முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18!
முள்ளிவாய்க்கால்!
ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாள். ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். தர்மத்தின் வாழ்வுதனை மீண்டும் சூது கவ்விய நாள்!
மே 18!
18.05.2009
தமிழர்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். சர்வதேசத்தை முழுமையாக ஒவ்வொரு தமிழனுக்கும் புரிய வைத்த நாள்.
30 வருட கால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இம்மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள்.
![]() |
Image Credit: Vikatan.com |
தமது இன விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மட்டுமே தமிழர்களால் நினைவுகூர முடிந்திருக்கிறது.
பத்தாண்டுகள் கடந்து விட்டன. தமிழர்களுக்கான நீதியோ அல்லது உரிமைகளோ கிடைப்பதற்கான வழிவகைகளையோ அல்லது அதற்கான அறிகுறிகளையோ சற்றும் காணவில்லை.
உறவுகளை இழந்தவர்கள் உணர்வுகளை இழந்து நடைப்பிணமாய் வாழ்ந்து வருகிறார்கள். காணாமல் போன உறவுகள் இன்றாவது வந்துவிட மாட்டார்களா என்று சில உறவுகள் காத்திருக்கின்றனர்.
தமிழரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். கடந்த காலங்களைப் போல எதிர்காலத்திலும் தமிழர்களை அடக்கி ஆள நினைக்கக் கூடாது.
காணாமல் போனவர்கள் கண்டுபிடித்துத் தரப்பட வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். யுத்தத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உள்நாட்டு சுயாட்சிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
காலம் தமிழர்களுக்கான நீதியை வழங்கும் என்பதே ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இறந்து போன உறவுகளின் வலிகளைச் சுமந்து வாழ்ந்து வரும் உறவுகளின் கண்ணீருக்கான விலையை காலம் செலுத்தும். அப்போது உலகமெங்கும் ஒடுக்கப்பட்டு வாழும் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படும்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18!
https://newsigaram.blogspot.com/2019/05/mullivaikkal-may-18-tamil-genocide-day-remembrance.html
#Justice4TamilGenocide #SriLanka #LKA #LK #May18TamilGenocide #Tamil #genocide #may_18_tamil_genocide #May_18
#Genocide #Mullivaikkal #TamilGenocideDay
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்