வாசிப்பும் பகிர்வும் -02 - உக்ரையீனா - பா ராகவன்
வாசிப்பு என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. ஏன் எனக்குப் பிடித்தமானதும் கூட. சிறுவயதில் இருந்தே நூல்களும் நூலகங்களும் எனக்குப் பிடித்தவையாக இருந்திருக்கின்றன. வாசிப்பின் தொடர்ச்சியாக பாடசாலைக் காலத்தில் கையெழுத்து சஞ்சிகையும் தொடர்ந்து வந்த காலத்தில் வலைப்பதிவுகளும் பின்னர் ஒரு சில இணையத்தளங்களும் என என் முயற்சிகள் விரிவடைந்து சென்றிருக்கின்றன. ஆனாலும் புத்தகம் வெளியிட நினைத்தாலும் இதுவரை அந்த எண்ணம் ஈடேறவில்லை. இருந்தாலும் இடைநடுவில் சிலகாலம் வாசிப்பை விட்டு நான் பிரிந்திருக்க நேரிட்டது. அதற்கும் இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக வாசிக்கிறேன். ஆனால் உரிய காலத்திற்குக் காத்திருந்ததன் விளைவாக இந்த ஆண்டு வாசிப்பு மாரத்தான் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பங்குபற்றுகிறேன்.
எனது முதல் வாசிப்பு பதிவாக எழுத்தாளர் பா. ராகவன் Pa Raghavan எழுதிய உக்ரையீனாவை பதிவு செய்ய விரும்புகிறேன். அளவில் சிறியதாக இருந்தாலும் விடயத்தில் பெரியதாக இருக்கிறது இந்த நூல். உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே தற்போது மூண்டுள்ள இந்த போர், ஏன், எதற்கு என்பதை விரிவாக ஆராய்கிறது உக்ரையீனா. அவசியமான தகவல்கள் மாத்திரமே இந்த புத்தகத்தில் உள்ளன. மற்றபடி வழவழா கொழகொழா எல்லாம் இங்கு இல்லை. ஆகவே தைரியமாக எவரும் இதனை வாசிக்கலாம்.
கைக்கடக்கமான புத்தக வடிவமைப்பும் வாசகரை நிச்சயம் கவரும். உங்கள் கைப்பையில் வைத்து எடுத்துச் சென்று வாசிக்கலாம். ஆகவே உங்கள் வாசிப்புக்கு இது நிச்சயம் உதவும்.
அதுமட்டுமின்றி இன்றைய யுத்தம் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆகவே அரைகுறை தகவல்களை தெரிந்து கொண்டு அல்லாட வேண்டிய அவசியம் இல்லை.
பணத்திற்குப் பெறுமதி என்பார்களே, அப்படி நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கும் உங்கள் நேரத்திற்கும் இந்த நூல் நிச்சயம் பெறுமதியானதே.
வாருங்கள் தொடர்ந்து வாசிப்போம்!
#வாசிப்புமாரத்தான்2024
குறிப்பு: வாசிப்பை நேசிப்போம் பேஸ்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் வாசிப்பு மாரத்தான் 2024 போட்டிக்காக எழுதப்பட்ட பதிவு இது.
தங்களது வாசிப்பை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteசஞ்சிகை என்ற சொல்லை பயன்படுத்திய உங்களுக்கு பாராட்டுக்கள். நூலை படிக்க முயல்கிறேன்.
ReplyDelete