எங்கிருந்து வந்தாய்?

எங்கிருந்து என்னுள் வந்தாய்!
கண்ணே யெந்தன்
கனவுக்குள் வந்தாயா?
எந்தன் கண்களாக வந்தாயா?

கோடையில்கூட தேகம்
 குறுக்குகிறேன்!
பெண்ணே தென்றலாய்
 வந்தாயா-குளிர் நீராய்
 நனைத்தாயா?

எந்தன் உயிருக்குள்
 எப்படிநீ நுழைந்தாய்!
அன்பே உதிரத்தில் கலந்தாயா?
எந்தன் உணர்வினில்
கலந்தாயா!



எந்தன் மழலையின்
 நினைவு என்னிடத்தில்
உயிரே தாயென வந்தாயா-மனக்
கருவினில் சுமந்தாயா?

அயர்ந்து நிற்கிறேன்
உனைக்கண்டு!
மலரே சிலையென
 வந்தாயா?
சித்திரமாய் வந்தாயா?

விழிநீர் சொரிகிறேன்
உந்தன் அதட்டல்களில்
தாயே குருவென
வத்தாயா-எந்தன்
குருதியாய் வந்தாயா?

வேண்டிடும் வரங்கள்
 நீதந்தாய்!
கனிவே எந்தன்
இறையென வந்தாயா
இவன் இடமென
 வந்தாயா?

பதிவர் : கவின்மொழிவர்மன்

#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!