விதியை நம்புகிறீர்களா?
'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள்.
அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா? அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன? நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்!
பதிவின் தலைப்பு : விதியை நம்புகிறீர்களா?
தூறல் - 02
வலைப்பதிவு : தூறல்கள்
வெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.
பதிவின் தலைப்பு : விதியை நம்புகிறீர்களா?
தூறல் - 02
வெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.
உண்மை
ReplyDeleteவிதியை புறந்தள்ளுவோம்
மதியை நம்புவோம்
அருமையான தகவல்
ReplyDeleteவிதியை மதியால் வெல்லலாமுங்க...
உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
நமது நாட்டில் விதியை நம்புவர்கள் மத்தியில் காலம் தள்ளுவது மிகவும் கடினமான செயலாக உள்ளது.நல்ல செய்தி.பலருக்கும் பகிர வேண்டிய தகவல்
ReplyDeleteநமது நாட்டில் விதியை நம்புவர்கள் மத்தியில் காலம் தள்ளுவது மிகவும் கடினமான செயலாக உள்ளது.நல்ல செய்தி.பலருக்கும் பகிர வேண்டிய தகவல்
ReplyDelete