்தித்த வரிகள் அருமை...
ReplyDeleteமிக்க நன்றி தோழரே!
DeleteEthu ungal paarvaiyil samoogammm. Atha motha sollunga
ReplyDeleteஆம் நண்பரே. எனது பார்வையில் தானே கவி படைக்க முடியும்?
Deleteநான் எதிலும் சேத்தி இல்லை..கவிதையிலிருந்து
ReplyDeleteபரவாயில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteசிறப்பான வரிகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Delete