எங்கள் ஔவை!
ஒன்றல்ல, இரண்டல்ல
பலவானவர் ஔவை.
ஒவ்வொரு காலமும்
புதிரானவர் ஔவை.
முத்தமிழ் கவியில்
முதலானவர் ஔவை.
முழுமதி முகத்தினிற்
திருவானவர் ஔவை!
செந்தமிழ் மொழியின்
சிறப்பானவர் ஔவை,
சீர்மிகுத் தமிழில்
கனிவானவர் ஔவை,
கம்பன் வீட்டில்
கட்டுத்தறிதான் கவிபாடும்-ஔவை
யென்றால் அணுக்களும்
அஞ்சி வாய்மூடும்!
மூதுரையின் மூதாட்டி
எங்கள் ஔவை,
நன்னூல் நான்மணியினிற்
கோவை அவர்,
பிங்கல நிகண்டின்
இலக்கணமும் அவர்!
ஆத்தியைச் சூடியே
அறம்வளர்த்த அன்னையவர்!
அதியனின் அரிய
நெல்லிக்கனி ஔவை,
பாரிமகளிரை மணம்
செய்வித்த மாதரசியவர்,
நெறிபல உரைத்துக்
கவிபல படைத்து
போர்களைத் தடுக்கும்
புலவரு மவர்!
கம்பனை கதறிட
செய்தவர் ஔவை-பதில்
கவிகளால் பதறிட
செய்தவர் ஔவை,
பக்தியில் திழைத்த
ஞானப்பழமு மவர்,
தமிழ்சக்தியாய் திகழ்ந்த
ஞானசெருக்கு மவர்!
மறத்தமிழ் புறத்தையும்
உரைத்தார் மனங்களின்
உணர்வில் காதல்
அகத்தையும் வடித்தார்,
வள்ளுவன் குறளினை
அணுவென குறைத்தார்,
சமகால புலவர்களையும்
கவிதையில் வடித்தார்!
அகத்திலும் புறத்திலும்
உணர்வினை வடித்தார்,
நற்றிணைக் குறுந்தொகையினை
நயம்பட உரைத்தார்!
கிழவுருவம் படைத்த
அரம்பையு மிவர்,
இவருக்கு இணையாக
தமிழ்பாட ஒருவருமிலர்!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#தமிழ் #கவிதை #ஔவை #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #sigaram #sigaramco #சிகரம்
பலவானவர் ஔவை.
ஒவ்வொரு காலமும்
புதிரானவர் ஔவை.
முத்தமிழ் கவியில்
முதலானவர் ஔவை.
முழுமதி முகத்தினிற்
திருவானவர் ஔவை!
செந்தமிழ் மொழியின்
சிறப்பானவர் ஔவை,
சீர்மிகுத் தமிழில்
கனிவானவர் ஔவை,
கம்பன் வீட்டில்
கட்டுத்தறிதான் கவிபாடும்-ஔவை
யென்றால் அணுக்களும்
அஞ்சி வாய்மூடும்!
மூதுரையின் மூதாட்டி
எங்கள் ஔவை,
நன்னூல் நான்மணியினிற்
கோவை அவர்,
பிங்கல நிகண்டின்
இலக்கணமும் அவர்!
ஆத்தியைச் சூடியே
அறம்வளர்த்த அன்னையவர்!
அதியனின் அரிய
நெல்லிக்கனி ஔவை,
பாரிமகளிரை மணம்
செய்வித்த மாதரசியவர்,
நெறிபல உரைத்துக்
கவிபல படைத்து
போர்களைத் தடுக்கும்
புலவரு மவர்!
கம்பனை கதறிட
செய்தவர் ஔவை-பதில்
கவிகளால் பதறிட
செய்தவர் ஔவை,
பக்தியில் திழைத்த
ஞானப்பழமு மவர்,
தமிழ்சக்தியாய் திகழ்ந்த
ஞானசெருக்கு மவர்!
மறத்தமிழ் புறத்தையும்
உரைத்தார் மனங்களின்
உணர்வில் காதல்
அகத்தையும் வடித்தார்,
வள்ளுவன் குறளினை
அணுவென குறைத்தார்,
சமகால புலவர்களையும்
கவிதையில் வடித்தார்!
அகத்திலும் புறத்திலும்
உணர்வினை வடித்தார்,
நற்றிணைக் குறுந்தொகையினை
நயம்பட உரைத்தார்!
கிழவுருவம் படைத்த
அரம்பையு மிவர்,
இவருக்கு இணையாக
தமிழ்பாட ஒருவருமிலர்!
பதிவர் : கவின்மொழிவர்மன்
#தமிழ் #கவிதை #ஔவை #கவின்மொழிவர்மன் #tamil #poem #kavinmozhivarman #sigaram #sigaramco #சிகரம்
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்