உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!
சித்திரை விடுமுறைக்குப் பின்னர் வழமைக்குத் திரும்ப முயன்ற இலங்கை பெரும் துயரில் வீழ்ந்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களினால் சுமார் 227 பேர் வரை பலியாகியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள், மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையிலுள்ள உணவகம், தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதி ஆகியன குண்டுவெடிப்புக்கு இலக்கான பகுதிகள்.
2019.04.21 அன்று காலை முதல் மதியம் வரை எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் - 65 பேர் பலி; 267 பேர் காயம்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் - 30 பேர் பலி; 75 பேர் காயம்.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம் - 112 பேர் பலி; 100 பேர் காயம்.
கொழும்பு தெமட்டகொட குடியிருப்பு பகுதி - 3 பேர் பலி.
கொழும்பு ஐந்து நட்சத்திர விடுதிகள் (சின்னமன் கிராண்ட், ஷங்ரிலா மற்றும் கிங்ஸ்பெரி) - 30 பேர் பலி.
மேலும் நீர்கொழும்பு கட்டுநாயக்க பிரதேசம் மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பேஸ்புக், வைபர் மற்றும் வாட்ஸப் ஆகிய சமூக வலைத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இயவு நேர தபால் புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன.
மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பேரூந்துகளில் பெரிய பயணப் பொதிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முப்படைகளின் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் அவசர கால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுக்கும்.
இறந்தவர்களின் உடல்களை அரசு செலவில் அடக்கம் செய்ய நடவடிக்கை.
உலகத் தலைவர்கள் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனம்!
உயிர்த்த ஞாயிறில் மரித்த உயிர்கள்!
https://newsigaram.blogspot.com/2019/04/attacks-at-sri-lankan-hotels-and-church.html
#LKA #SriLanka #Lanka #Attacks #ChurchAttacks #Explosions #Curfew #Blast #BombBlast #Killed #Colombo #Batticaloa #Negombo #TerrorAttack #SocialMediaBan #News
https://newsigaram.blogspot.com/2019/04/attacks-at-sri-lankan-hotels-and-church.html
#LKA #SriLanka #Lanka #Attacks #ChurchAttacks #Explosions #Curfew #Blast #BombBlast #Killed #Colombo #Batticaloa #Negombo #TerrorAttack #SocialMediaBan #News
எத்தகைய இழப்பு.... மன வேதனை அடங்கவில்லை.
ReplyDeleteகடவுள் ஒருவர் இருக்கின்றார்.
ReplyDeleteஎல்லாமவர் செயல்.
காலம் பதில் சொல்லும்