பிக் பாஸ் தமிழ் - 02 | நாள் - 05 | வட போச்சே!
பிக் பாஸ் தமிழ்
பருவம் 02
BIGG BOSS TAMIL
SEASON 02
நாள் 05
நேரம் இரவு 11.15
நித்யாவையும் பொன்னம்பலத்தையும் தண்ணீரில் பத்து தடவை தள்ளி விடுகின்றனர். இரவு 11.45க்கு சென்ராயன் மற்றும் ரித்விகாவின் தலைகளில் முட்டைகள் உடைக்கப்படுகின்றன. நள்ளிரவு 12 மணியாகியும் போட்டியாளர்கள் தூங்காமல் அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராகின்றனர். ஆனால் பிக்பாஸ் விளக்குகளை அணைத்து விடுகிறார்.
நள்ளிரவு 12.30
டேனியும் யாஷிகாவும் வெங்காயம் உரிப்பதை இருட்டிலும் தொடர்கின்றனர். நள்ளிரவு 03 மணியாகியும் வெங்காயம் வெட்டி முடிந்தபாடில்லை. ஆனால் அதிகாலை 04.30க்கு வெங்காயம் உரிப்பதை இடைநிறுத்துகின்றனர். மும்தாஜ் இவ்வளவு கஷ்டப்பட்டு போட்டியை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றார்.
காலை 08.00
'ஆளப் போறான் தமிழன்' பாடலுடன் காலைப் பொழுது விடிகிறது. விடிய விடிய வெங்காயம் வெட்டியது கண்ட இடத்திலெல்லாம் எரிகிறது என்று டேனி பிக்பாசிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்.
காலை 09.30
அனந்த் பாலாஜி-நித்யா விவகாரம் குறித்து பாலாஜியிடம் வினவிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த போட்டி துவங்குகிறது. பாலாஜியும் மும்தாஜும் சிறு பிள்ளைகளாக மாறுகின்றனர்.
காலை 11.30
நித்யா பாலாஜிக்கு பவுடர் போட்டு விடுகிறார்.
மதியம் 12.15
ஜனனி ஆண் வேடம் போடுகிறார்.
மதியம் 01.00
வெங்காயம் வெட்டும் பணி மீண்டும் தொடர்கிறது.
மதியம்
நித்யா போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சக போட்டியாளர்கள் சாப்பாட்டு மேசையில் உரையாடல் நடக்கிறது.
மாலை 04.00
வீட்டின் தலைவி ஜனனியை பிக்பாஸ் Confession Room இற்கு வருமாறு அழைக்கிறார். போட்டியாளர்கள் சிலர் ஏன் போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்கவில்லை என வினவுகிறார்.
இரவு 07.30
'சொன்னபடி கேளு' போட்டி முடிவடைந்தது. இப்போட்டிக்கான மதிப்பெண்கள் 1000. அவற்றில் நான்கு பேர் ஆர்வமாகப் பங்கேற்காததால் அவர்களுக்காக 400 மதிப்பெண்களைக் குறைத்து 600 மதிப்பெண்களை மட்டுமே வழங்குவதாக பிக்பாஸ் அறிவித்தார். அதே நேரம் மூன்று போட்டியாளர்கள் சிறப்பாக செய்ததால் 300 மதிப்பெண்களை போனஸாக வழங்குவதாக தெரிவித்தார். அதனால் மொத்தம் 900 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இரவு 09.00
'நாம் என்ன வேலையில் இருந்தாலும் சமையலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்' என்று மும்தாஜ் நித்யாவிடம் கூறினார். அனால் நித்யா அதற்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
இரவு 09.45
இவ்வார Luxury Budget இற்கான பொருட்களை இப்போது கொள்வனவு செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தார். ஆனால் 'சொன்னபடி கேளு' போட்டியில் மும்தாஜ், டேனி, யாஷிகா ஆகிய மூவர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டதால் அவர்கள் மூவர் மட்டுமே பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும் என பிக்பாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அந்த மூவரும் வேறு யாருடனும் கலந்துரையாடாமல் தான் பொருட்களை கொள்வனவை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
இரவு 10.15
வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்பறையில் கூடியுள்ளனர். வீட்டின் தலைவி ஜனனியை அழைத்த பிக்பாஸ் இவ்வாரம் Luxury Budget போட்டிகளில் ஆர்வமாகப் பங்கேற்காத இரண்டு போட்டியாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுமாறு கூறினார். அவர் பாலாஜி மற்றும் நித்யாவின் பெயர்களைக் குறிப்பிட்டார். இத்துடன் இவ்வார Luxury Budget போட்டிகள் முடிவடைந்தது என பிக்பாஸ் குறிப்பிட்டார்.
இரவு 11.00
வீட்டின் விளக்குகள் அணைக்கப்பட்டன. நாளை சனி, மற்றும் ஞாயிறு தினங்களில் கமல் வருவார். என்ன சொல்லுவார்? யாருக்குக் குறும்படம் காட்டுவார்? என்னவெல்லாம் நடக்கும்? நாளை பார்க்கலாம்.
நல்லவர் யார்? கெட்டவர் யார்?
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #கமல்ஹாசன் #மும்தாஜ் #ஜனனி #பாலாஜி #நித்யா #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #VijayTV #KamalHassan #Mumtaz #Janani #Bhalajie #Nithya #SIGARAMCO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்