சிகரம் பாரதி 13/50 (கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து!)
2016.10.18
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் கூட்டு தொழிலாளர் சங்கம் ஆகிய தோட்ட தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இன்று இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதேவேளை, இந்த ஒப்பந்தத்தின் படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கவும், தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது குளவித் தாக்குதலுக்கு இலக்கானால் மீள பணிக்கு வரும் வரை அவர்களுக்கான வேதனத்தை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டு ஒப்பந்தத்தின் படி அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகும். மேலும் வரவுக் கொடுப்பனவு ரூ 60, விலை பகிர்வுக்கான கொடுப்பனவு ரூ 30 , உற்பத்தியை அதிகரிப்பதற்கான கொடுப்பனவு ரூ 140 என மொத்தம் 730 ரூபாவாக அமைகிறது. முன்னைய சம்பளமாக ரூ 620 இல் இருந்து ரூ 110 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் தமக்கு 1000 ரூபாவே வேண்டும் எனக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ரூபாவைப் பெற்றுத் தரும் வரை தாம் ஓயப் போவதில்லை என இ.தொ.கா வெட்டி வீராப்பு பேசி வருகிறது. மக்கள் விழித்தெழ வேண்டிய தருணம் இது!
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்