பிக் பாஸ் தமிழ் 02 - இரண்டாம் நாள் - நடந்தது என்ன?
பிக் பாஸ் இரண்டாம் நாளில் காலை முதல் முக்கியமான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாலையில் முட்டைப் பிரச்சினை விவாதத்துக்கு வந்தது. கடந்த பருவத்தில் கணேஷ் முட்டைகளைத் திருடி உண்கிறார் என்று சக போட்டியாளர்களால் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் இம்முறை முட்டைகள் காணாமல் போகவில்லை. இரண்டு நாட்களில் அதிக ஆம்லெட்டுகள் போடப்பட்டதால் 85 முட்டைகள் மட்டுமே மீதமுள்ள. இன்னும் ஐந்து நாட்களுக்கு அவற்றைப் பாவிக்க வேண்டும். ஆகவே சிக்கனமாக அவற்றை எப்படிப் பாவிப்பது என சமையல் அணித் தலைவி மும்தாஜ் விளக்கினார்.
கூடவே தேனீர் பவுடரும் இருப்புக் குறைவாக இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே தேநீர் வழங்கப்படும் என வரையறுக்கப்பட்டது. உணவு உண்பவர்கள் அவற்றை முறையாக சுத்தம் செய்வதில்லை என சமையல் பாத்திர அணித் தலைவி குற்றம் சாட்டினார். விவாதத்தை இவ்வாரத்தலைவி ஜனனி வழிநடத்தினார்.
மாலை Luxury Budget Task எனப்படும் உணவுப் பொருள் கொள்வனவிற்கான போட்டி நடைபெற்றது. ஒவ்வொருவரும் மற்றவரை எவ்வளவு அறிந்து வைத்துள்ளனர் என்பதை பரீட்சிக்கும் போட்டியாக அமைந்தது. இதற்கு 800 புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்குப் பின்னர் தலைவி ஜனனி சக போட்டியாளர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடினார்.
நாளை பீலா பீலா என்னும் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு அணி கதைகளைச் சொல்ல வேண்டும். மற்றைய அணி அக்கதைகள் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். போட்டிக்கான விதிமுறைகளும் கூறப்பட்டன.
நள்ளிரவு ஒரு மணியளவில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அதன் பின் மூன்று போட்டியாளர்கள் இணைந்து முற்றத்தில் அமர்ந்து பாலாஜி - நித்யா இருவரும் கணவன் - மனைவி பிக் பாஸ்க்கு வந்துள்ளது குறித்துக் கலந்துரையாடினர்.
பார்க்கலாம்...
நல்லவர் யார்? கெட்டவர் யார்?
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #பாலாஜி #ஓவியா #BiggBoss #VivoBiggBoss #VijayTV #KamalHassan #Maiam #BiggBossTamil #Oviya #Balaji
Bigg Boss Tamil Season 02 - day 02 - What happening?
நல்லாத்தான் பொகுது சிகரம் பாரதியின் பிக்பொஸ்:)
ReplyDelete