எங்கிருந்து வந்தாய்?
எங்கிருந்து என்னுள் வந்தாய்!
கண்ணே யெந்தன்
கனவுக்குள் வந்தாயா?
எந்தன் கண்களாக வந்தாயா?
கோடையில்கூட தேகம்
குறுக்குகிறேன்!
பெண்ணே தென்றலாய்
வந்தாயா-குளிர் நீராய்
நனைத்தாயா?
எந்தன் உயிருக்குள்
எப்படிநீ நுழைந்தாய்!
அன்பே உதிரத்தில் கலந்தாயா?
எந்தன் உணர்வினில்
கலந்தாயா!
எந்தன் மழலையின்
நினைவு என்னிடத்தில்
உயிரே தாயென வந்தாயா-மனக்
கருவினில் சுமந்தாயா?
அயர்ந்து நிற்கிறேன்
உனைக்கண்டு!
மலரே சிலையென
வந்தாயா?
சித்திரமாய் வந்தாயா?
விழிநீர் சொரிகிறேன்
உந்தன் அதட்டல்களில்
தாயே குருவென
வத்தாயா-எந்தன்
குருதியாய் வந்தாயா?
வேண்டிடும் வரங்கள்
நீதந்தாய்!
கனிவே எந்தன்
இறையென வந்தாயா
இவன் இடமென
வந்தாயா?
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco
கண்ணே யெந்தன்
கனவுக்குள் வந்தாயா?
எந்தன் கண்களாக வந்தாயா?
கோடையில்கூட தேகம்
குறுக்குகிறேன்!
பெண்ணே தென்றலாய்
வந்தாயா-குளிர் நீராய்
நனைத்தாயா?
எந்தன் உயிருக்குள்
எப்படிநீ நுழைந்தாய்!
அன்பே உதிரத்தில் கலந்தாயா?
எந்தன் உணர்வினில்
கலந்தாயா!
எந்தன் மழலையின்
நினைவு என்னிடத்தில்
உயிரே தாயென வந்தாயா-மனக்
கருவினில் சுமந்தாயா?
அயர்ந்து நிற்கிறேன்
உனைக்கண்டு!
மலரே சிலையென
வந்தாயா?
சித்திரமாய் வந்தாயா?
விழிநீர் சொரிகிறேன்
உந்தன் அதட்டல்களில்
தாயே குருவென
வத்தாயா-எந்தன்
குருதியாய் வந்தாயா?
வேண்டிடும் வரங்கள்
நீதந்தாய்!
கனிவே எந்தன்
இறையென வந்தாயா
இவன் இடமென
வந்தாயா?
பதிவர் : கவின்மொழிவர்மன்
#கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #சிகரம் #sigaram #sigaramco
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்