சிகரம் பாரதி 32 / 50 - கைப்பேசிகளும் நாமும்!



வணக்கம் வலைத்தள வாசகர்களே! வாட்ஸப் இன் புதிய பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல நாட்களாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த வசதி வந்தே விட்டது. மேலும் மடிக்கணினிகளிலும் இப்போது வாட்ஸாப்பை பயன்படுத்த முடியும். ஆனால் கணினியில் பயன்படுத்தும் அதே நேரம் கைப்பேசியும் இணைய இணைப்பில் இருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் கணினியில் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது. குரல் பதிவுகளை அனுப்ப முடியும். வைபர், இமோ போன்றவற்றின் கணினிப் பதிப்பில் வீடியோ அழைப்பு வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அல்லோ, டுவோ, ஹேங்அவுட்ஸ், வாட்ஸப், வைபர், இமோ, பேஸ்புக் மெசேன்ஜர், ஸ்கைப் என எட்டு  செயலிகள் என் கைப்பேசியில் உள்ளன. இதில் கூகிள் அல்லோ எழுத்துக்களையும் குரல் பதிவுகளையும் மட்டுமே பரிமாற்றுகிறது. கூகிள் டுவோ வீடியோ அழைப்புகளை மட்டுமே அனுமதிக்கிறது.  மற்ற அனைத்திலும் எழுத்து, குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு போன்ற வசதிகள் உள்ளன. இந்த அனைத்து செயலிகளுக்குமிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. நான் பயன்படுத்துவது எட்டு செயலிகள் என்றால் இன்னும் பல செயலிகள் சந்தையில் உள்ளன. அவற்றையும் சேர்த்தால் எப்படியும் நூறை தாண்டும். 

ஒவ்வொரு நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஒவ்வொரு செயலியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு செயலியை தேர்ந்தெடுத்துக் கொண்டால் மற்ற அனைத்தையும் ஒதுக்கிவிடலாம். இதனால் நமக்கு நேரம், இணைய பாவனை அளவு, கைப்பேசியில் நினைவகம் என எல்லாம் மிச்சமாகும். 

இது தவிர பேஸ்புக், டுவிட்டர், கூகிள் பிளஸ் என்று சமூக வலைத்தளங்கள் தனி ரகம். எல்லாம் ஒரே குடையின் கீழ் கிடைத்தால் நலம். ஆயிரத்தெட்டு செயலிகள் நம் கைப்பேசியில் குடியிருப்பதால் கைப்பேசியின் நினைவக அளவு வெகுவாகக் குறைவடைந்து விடுகிறது. இதனால் நினைவக அட்டை வாங்க தனியாக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. 

செயலிகள் தான் இப்படியென்றால் கைப்பேசிகள் தினம் தினம் புதிது புதிதாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஐ போன் ஒரு வருடத்திற்கு இரண்டு கைப்பேசிகளையே வெளியிடுகிறது. அதே போல ஏனைய நிறுவனங்களும் ஐந்து அல்லது ஏழு வரையான கைப்பேசிகளை வெவ்வேறு விலை மட்டங்களில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வெளியிட்டால் போதுமானதாக இருக்கும். ஆனால் நிலை அப்படி இல்லை. இன்று 30,000 ரூபாய்க்கு வாங்கும் கைப்பேசியின் அடுத்த வார விலை 20,000 ஆக இருக்கும். 30,000 ரூபா விலைக்கு இன்னுமொரு புதிய கைப்பேசி வெளியாகியிருக்கும். கடுமையான வியாபாரப் போட்டியே இவற்றுக்கெல்லாம் காரணம். 

மக்களாகிய நாம் தெளிவாக இருக்க வேண்டும். நாளொரு கைப்பேசியும் பொழுதொரு செயலியுமாகத் திரிந்தால் நம் நிலை அதோ கதிதான். எந்தக் கைப்பேசியைப் பாவிக்க வேண்டும், எவ்வளவு காலத்திற்கு பாவிக்க வேண்டும், நமக்கு அவசியமான செயலிகள் எவை என்பதில் நமக்கு தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கைப்பேசி நிறுவனங்களின் வணிகப் போட்டியில் பாதிக்கப்படுவது நாமாகத்தான் இருப்போம்!

Comments


  1. "நாளொரு கைப்பேசியும்
    பொழுதொரு செயலியுமாகத் திரிந்தால்
    நம் நிலை அதோ கதிதான்." என்பதை
    மறத்தல் ஆகுமோ?

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!