முக நூல் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள் மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்:

அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!


01. பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது.
ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே
ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு.

“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!

02. நல்லதையே செய்து வாழும் நல்லவர்க்கு
நாணமதை சொத்தெனவே கொண்டவர்க்கு
கொல்லுகின்ற துன்பம் ஒன்று வந்து விட்டால்
குலைந்தழுது ஒழிவாரோ என்றும் மாட்டார்
அல்லவர்தான் அழுது நிற்பார் அரற்றி நிற்பார்
அறிவுடைய நல்லவர்கள் தெளிந்தே நிற்பர்
புல்லர்களோ மண்குடம் போல் உடைந்தால் போச்சு
பொன்குடமே நல்லவர்கள் உடைந்தும் பொன்னே.

03. அரசியல் ஆத்திச்சூடி..!!
------------------------------
அரிச்சந்திரன் மாதிரி ஆக்ட் குடு.,

ஆனவரை சுருட்டு.,

இலவசம் குடு.,

ஈயையும் கட்சியில் சேர்.,

உண்மையை மறை.,

ஊழலை உலகமயமாக்கு.,

எதிர்கட்சி மீது பழி போடு.,

ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,

ஐந்து காலேஜாவது கட்டு.,

ஒபாமாவுக்கு விருந்து வை.,

ஓடி ஓடி துட்டு சேர்.,

ஓளவை சொல் கேக்காதே.,
ஃக்கு தப்பாய் மாட்டிக்காதே..!!

04.

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.


மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.


கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.

மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.


கணவன்: முட்டைப் பொரியல்?


மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.


கணவன்: பூரி?


மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.


கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?


மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.


கணவன்: மோர் குழம்பு?


மனைவி: வீட்ல மோர் இல்ல.


கணவன்: இட்லி சாம்பார்?


மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.


கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.


மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.


கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?


மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.


கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!


05. எனக்கு ஒரு பெரிய சந்தேகம்....

கல்யாணம் ஆன அப்புறம் எந்த ஒரு பொண்ணும் புருஷங்கிட்ட சொல்றாளுக

நான் யாரையுமே லவ் பண்ணதே இல்லனு....
அப்புறம் நம்மள்ள 90% பேர் தோல்வி அடையர
பொன்னுங்கள எவன் கட்டறான்...
இன்னுமா நம்புறானுங்க....
எவன் பொண்டாட்டியோ மாதவி
நம்ம பொண்டாட்டி சீதை...
இதானோ அது.....

ஒரே குயப்பமா இருக்கு....

நமக்கு வரப் போறவ எவன் கூட சுத்திட்டு இருக்களோ..
உங்க ஆளுதான்யா....

நன்றிகளுடன்.....
சிகரம்பாரதி.

Comments

  1. அருமையான தொகுப்பு இரசித்தேன்.

    ReplyDelete
  2. ஐந்தும் முத்துக்களாகத் தான் இருக்கிறது பாரதி.
    தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!