கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05

பகுதி - 01

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01


பகுதி - 02


பகுதி - 04


பகுதி - 05


நந்தினியின் மணமகள் தோழியாக வந்தது திவ்யாதான் என்பதைச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து மௌனமானான் சுசி. நான் தொடர்ந்து பேசலானேன்.

"அது மட்டுமில்ல. நாங்க வெளில வர்றப்ப கதவுல சாஞ்சி நின்னுக்கிட்டு அவ பார்த்த பார்வ என்னை இன்னமும் என்னமோ பண்ணுதுடா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் சுசி."

"அது எப்படிடா முடியும்?" சுசி தன் மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான்.

"அவ என்னை நாளைக்கு எங்க வழமையான இடத்துல சந்திக்க வரச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கா....


"திவ்யாவா இது?" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான்.

"ம்...... அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல."

"அன்னிக்கு பிரிஞ்சிருவோம்னு முடிவெடுத்ததும் அவதான். இன்னிக்கு பேசணும்னு சொல்லிருக்கதும் அவதான்."

சுசி இப்படிச் சொன்னதும் திவ்யாவுடனான கடைசிச் சந்திப்பு மனதில் வந்து நிழலாடியதனால் விழியோரமாய் கண்ணீர் வந்து சற்று எட்டிப் பார்த்தது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டேன். என் நிலை கண்டு எதுவும் கூற முடியாமல் சிறிது மௌனம் காத்தான் சுசி.

சில நிமிட இடைவெளிகளின் பின் "ஒன்ணும் யோசிக்காத. நடக்குறத அது பாட்டுல விடு. நாளைக்கு காலைல கிளம்பத் தயாராயிரு. ஜீவாவோட காரை எடுத்துக்கிட்டு வாறேன். நாம போகலாம். சரியா?" என்று கேட்டான் சுசி.

'சரிடா' என்பதாக தலையை மட்டும் ஆட்டினேன். பேசினால் எங்கே அழுதுவிடுவேனோ என்று பயமாய் இருந்தது. சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சுசி "வர்றேண்டா" என்று என் தோளைத் தொட்டு சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற பின் திவ்யாவின் யோசனைகளில் மூழ்கியிருந்த என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. கீழ்த்தளத்திலிருந்து அம்மாதான் என்னை அழைத்தார்.

"ஜெய்... எங்கப்பா இருக்க....?"

"இதோ வர்றேம்மா......" என்று குரல் கொடுத்தவாறே சென்றேன். 

"இந்த டீய கொஞ்சம் குடிச்சிட்டுப் போப்பா...." என்றவாறே அம்மா என் கைகளில் தந்த தேநீரை எடுத்துக் கொண்டு எனதறைக்குள் சென்று பருக ஆரம்பித்தேன். அம்மாவின் தேநீர் ஒரு புது உற்சாகத்தை வழங்கியது போலிருந்தது. சற்றே சிந்தனைகளில் இருந்து விடுபட்டவனாய் காணப்பட்டேன். அப்போது 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தின் 'போ... போ... நீ எங்க வேணா போ...' என்ற பாடலை என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. ஒரு புதிய இலக்கம். தேநீர்க் கோப்பையை மேசை மேல் வைத்துவிட்டு யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் பதிலளித்தேன்.


"ஹலோ.."

மறுமுனையில் "ஹலோ.." என்றது ஒரு இனிய பெண் குரல். பரிச்சயமில்லை என்று தீர்ப்பளித்தது மனம்.

"நீங்க.....?"

"நந்தினி"

"நந்தினியா?"

"என்ன பகல் தான் வந்து பார்த்துட்டு போனீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"
"ஒ... நீங்களா?"

"ஏன் எடுக்கக் கூடாதா ?"

"அதுக்கில்ல.... என் நம்பர்...... எப்படி...?"

"அதுவா? உங்க ப்ரண்டு தந்தாங்க."

"ப்ரெண்டா ? யாரது?"

"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க? திவ்யா உங்க ப்ரெண்டு இல்லையா?"

நந்தினி இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் எதுவும் சொல்லவில்லை.

"...................................."

"ஹலோ..."

சற்று சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"ம்.... திவ்யா தான் கொடுத்தாங்களா?"

"ஆமா"

"உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" தயங்கியவாறே கேட்டேன்.

"கேளுங்க"

"திவ்யாவ உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இத கேக்க ஏன் தயங்குறீங்க? திவ்யா என் அக்கா."

"அக்காவா?" சற்றே அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டேன்.

"ஏன்? இருக்கக் கூடாதா ?"

"திவ்யாவுக்கு  அப்படி யாரும் இல்லையே......."

"நா என்ன பொய்யா சொல்றேன்?"

"ஆமா. நிச்சயமா அப்படி யாரும் இல்ல."

"சரி.... சரி..... கோவப்படாதீங்க.... திவ்யா என் அத்தைப் பொண்ணு. போதுமா?"

