பேராதனை பழைய புகையிரத நிலையம்
இலங்கையில் புகையிரத சேவை இற்றைக்கு சுமார் 161 ஆண்டுகளுக்கு முன்பு 1858ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
படிப்படியாக ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் புகையிரத சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன.
இன்று காணப்படும் புகையிரத மார்க்கங்களில் பெரும்பாலானவை சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்டவை ஆகும்.
ஆங்கிலேயரால் நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையின் அளவுக்கு சிங்கள அரசாங்கத்தால் புகையிரதப் பாதைகள் மேம்படுத்தப்படவில்லை.
இன்றைக்கும் கூட ஆங்கிலேயர் கால சேவை அட்டவணையின் பிரகாரமே புகையிரத சேவைகள் மேற்கொள்ளப்படுவதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
சரி, 2019.04.20 அன்று எனது ஊரில் இருந்து கொழும்புக்கு வரும் வழியில் பேராதனை புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் போது புகையிரத நிலையத்தின் ஒரு புறம் இருந்த பேராதனை பழைய புகையிரத நிலைய கட்டடம் கண்ணில் பட்டது.
இப் புகையிரத நிலையம் 1867ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
அதாவது இலங்கையில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகளில்!
காலம் கடந்த நினைவுச் சின்னங்கள் அருகி வரும் நிலையில் அதனை இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. அதனால் இங்கே சிறு குறிப்பாக இங்கே பகிர்ந்து கொண்டேன்.
நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டிய இடம். தகவல் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉங்களுடைய முதற்குறிப்பு சிறப்பாக உள்ளது.
ReplyDelete