அன்னைத் தமிழ்


வணக்கம் அன்பு ரசிகர்களே. முகநூலில் "எழுத்தோலை பக்கம்" நடாத்தும் புத்தாண்டுக் கவிதைப் போட்டி - 2013 க்காக எழுதப்பட்ட கவிதை இது. அவர்கள் வழங்கியுள்ள மூன்று தலைப்புகளில் "அன்னைத் தமிழின் இன்றைய நிலை" என்ற தலைப்புக்காக இக்கவிதை எழுதப்பட்டுள்ளது. தரப்பட்ட மூன்று தலைப்புகளிலும் எழுதுதல் கட்டாயமாகும். இக்கவிதைப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் முகநூல் வாயிலாக "எழுத்தோலை பக்கம்" இனை அணுகவும். இதோ கவிதை.

அன்னைத் தமிழின் இன்றைய நிலை 

[அன்னைத் தமிழ் - நான் இட்ட தலைப்பு]


மம்மியென்பார் டாடியென்பார் 
மரியாதை அதில்தான் என்பார் 
அன்னைக்குக் கிழிந்த ஓலைப் பாயும் 
அந்நிய மொழிக்கு அரியணையும் தருவார்.


சொல்லுக்குச் சொல் சுகமென்பார் 
செந்தமிழின் சுவையறியார் 
அக்கரைக்கு இக்கரைப் பச்சை 
அந்நிய மொழியில் ஏன் இத்தனை இச்சை?


ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் 
செய்ததுதான் சாதனை என்பார் 
தொல்காப்பியமும் புறநானூறும் 
தொலையட்டும் என்பார் 


தாய்ப்பாலுடன் சேர்த்து 
தமிழறிவும் புகட்டிடுவீர் தாய்மாரே 
அன்னைக்குப் புரியாதோ அன்னையின் வேதனை 
அன்னைத்தமிழுக்கு ஏன் இத்தனை சோதனை 


கம்பனும் பாரதியும் கவிசொன்ன தமிழ் 
கல்லையும் கரைக்கும் திருவாசகம் தந்த தமிழ் 
வாழ்வற்ற வாழ்வு இங்கு வாழ்வதும் ஏனோ 
வள்ளுவன் வளர்த்த தமிழ் வழக்கொழிந்து போயிடுமோ 


அபயக்குரல் எழுப்புகிறாள் தமிழன்னை 
அவள்துயர் துடைக்க எழுச்சிகொள் தமிழா 
இருளே கதியென்று இருந்தது போதும் தமிழுக்கு 
இதுதான் விடிவென்று உணர்ந்தே எழுந்திடுவோம்!

அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. கவிதைகள் அனைத்தும் இன்றையத் தமிழின் நிலைமையையும் நிலையாமையையும் அழகாக உரைக்கிறது.
    வாழ்த்துக்கள் பாரதி.

    ஆமாம்.... ஏன் நீங்கள் என் தளத்திற்குள் வருவதில்லை. ஒரு முறை வந்து பாருங்களேன்.

    http://arouna-selvame.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. பதிவிடுவதில் மூழ்கியிருந்த படியால் தான் வரவில்லை. இதோ இப்போதே வருகிறேன்.

      Delete
  2. தேவையான தருணம் தான் தேடி தலைப்பிடும் வானுயர்ந்து எழும்பி நிற்கும் இமயமலை
    சிகரம்போல் தான் வளர வாழ்த்துகிறேன் தமிழுக்கிந்த தலைப்பு வேண்டும் ஐயா தரநியூரும் மகிழ்ச்சிகொள்ள தூண்டுமையா

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமாக கவிதை நடையில் வாழ்த்தியமைக்கு நன்றிகள். நிச்சயமாய் தமிழுக்காய் இன்னும் உழைப்பேன்.

      Delete
  3. மிக அருமையானது. முதலில் உள்ள எழுத்துகள் தெரியவில்லை ஐயா. அதை மாற்றம் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. சரிபார்க்கிறேன்.

      Delete
  4. இன்றைய தமிழின் நிலை அறியத்தந்த சிகரமான பகிர்வுகள்

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!