குறளும் கவியும் | உயரத்தில் எச்சரிக்கை!
குறளும் கவியும் | உயரத்தில் எச்சரிக்கை!
அதிகாரம் 96
குடிமை
*****
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து (குறள் 957)
****
உயரத்தில் எச்சரிக்கை!
***
பதவிகள்
உயரும் போது
பண்புகள்
உயர்தல் வேண்டும்
நிலைதனில்
வளரும் போது
நிச்சயம்
கவனம் வேண்டும்,
எந்தவோர்
புகழு மில்லார்
எவ்வகை
இழிந்தோ ரேனும்
தெருவுக்குள்
தெரியு மல்லால்
தேசத்தோர்
அறிய மாட்டார்,
நல்லதோர்
குடிப் பிறந்து
நாட்டுக்குத்
தலைவனாக
உள்ளவர்
தவறு செய்தால்
உலகெலாம்
தெரிய லாகும்,
விளக்கிலே
கரி இருந்தால்
வீட்டுளோர்
அறியக் கூடும்
நிலவினில்
கருமை யிந்த
நிலத்துளோர்
அறிய நேரும்,
புகழதின்
உச்சி தன்னில்
பெருமையாய்
உள்ள நீங்கள்
தவறுகள்
நேரா வண்ணம்
தற்காப்பு
செய்க வென்றான்!
*****
வள்ளுவச்செல்வர்
கவிஞர் மானம்பாடி புண்ணியமூர்த்தி.
#திருக்குறள் #கவிதை #தமிழ் #திருவள்ளுவர் #பதவி #பண்பு #thirukkural #thiruvalluvar #porem #tamil #thamizh #SIGARAMCO #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்