நான் பேசவில்லை. இப்போது என் மனதுக்குள் இருந்த குழப்பம் அதிகமாகியிருந்தது. திவ்யா ஏன் இவளுக்கு என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்? திவ்யாதான் கொடுத்தாளா? நந்தினி சொல்வது போல திவ்யா உறவுக்காரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் மனம் யூகித்தது. அவளிடமிருந்து ,மேலதிகமாக ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று அறிந்து கொள்ளும் நோக்குடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.......

                         ********************************************************

                                         முக்கிய அறிவித்தல்.

எனது அன்பான வலைப்பதிவு வாசகர்களிடம் சிறிய - முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க எதிர்பார்க்கிறேன். விடயம் என்னவெனில், எனது பாடசாலைக் கால நண்பனான 'அருண்பிரசாத்' தற்போது வலைப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளான். "வரிக்குதிரை" எனும் மகுடம் கொண்ட அவ்வலைப்பதிவினை சென்று ஒருமுறை வாசித்து தளம் பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களையும் வழங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
                       
                                    **********************************************************

Comments

  1. விறுவிறுப்பாக செல்கிறது... தொடருங்கள்...
    நண்பர் தளத்திற்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா. உங்கள் தொடர் ஆதரவு எனக்கு இன்னும் உற்சாகத்தை அளிக்கிறது. என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்.

      Delete
  2. வணக்கம் பாரதி.பாப்பம்.என்ன நடக்கப்போகுதுன்னு.சிறப்பாய் தொடர்கிறது இனிய வாழ்த்துக்கள்.நண்பனை சந்திக்கிறேன் அவர் தளத்தில்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர்ச்சியான வருகை எனக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது. நன்றி தோழி. நண்பனுக்கும் ஆதரவு நல்கியமைக்கு நன்றிகள். சந்திப்போம் தோழி.

      Delete
  3. அழகாக சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறீர்கள்
    நாங்களும் சுவரஸ்யமாகத் தொட்ர்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... சிக்கல் வந்தால் தானே தீர்வு வரும்? தொடர்ந்து இணைந்திருங்கள்.

      Delete
  4. என்ன... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தகவலுக்கு நன்றி நண்பா. வலைச்சரம் பார்த்தேன். அவர்களுக்கும் நன்றிகள்.

      Delete
  5. அருமையான தொடக்கமும், விறு விருப்புடன் செல்கிறது... தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் தாமதமாகவே வந்திருக்கிறீர்கள். ஆயினும் தங்கள் தொடர்ச்சியான வருகைக்கு நன்றிகள். நன்றி தோழா.

      Delete
    2. உண்மைதான், சிறு தாமதம் இல்லை, அதிகமாகவே காலம் தாழ்த்திதான் வந்துள்ளேன், என்ன செய்ய? எனது நெட்வொர்க் கடந்த சில வாரங்களாக தொந்தரவுடனே இருந்தது. அதனால் தான் இந்த பெரும் தாமதம். எனக்கு மட்டும் முழு கதையையும் அனுப்பி வைத்து விடுங்களேன். வியாழன்வரையெல்லாம் பொறுத்திருப்பது பெருந்துன்பமாய் விடுகிறது.

      Delete
    3. அது தான் காரணமா? பரவாயில்லை. எல்லோருக்கும் ஏதோவொரு விதத்தில் சிக்கல் வந்துகொண்டு தானே இருக்கிறது? கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது எனக்கே தெரியாது. குறிப்பிட்ட வாரத்திற்கான கதையை மட்டுமே எழுதி வெளியிடுவேன். முடிந்தால் ஒன்று செய்யலாம். கதையின் அடுத்த பாகத்தை ஊகித்து நீங்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அதை நான் பிரசுரித்துக் கொள்கிறேன். (ஆனா பதிவில் உங்க பேர போட மாட்டேன்) எப்படி?
      ஆனால் அந்தப் பொறுமை தான் கதையின் வெற்றியே. இல்லையா நண்பரே?

      Delete
    4. உண்மைதான், பொறுமை தான் கதையின் வெற்றி. எப்போதுமே பொறுமையாக இருக்க முடிவதில்லையே..

      Delete
    5. இதோ இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே. எனக்கும் கதையைத் தயார் செய்ய கால அவகாசம் தேவை இல்லையா? ஆகவே சற்றுப் பொறுத்திருப்போம் உள்ளமே.

      Delete
  6. யார் அவர் வரிக்குதிரை, தாங்கள் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களே?

    ReplyDelete
    Replies
    1. அவர் எனது பால்ய வயதிலிருந்தே என்னோடு ஒன்றாகக் கல்வி கற்ற இணை பிரியா தோழர். அவருக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன ஆதரவு. அவ்வளவுதான். சந்திப்போம் உள்ளமே.

      Delete
  7. தொடருங்கள்... நானும் உடன்வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  8. arumaiyaga selkirathu thodarungal

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!