தப்பிப் பிழைத்த சரித்திரங்கள்
வான நதியில் நீந்தி வருகிறது
காலம் எனும் பெரு மீன்
நீ சிறியவன் தானே என
மனிதனெனும் பூனையைப்
பழிக்கிறது அது
காலத்தை விழுங்கி விடத்
துடிக்கும் மனிதன்
மனிதனை வென்றுவிட்ட
பெருமிதத்தில் காலம்
மனிதன் வேறு காலம் வேறா?
இல்லை, இரண்டும் ஒன்றா?
பூனையின் இரை மீன்
மீனின் தவம் தப்பிப் பிழைத்தல்
பேரழிவுகளில் இருந்து
தப்பிப் பிழைத்தவை தானே
இன்றைய சரித்திரங்கள்?
கவிதை நன்று.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete