எங்கிருந்து வந்தாய்?

எங்கிருந்து என்னுள் வந்தாய்!
கண்ணே யெந்தன்
கனவுக்குள் வந்தாயா?
எந்தன் கண்களாக வந்தாயா?

கோடையில்கூட தேகம்
 குறுக்குகிறேன்!
பெண்ணே தென்றலாய்
 வந்தாயா-குளிர் நீராய்
 நனைத்தாயா?

எந்தன் உயிருக்குள்
 எப்படிநீ நுழைந்தாய்!
அன்பே உதிரத்தில் கலந்தாயா?
எந்தன் உணர்வினில்
கலந்தாயா!



எந்தன் மழலையின்
 நினைவு என்னிடத்தில்
உயிரே தாயென வந்தாயா-மனக்
கருவினில் சுமந்தாயா?

அயர்ந்து நிற்கிறேன்
உனைக்கண்டு!
மலரே சிலையென
 வந்தாயா?
சித்திரமாய் வந்தாயா?

விழிநீர் சொரிகிறேன்
உந்தன் அதட்டல்களில்
தாயே குருவென
வத்தாயா-எந்தன்
குருதியாய் வந்தாயா?

வேண்டிடும் வரங்கள்
 நீதந்தாய்!
கனிவே எந்தன்
இறையென வந்தாயா
இவன் இடமென
 வந்தாயா?

பதிவர் : கவின்மொழிவர்மன்

#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco

Comments

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?